சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுத் தரும் சிவ அபிஷேகப் பொருட்களும் பலன்களும்!

Benefits of Shivalinga Abhishekam
Shivalinga Abhishekam
Updated on

பெரும்பாலானோர் ஒவ்வொரு பிரதோஷ வழிபாட்டுக்கும் சிவன் கோயில்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பர். அதுபோன்ற சமயங்களில் சிவ அபிஷேகத்துக்கான பொருட்களை வாங்கிக் கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருப்பர். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த பால், பன்னீர், சந்தனம், வில்வ பத்ரம் என அபிஷேக மற்றும் அலங்கார திரவியங்களை வாங்கிக் கொடுக்க அதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

1. விபூதி அபிஷேகம்: விபூதியால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் சந்தோஷமான வாழ்க்கையும், மோட்சமும் கிடைக்கும்.

2. கரும்புச்சாறு அபிஷேகம்: ஈசனை கரும்புச்சாறினால் அபிஷேகம் செய்ய, நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.

3. வலம்புரி சங்கு அபிஷேகம்: வலம்புரி சங்கில் மகாலட்சுமியும், குபேரனும் வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது. எனவே, வலம்புரி சங்கு கொண்டு ஈசனுக்கு அபிஷேகம் செய்ய சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
வேடர் குல மகள் வள்ளிக்கு சிறப்பு சேர்க்கும் முருகத் தலங்கள்!
Benefits of Shivalinga Abhishekam

4. பஞ்சாமிர்த அபிஷேகம்: பல வகையான பழங்கள், தேன், கல்கண்டு ஆகியவற்றை கலந்து பஞ்சாமிர்தம் செய்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய  உடலும் உள்ளமும் வளம் பெறுவதுடன் வலிமையும் பெறலாம்.

5. தேன் அபிஷேகம்: தேன் கொண்டு சிவனை அபிஷேகம் செய்ய, குரல் இனிமையும், இசையில் வல்லமையும் பெறலாம்.

6. பால் அபிஷேகம்: பால் கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்ய நோய் நொடிகள் நீங்கி, நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

7. தயிர் அபிஷேகம்: தயிர் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்ய மழலைச் செல்வங்களைப் பெறலாம்.

8. நெய் அபிஷேகம்: நெய் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய முக்தி பெறலாம்.

9. இளநீர், எலுமிச்சம் பழச்சாறு அபிஷேகம்: இவற்றைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்ய பகைவர்களின் அச்சம் நீங்கி இன்பமான வாழ்வோடு அஞ்ஞானம் நீங்கப் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
சமூகத்தில் புகழ், மதிப்பை பெருக்கும் கந்த சஷ்டி கவச பாராயணம்!
Benefits of Shivalinga Abhishekam

10. சர்க்கரை அபிஷேகம்: சர்க்கரையால் ஈசனை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மன நிறைவு உண்டாகும்.

11. பசு நெய் அபிஷேகம்: பசு நெய் கொண்டு சிவனை அபிஷேகிக்க வாழ்வு இன்பமயமாக கவலைகள் நீங்கி சந்தோஷம் நிலவும்.

12. கங்கை நீர் அபிஷேகம்: தூய்மையான கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்ய, மனக் கவலைகள் நீங்கி, பயம் நீங்கி மன நிம்மதி உண்டாகும்.

13. சந்தனம், பன்னீர் அபிஷேகம்: சந்தனம், பன்னீர் கலந்து சிவபெருமானை அபிஷேகிக்க இறைவன் மீதான பக்தி அதிகமாகும். நற்செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிவாலயங்களில் நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தின்போது அவற்றைக் காண்பதும், சிவ ஸ்துதி, பாராயணங்கள் செய்வதும் சிறந்த பலன்களைப் பெற்றுத் தரும்.

logo
Kalki Online
kalkionline.com