பிரம்மா இல்லாமல் முப்பெருங்கடவுள் ஆலயம்... அப்போ, அந்த மூன்றாவது பெருங்கடவுள் யார்?

Thousand Pillar Temple:
Thousand Pillar Temple:Credits: Incredible India
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

பிரம்மா இல்லாமல் முப்பெருங்கடவுள் ஆலயம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘ஆயிரம் தூண் ஆலயம்’ என்றழைக்கப்படும் ஆலயத்தில் யார் அந்த மூன்றாவது பெருங்கடவுள்?

தெலங்கானா மாநிலம், வாரங்கல் நகரில் ஹனுமக் கொண்டா என்ற இடத்தில் வரலாற்றுச் சிறப்புடைய ருத்திரேஷ்வர் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலை ஆயிரம் தூண் ஆலயம் (Thousand Pillar Temple) என்றே அழைக்கின்றனர். காகத்திய வம்ச மன்னர் ருத்ரதேவன் என்பவரால் கி.பி. 1175 முதல் கி.பி. 1324 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்டக் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் காகத்திய வம்சத்தின் கட்டடக் கலைகளில் தலைசிறந்ததாய்க் கருதப்படுகிறது.

நட்சத்திர அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த 'ஆயிரம் தூண் ஆலயம்', கல்லிலேச் செதுக்கப்பட்ட யானை வரிசையும், துளைத்துச் செதுக்கப்பட்ட ஜன்னல் அமைப்புகளும் காக்கத்திய வம்சத்தின் கட்டடக் கலையின் நுணுக்கத்திற்குச் சான்றாக உள்ளது.

கோயிலில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட தூண்கள் உள்ளன. மேலும் சிக்கலான செதுக்கப்பட்ட வடிவியல் வடிவமைப்புகளில் முக்கால்வாசி புடைப்புகள் உள்ளன. வெளிப்புறச் சுவர்களில் உள்ள சிற்பங்கள் மிகச்சிறப்பானவை. கோயிலுக்குள் நுழையும் போது, நுழைவாயிலின் இருபுறமும் யானைகளின் அழகிய சிற்பங்கள் பார்வையாளர்களை வரவேற்கின்றன.

இக்கோயிலின் உட்புறம் சிவன், திருமால், சூரியன் என்று மூவருக்கும் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவன் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது, மற்ற இரண்டு சன்னதிகள் தெற்கு மற்றும் மேற்கு நோக்கி உள்ளன. காகதீய ஆட்சியாளர்கள் சிறந்த சிவ பக்தர்களாக இருந்தனர். மேலும் அவர்கள், அதிகாலையில் சூரியனின் கதிர்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மீது பட வேண்டும் என்று விரும்பினர். திருமால் மற்றும் சூரியனின் சன்னதிகள் ஒரு சதுர வடிவ மண்டபத்தின் வழியாக சிவனுடன் இணைகின்றன. இக்கோயிலினுள் பல்வேறு தெய்வங்களுக்கான சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது கூடுதல் சிறப்பு. பிரம்மா, சிவன், திருமால் என்றழைக்கப்படும் முப்பெருங்கடவுள்களில் இங்கு பிரம்மாவிற்குப் பதில், சூரியன் மூன்றாவது பெருங்கடவுளாக இடம் பெற்றிருப்பதால், இந்தக் கோயில் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நள்ளிரவில் குருதி பூஜை நடைபெறும் காலபைரவர் ஆலயம்!
Thousand Pillar Temple:

இக்கோயில் ஆயிரம் தூண்களால் அமைக்கப்பட்டு இருந்தாலும், கோயிலின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும், நடுவிலுள்ள பெரிய சிவலிங்கத்தை எந்தத் தூண்களும் மறைக்காமல் இருக்கும் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. ஆலயத்தின் முன்புறம் ஒற்றைக் கல்லினால் ஆன பெரிய கருங்கல் நந்தி ஒன்று இருக்கிறது. தற்போதும் இந்த நந்தி பளபளப்பாய்க் காணப்படுகிறது. கோயிலின் முன்புறம் பசுமையான புல்வெளி உள்ளது.

தக்கணப் பிரதேசத்தைப் படையெடுத்த துக்ளக் மன்னரால் இந்தக் கோவில் சிதைக்கப்பட்டது. அதன் பிறகு, இக்கோயிலின் பாதிக்கப்பட்ட தூண்கள் அனைத்தும் 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயிரம் தூண் ஆலயம் இக்கோயிலை நிரந்தர உலகப் பாரம்பரிய களமாக 25 சூலை 2021 அன்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தனக்குத் தானே கோவில் கட்டிக்கொண்ட கோதா தேவி - தெலங்கானாவில் ஆண்டாள் ஆலயம்
Thousand Pillar Temple:
logo
Kalki Online
kalkionline.com