

பொதுவாகவே வீட்டில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து ஸ்நானம் செய்து வீட்டில் விளக்கு ஏற்றுவது மிகவும் அதிர்ஷ்டமான பலன்களை கொடுக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை.
இந்த நேரத்தில் விளக்கு ஏற்றும்போது தேவர்களின் ஆசிர்வாதம் தெய்வங்களின் அருள் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது.
பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு இணையாக இருப்பது சூரியன் மறையும் நேரமாக இருக்கும் சந்தியா காலம் ஆகும். கிட்டத்தட்ட சந்தியா காலமும் பிரம்ம முகூர்த்தத்துக்கு இணையானதுதான்.
சந்தியா காலம் என்பது மாலை வேளையில் மூன்றிலிருந்து ஆறு மணி வரை கொண்ட காலமாகும். இதில் இறுதியாக இருக்கும் ஒரு மணி நேரம் மிகவும் விசேஷமானது. மாலையில் தினமும் ஐந்திலிருந்து ஆறு மணிக்குள் ஆக விளக்கேற்றுவது சாஸ்திர நியதி. வெள்ளிக்கிழமைகளில் ஆறு மணிக்கு மேல் தான் சிலர் விளக்கேற்றுவார்கள். இப்படி செய்வதைவிட ஆறு மணிக்குள்ளாகவே நாம் விளக்கேற்றிவிடுவது மிக மிக நல்லது.
ராஜயோகம் தரும்
தினமும் ஐந்திலிருந்து ஆறு மணிக்கு பூஜை அறையில் மூன்று விளக்குகளை வைத்து வழிபடுவது, ராஜ யோகத்தை கொடுக்கும் .
சந்தியா கால நேரத்தில் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் அத்தனை தெய்வங்களின் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும்.
தினமும் மாலை வேளையில் ஐந்து மணியிலிருந்து இறை வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தால் உங்களுக்கு இருக்கும் அத்தனை கஷ்டங்களும் நீங்கி நல்ல விஷயங்கள் நடக்க துவங்கும். இதனை நீங்கள் செய்ய செய்ய உங்களுக்கு அவற்றின் மகத்துவத்தை உணரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இப்படி சந்தியா கால வேளையில் ஏற்றும் விளக்கானது மஞ்சள் திரியை கொண்டு ஏற்றுவது மிக மிக நல்ல பலனை கொடுக்கும். ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் ஒவ்வொரு நிறத்திலும் திரி ஏற்றுவது வழக்கம்.
அந்த வகையில் மஞ்சள் நிற திரியானது துன்பங்களை போக்கக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. சாதாரண திரியில் மஞ்சளில் தேய்த்து காயவைத்து பின்னர் பயன்படுத்தினால் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
பிரம்ம முகூர்த்தத்தில் எழுபவர்கள் ஐந்து விளக்கல் மஞ்சள் திரியை கொண்டு தீபம் ஏற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த இரண்டு வேளைகளும் இறைவழிபாட்டிற்குரிய மிக விசேஷமான காலம் ஆகும்.
கோவில்களில் எந்த கிழமைகளில் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும். பலன்கள்.
ஞாயிற்றுக்கிழமை – தீபம் ஏற்றுவதால் இதயம் வயிறு ரத்தம் நரம்பு சம்பந்தமான நோய்கள் பெரியோர்களை எதிர்த்து வாக்குவாதம் பெற்ற பூஜைகளை விட்டு விடுவதால் ஏற்படும் துன்பங்கள் ஆகியவை விலகும்.
திங்கட்கிழமை - தீபம் ஏற்றுவதால் மனக்கவலை மனோவியாதி நிம்மதியின்மை பயம் தாழ்வு மனப்பான்மை குழந்தைகளுக்கு ஏற்படும் குறை சரும நோய்கள் இவை விலகும்.
செவ்வாய் கிழமை - தீபம் ஏற்றுவதால் பெண்களுக்கு விவாகம் தடைபடுவது, செவ்வாய் தோஷம், பிடிவாதம்,ஜாதகத்தில் கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் ஆகியவை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி.
புதன்கிழமை - தீபம் ஏற்றுவதால் படிப்பில் தடை, ஞாபக மறதி, பாடங்களில் ஆர்வம் இன்மை, மாணவர்களுக்கு சகவாச தோஷம், தீராத நோய்கள் ஆகியவை விரிகும்.
வியாழக்கிழமை - தீபம் ஏற்றுவதால் ஆண்களுக்கு விவாகம் தடைபடுவது, குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை புத்திர பாக்கியம், குழந்தைகளால் ஏற்படும் பிரச்னை ஆகியவை விலகும்.
வெள்ளிக்கிழமை - தீபம் ஏற்றுவதால் கணவன் மனைவி நெருக்கம் பாதிக்கப்படுதல், கடன் தொல்லைகள், மாங்கல்ய பலம் / பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் மனவேதனைகள், பணவிரயம் நீங்கும்.
சனிக்கிழமை - தீபம் ஏற்றுவதால் ஆயுள், ஆரோக்கியம், தீராத மொழிகள், தொழில் பிரச்னைகள், பில்லி சூனியம், செய்வினை தோஷங்கள், வேலையில் நிரந்தரம் இன்மை, ராகுவால் ஏற்படும் தோஷங்கள் போன்றவை விலகும்.
இத்தகைய மகத்தானவிளக்கின் தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் 'தீபலட்சுமி நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம்.