இன்று வசந்த பஞ்சமி! செய்ய வேண்டியவை, மறந்தும் செய்யக்கூடாதவை என்னென்ன...

lord saraswati
lord saraswatiimage credit - Culinary Xpress
Published on

இந்து பண்டிகைகளில், வசந்த பஞ்சமி மிகவும் முக்கியமான ஒன்றாகும். சரஸ்வதி தேவியின் பிறந்தநாளை நினைவுகூறும் வசந்த பஞ்சமி இந்து கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு, குறிப்பாக கல்வி மற்றும் கற்றல் தொடர்பான விழாக்களைத் தொடங்குவதற்கு இவ்விழா மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் சரஸ்வதி தேவியை, அறிவு, படைப்பாற்றல் மற்றும் ஞானத்திற்கான ஆசீர்வாதத்தைப் பெற வழிபடுகிறார். இவளை வழிபடுவதால் அறியாமை மற்றும் சோம்பல் நீங்கும் என்பதும் நம்பிக்கை.

பசந்த பஞ்சமி அல்லது சரஸ்வதி பஞ்சமி என்றும் அழைக்கப்படும் வசந்த பஞ்சமி நாளில் பக்தர்கள் சரஸ்வதி தேவியை பூஜை செய்கிறார்கள். வசந்த பஞ்சமி அன்று பிரம்மா சரஸ்வதி தேவியை படைத்தார் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் இந்த குறிப்பிட்ட நாளில் சரஸ்வதி அன்னையை வணங்குகிறோம்.

இந்த விழா மக மாத சுக்ல பக்ஷ பஞ்சமி திதியில் அதாவது பிப்ரவரி 2-ம்தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இந்த புனிதமான திருவிழா வசந்த காலத்தின் (வசந்த் ரிது) வருகையைக் குறிக்கிறது மற்றும் ஞானம், கற்றல் மற்றும் கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பட்ஜெட் 2025: தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் - நடுத்தர மக்கள் நிம்மதி
lord saraswati

2025 வசந்த பஞ்சமி பூஜைக்கான நல்ல நேரங்கள்

பூஜை முகூர்த்தம்: காலை 07:00 முதல் மதியம் 12:35 வரை

பஞ்சமி திதி தொடங்குவது: பிப்ரவரி 1, 2025, மதியம் 02:41 மணிக்கு

பஞ்சமி திதி முடிவது: பிப்ரவரி 2, 2025, மதியம் 12:09 மணிக்கு

பொதுவாக பஞ்சமி திதி (ஐந்தாம் சந்திர நாள்) நிலவும் போது சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்த நேரத்தில் சரஸ்வதி பூஜை செய்தால் அம்மனின் அருள் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

வசந்த பஞ்சமி அன்று, மஞ்சள் நிற ஆடை அணிவது ஆசீர்வாதத்தை குறிக்கிறது. மஞ்சள் நிறத்தை அணிவது வியாழனின் நேர்மறையான ஆற்றல்களுடன் உங்களை இணைத்து, அறிவு ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் வளர உதவுகிறது.

வசந்த பஞ்சமி இந்தியா, நேபாளம் மற்றும் பிற தெற்காசிய நாடுகளில் சடங்குகள், பிரார்த்தனைகள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுடன் கொண்டாடப்படுகிறது. மக்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, சரஸ்வதி தேவியை வணங்கி, பட்டம் பறக்கவிட்டு, பாரம்பரிய இனிப்புகளை அனுபவிக்கிறார்கள். திருமணங்கள், கல்வி மற்றும் வணிக முயற்சிகள் உள்ளிட்ட புதிய தொடக்கங்களுக்கும் இந்த திருவிழா மங்களகரமானதாக கருதப்படுகிறது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வசந்த பஞ்சமியை பட்டம் பறக்கும் போட்டியுடன் கொண்டாடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
‘ஒரு ஆம்லெட்டுக்கு ரூ.800 + 18% ஜிஎஸ்டி?’ வைரலான ஸ்டார் ஹோட்டல் பில்
lord saraswati

வசந்த பஞ்சமி தினமான இன்று காலையில் எழுந்து நீராடிய பின்னர் விரதம் அனுஷ்டித்து சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். பூஜை அறையில் புத்தகங்கள், பேனாக்கள், இசைக்கருவிகள் மற்றும் மஞ்சள் பூக்களை சரஸ்வதி தேவியின் முன் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் சரஸ்வதி வந்தனத்தை பாராயணம் செய்து, ஞானம் மற்றும் வெற்றிக்காக அவளது ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும். சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் நிற பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.

மஞ்சள் என்பது வசந்த பஞ்சமியின் நிறம். இது ஆற்றல், செழிப்பு மற்றும் ஞானத்தை குறிக்கிறது. வழிபாடு செய்யும் முன் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, கேசரி அல்வா மற்றும் லட்டு போன்ற பாரம்பரிய மஞ்சள் நிற இனிப்புகளை தயார் செய்து சரஸ்வதி தேவிக்கு படைத்து தீப ஆராதனை செய்து வழிபட வேண்டும். இந்த நன்னாளில் விரதம் கடைப்பிடிக்கும் பக்தர்கள், மாலையில் அம்மனை வழிபட்ட பிறகு விரதத்தை முடிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
30 பேர் பலி எதிரொலி: மகா கும்பமேளாவில் வி.வி.ஐ.பி பாஸ் ரத்து, வாகனங்களுக்கு தடை!
lord saraswati

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுவதால், இன்று மரங்கள், செடிகள் ஆகியவற்றை வெட்டவோ அவற்றை துன்புறுத்தவோ கூடாது. அதாவது இயற்கையை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடவே கூடாது.

இன்று அசைவ உணவை உண்பது மகா பாவம் என்பதால் தவிர்த்து விடுவது நல்லது. இன்று மது, புகை போன்ற போதை வஸ்துக்கள் எடுத்துக்கொள்வது அசுபமானதாக கருதப்படுகிறது. இன்று முழுவதும் உணவு அருந்தாமல் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் சாத்வீகமான உணவுகளையே உண்ண வேண்டும். இன்றைய தினம் யாரிடமும் கடுமையான வார்த்தைகளையோ, கெட்ட வார்த்தைகளையோ, மற்றவர் மனம் புண்படும் வார்த்தைகளையோ பயன்படுத்தாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com