பக்தர்களின் வேண்டுதலை அன்னையிடம் சேர்க்கும் அற்புத கிளி: திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில் ரகசியம்!

லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய திருமீயச்சூர் தலத்தின் கிளி ஐதீகம் மற்றும் கொலுசு அற்புதத்தின் பின்னணி
திருமீயச்சூர் லலிதாம்பிகை - , Thirumeeyachur Temple
திருமீயச்சூர் லலிதாம்பிகை - , Thirumeeyachur Temple
Updated on

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே அமைந்துள்ள திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில், சக்தி வழிபாட்டில் தனிச்சிறப்பு பெற்ற புனிதத் தலமாக விளங்குகிறது. அன்னை லலிதாம்பிகை அருள்பாலிக்கும் இத்தலத்தில், பக்தர்களின் வேண்டுதலை அம்மனிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக ஒரு கிளி இருப்பதாக நம்பப்படும் ஐதீகம் மிகவும் வியப்புக்குரியது.

இத்தலத்தில் அருள்பாலிக்கும் துர்க்கை அம்மன், 'ஸ்ரீ சுகப்பிரம்ம துர்க்கை' என்று அழைக்கப்படுகிறார். எட்டு கரங்களுடன் மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தரும் இந்த அன்னையின் திருமேனியில், கையில் அமர்ந்திருக்கும் கிளியே தனித்துவமான சிறப்பாகும். பொதுவாக துர்க்கை அம்மன் சிலைகளில் கிளியை காண்பது அரிது. ஆனால், திருமீயச்சூர் தலத்தில் அந்த கிளிக்கு ஒரு முக்கியமான ஆன்மிகப் பங்கு இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

தங்கள் மனதில் உள்ள வேண்டுதல்கள், குறைகள், பிரார்த்தனைகளை துர்க்கை அம்மன் கையில் இருக்கும் கிளியிடம் பக்தர்கள் தெரிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.

பின்னர் கோயிலை வலம் வந்து, கொடிமரத்தின் நேரே நின்று லலிதாம்பிகையை தரிசிக்கும்போது, துர்க்கை சன்னதியிலிருந்து கிளி பறந்து வந்து கொடிமரத்தின் மீது அமர்ந்து, பக்தர்களின் வேண்டுதலை அன்னை லலிதாம்பிகையிடம் எடுத்துச் சொல்வதாக ஐதீகம்.

இந்தக் காட்சியை நேரில் கண்டதாக கூறும் பக்தர்கள், அந்த அனுபவம் தங்களுக்கு பக்திப் பரவசத்தையும் நம்பிக்கையையும் அளித்ததாக தெரிவிக்கின்றனர். சில ஆலயக் குறிப்புகளிலும், மாலை வேளையில் கிளி துர்க்கை சன்னதியிலிருந்து லலிதாம்பிகை சன்னதிக்குச் சென்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அபூர்வ நம்பிக்கையே, இத்தலத்தைப் பற்றிய ஆன்மிகத் தகவல்களில் பலரது கவனத்தையும் ஈர்க்கிறது.

இந்தத் திருத்தலத்தின் மற்றொரு மிகப்பெரிய சிறப்பு, லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய தலம் என்பதாகும். ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் மகிமையை உபதேசித்ததாகவும், அகத்தியர் திருமீயச்சூரில் அன்னை லலிதாம்பிகையை வழிபட்டு லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததாகவும் தலவரலாறு கூறுகிறது. அன்னை ஸ்ரீசக்ர பீடத்தில் மனோன்மணி ரூபமாக அருள்பாலிக்கும் இத்தலம், லலிதா வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றதாக பக்தர்கள் கருதுகின்றனர்.

திருமீயச்சூர் லலிதாம்பிகை - , Thirumeeyachur Temple
திருமீயச்சூர் லலிதாம்பிகை - , Thirumeeyachur Temple

அகத்திய முனிவர் அன்னையைப் போற்றி லலிதா நவரத்தின மாலையையும் பாடியதாகவும் கூறப்படுகிறது. இதனால், லலிதா உபாசகர்களுக்கு திருமீயச்சூர் மிகவும் முக்கியமான தலமாக விளங்குகிறது.

இத்தலத்தின் சிறப்பு, கிளி பற்றிய ஐதீகத்தில் மட்டும் முடிவதில்லை. அன்னை லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் அமர்ந்திருக்கும் திருக்கோலம் மிகவும் அபூர்வமானதாகப் போற்றப்படுகிறது. சிவபெருமான் மேகநாதசுவாமியாக அருள்பாலிக்கும் இத்தலம், தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும் சிறப்பு பெற்றுள்ளது. சூரியன் இத்தல இறைவனை வழிபட்டதாகவும் தலபுராணம் கூறுகிறது. இவ்வாறு சிவம், சக்தி, லலிதா உபாசனை, புராண ஐதீகங்கள் என பல்வேறு சிறப்புகளை ஒருங்கே கொண்ட திருமீயச்சூர், ஆன்மிகத் தேடல் கொண்டவர்களை ஈர்க்கும் திருத்தலமாக திகழ்கிறது.

