இவரை வழிபட்டால் காதல் கைகூடும்! அதிசய விநாயகர் கோவில் எங்குள்ளது தெரியுமா?

Mumbai Titwala Ganapathy and temple
Mumbai Titwala Ganapathypinterest & famous temples of india
Published on

அனைவரும் அறிந்த 'மும்பை சித்தி விநாயகர்', மும்பை மாநகரின் நடுவே பிரபாதேவியிலும், 'டிட்வாலா கணபதி', மும்பை தானே மாவட்டத்திலுள்ள டிட்வாலா-விலும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

இப்போது நாம் காணப்போகும் டிட்வாலா கணபதி கோவில், 'மகா கணேஷ் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. டிட்வாலா கணேஷ் கோவில், புராணப் பெருமை வாய்ந்த கோவிலாகும்..

டிட்வாலா கணேஷ் கோவிலின் சுவாரஸ்யமான கதை:

டிட்வாலா கணேஷ் கோவிலின் கதை, பண்டைய இந்து புராணங்களில் வேரூன்றியுள்ளது. புராணத்தின் படி, இந்தக் கோயில் மகாபாரத காலத்தை சேர்ந்த 'கண்வ' என்ற முனிவருடன் தொடர்புடையது.

ஆழ்ந்த பக்தி மற்றும் தவத்திற்காகப் புகழ் பெற்றவர் கண்வ முனிவர். அவரது மகள் சகுந்தலா, டிட்வாலா கணபதியை பிரார்த்தனை செய்ததாகவும், மன்னர் துஷ்யந்த் டிட்வாலா கோவிலில் வைத்து சகுந்தலாவை மணந்தார் என்றும் கூறப்படுகிறது.

கண்வ முனிவருக்கு, சுதாமா என்ற சீடர் இருந்தார். சுதாமா ஒரு நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள மாணவர். அவர் விநாயகர் மீது பக்தி கொண்டிருந்தார்.

சுதாமாவின் பக்தியால் ஈர்க்கப்பட்ட கண்வ முனிவர், அவருக்கு ஒரு தனித்துவமான பணியை வழங்க முடிவு செய்தார். புனிதமான தபி நதி என்று நம்பப்படும் அருகிலுள்ள நதியிலிருந்து, ஒரு சிறிய விநாயகர் சிலையை கொண்டு வருமாறு சுதாமாவிடம் கூறினார்.

சுதாமா, தனது குருவின் அறிவுரைகளை விடாமுயற்சியுடன் பின்பற்றி ஆற்றுக்குச் சென்றார். சிலையைத் தேடிக் கொண்டிருந்தபோது, ஆற்றங்கரையில் ஒரு பெரிய எறும்புப் புற்றைக் கண்டார். ஆர்வத்துடன் அதனருகே செல்கையில், எறும்புப் புற்றிலிருந்து எழுந்த அழகிய விநாயகர் சிலையைப் பார்த்தார். இது தெய்வீக வெளிப்பாடு மற்றும் விநாயகர் தானே உருவாக்கிய தெய்வீகத் திட்டம் என்பதை சுதாமா உணர்ந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்:
குடும்பப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் இரட்டைப் பிள்ளையார் வழிபாடு!
Mumbai Titwala Ganapathy and temple

மகிழ்ச்சியில் மூழ்கிய சுதாமா, எறும்புப் புற்றிலிருந்து சிலையை கவனமாக மீட்டு கண்வ முனிவரிடம் கொண்டு வந்தார். இந்த அதிசயத்தைக் கண்டதும், முனிவரும் சுதாமாவும் தெய்வீக பேரின்பத்தால் நிறைந்தனர். சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே, விநாயகர் கோயிலை நிறுவ இருவரும் முடிவு செய்தனர்.

ஆற்றங்கரையிலிருந்து எடுக்கப்பட்ட அசல் கணேசர் சிலை, கண்வ முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சில வருடங்களுக்குப் பிறகு, அருகாமையில் ஏரி ஒன்று கட்டப்படும்போது, அசல் கணேஷ் சிலை காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இப்போது இருக்கும் கணேஷ் சிலை மாதவ்ராவ் பேஷ்வேயால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த விநாயகர், 'வரவிநாயக்' என்றும் அழைக்கப்படுகிறார்.

பேஷ்வாக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் உள்ளே 90 அடிக்கு 45 அடி கொண்ட பிரதான மண்டபத்தின் வழியாக காணக் கூடிய பல காட்சியகங்கள் உள்ளன.

3.5 அடி உயரமுள்ள உயர்த்தப்பட்ட கல்லின் மீது கோவில் அமைந்துள்ளது. பளிங்குத் தரையைக் கொண்டது. அஷ்ட விநாயகர் மற்றும் சிவலிங்கத்தின் சந்நிதிகள் உள்ளன. கோவில், கலு நதியால் அழகாக சூழப்பட்டுள்ளது. நதியில், படகு சவாரி செய்யும் வசதி இருக்கிறது.

பிரபலமான நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நம்பிக்கையின்படி, ஒருவர் டிட்வாலா மகா விநாயகரை மனதார வேண்டி வணங்கினால், விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள முடியும். மேலும், திருமண மோதல்கள் தீர்க்கப்படும் எனக் கூறப்படுகிறது. அது உண்மையும் கூட.

தெய்வீக இருப்பு மற்றும் விருப்பங்கள் நிறைவேறும் என்கிற நம்பிக்கை கொண்ட பக்தர்களுக்கு, டிட்வாலா கணேஷ் கோயில்,ஒரு குறிப்பிடத்தக்க புனித யாத்திரைத் தலமாக உள்ளது. இந்தக் கோயில் ஆன்மீக ஆறுதல் மற்றும் பக்தியின் இடமாகவும், தொலைதூரத்திலிருந்தும் பக்தர்களை ஈர்க்கும் இடமாகவும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
மஞ்சள் பிள்ளையாரை முதலில் வணங்குவதன் ரகசியம்!
Mumbai Titwala Ganapathy and temple

டிட்வாலா கணேஷ் கோயிலின் கதை, தெய்வீக தலையீட்டையும், பக்தர்களை ஆசீர்வதிக்க விநாயகர் இருப்பின் வெளிப்பாட்டையும் காட்டுகிறது. பக்தியுடனும் நம்பிக்கையுடனும் தன்னை அணுகுபவர்களுக்கு விநாயகர் எப்போதும் இருக்கிறார் மற்றும் தனது தெய்வீக அருளையும் ஆசீர்வாதங்களையும் வழங்குகிறார் என்ற நம்பிக்கையை இது வலுப்படுத்துகிறதாக அமைந்துள்ளது.

டிட்வாலா கணேஷ் ஜி யைக் கண்டு வழிபட, வருடம் முழுவதும், சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அங்காரகி, கணேஷ் சதுர்த்தி விழா சமயம், டிட்வாலா கணபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com