இதையும் படியுங்கள்:
காய்ச்சல் தீர்க்கும் மிளகு ரச சாத நைவேத்தியம்! கும்பகோணம் ஜுரஹர விநாயகர் கோயில் அற்புதங்கள்!
திருமீயச்சூர் லலிதாம்பிகை - , Thirumeeyachur Temple

குறிப்பாக, தங்களது பிரார்த்தனைக்கு அன்னையின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வரும் பக்தர்களுக்கு, கிளியின் ஐதீகம் மனதில் நம்பிக்கையை விதைக்கிறது. அந்த நம்பிக்கை தலைமுறை தலைமுறையாக பக்தர்களிடையே இன்றும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

அம்பாளின் கொலுசிலும் ஒரு அற்புத ஐதீகம்!

திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்தின் மற்றொரு சிறப்பு அம்பாளின் திருப்பாதங்களில் அணிவிக்கப்படும் கொலுசுடன் தொடர்புடையதாகும். லலிதாம்பிகை அனைத்து ஆபரணங்களுடன் அலங்கரிக்கப் பட்டிருந்தாலும் ஒரு காலத்தில் அவரது திருப்பாதங்களில் கொலுசு மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

1999ம் ஆண்டு பெங்களுரைச் சேர்ந்த லலிதா சஹஸ்ரநாம பக்தையான ஒரு பெண்ணின் கனவில் அம்பாள் தோன்றி தனக்கு காலில் அணிந்துகொள்ள கொலுசு வேண்டும் என்று கேட்டதாக ஐதீகம். இதனால் பரவசமடைந்த அந்த பக்தை, அம்பாளுக்காக கொலுசு செய்து கொண்டு திருமீயச்சூர் கோவிலுக்கு வந்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அதிசயங்களும் காமதேனுவின் தல வரலாறும்!
திருமீயச்சூர் லலிதாம்பிகை - , Thirumeeyachur Temple

அங்கு அவர் கூறிய விஷயத்தை முதலில் கோயில் பணியாளர்கள் நம்பவில்லை. இருப்பினும் அவரது வேண்டுகோளின் படி அம்பாளின் திருப்பாதங்களை ஆய்வு செய்த போது,பல ஆண்டுகளாக நடைபெற்ற அபிஷேக் களின் பொருட்கள் படிந்து மறைந்திருந்த கொலுசு அணிவிக்கும் துளை இருப்பது தெரிய வந்ததாக தல குறிப்புகள் கூறுகின்றன.

இதைக் கண்டு பக்தர்களும் கோயில் பணியாளர்களும் வியப்படைந்தனர்.. பின்னர் அம்பாளுக்கு கொலுசு காணிக்கையாக செலுத்துவது இத்தலத்தின் தனிச்சிறப்பான நேர்த்திக் கடனாக கருதப்படுகிறது.

பல்வேறு சன்னதிகளும், தனிச் சிறப்பும்:

திருமீயச்சூர் கோயிலில் லலிதாம்பிகை,மேகநாத சுவாமி சன்னதிகளுடன் ரத விநாயகர்,வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளும் உள்ளன. மேலும் இந்திரன்,அக்னி , யமன், வருணன், குபேரன், அகத்தியோர் உள்ளிட்டோர் வழிபட்டதாகக் கூறப்படும் லிங்கங்களையும் பிரகாரத்தில் தரிசிக்கலாம்.

தல புராணத்தின் படி காச்யப முனிவரின் மனைவிகளான விநதை, கத்ரு ஆகியோர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட தாகவும், அதன் பலனாக விநதைக்கு கருடனும் அருணனும் மகன்களாகப் பிறந்ததாகவும் கூறப்படுகிறது... அருணன் பின்னர் சூரியனின் தேரோட்டியாக விளங்கியதாக ஐதீகம்.

இதனால் இத்தலம் சூரிய வழிபாட்டுடனும் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரம் குறிப்பிடப்பட்டுள்ளது ‌‌...சில தல குறிப்புகளில் மந்தாரையும் தலவிருட்சமாக குறிப்பிட்டப்பட்டுள்ளது‌‌.. சூரிய புஷ்கரணி இத்தலத்தின் தீராத்தமாக விளங்குகிறது.. தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும் திருமீயச்சூர் சிறப்பு பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒரே நாளில் 9 நவகிரக ஆலய தரிசனம்: பலன்களும் வழிபாட்டு முறைகளும்!
திருமீயச்சூர் லலிதாம்பிகை - , Thirumeeyachur Temple

வேண்டுதலைக் கேட்டு, அதை அன்னை லலிதாம்பிகையிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக கிளியை நம்பும் இந்த அழகிய ஐதீகம், திருமீயச்சூர் தலத்தின் தனிச்சிறப்பை மேலும் உயர்த்துகிறது. பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இந்தத் திருத்தலத்திற்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும், துர்க்கை அம்மனின் கையில் அமர்ந்திருக்கும் அந்தக் கிளி ஒரு வித்தியாசமான ஆன்மிக அனுபவத்தை அளிக்கிறது. தங்கள் பிரார்த்தனை அன்னையின் திருச்செவிகளைச் சென்றடையும் என்ற நம்பிக்கையுடன், பக்தர்கள் இன்றும் இந்தக் கிளியைப் பார்த்து மனமுருக வேண்டிக் கொள்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com