Sri Saraswathi Vazhipadu
Sri Saraswathi Devi

வீடுகளைத் தாண்டி வீதிகளில் மலரும் சரஸ்வதி வழிபாடு!

Published on

ந்திய பாரம்பரியத்தில் சரஸ்வதி பூஜைக்கு தனி முக்கியத்துவம் உண்டு. அறிவு, கல்வி, கலை, இசை மற்றும் ஞானத்தின் தெய்வமாகிய சரஸ்வதி தேவியை வணங்கும் நாள் என்பதால், மாணவர்கள் முதல் கலைஞர்கள் வரை அனைவரும் பெரும் ஆர்வத்துடன் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். வழக்கமாக வீடுகளில், பள்ளிகளில், கல்லூரிகளில் வழிபாடு நடைபெற்றாலும், பல இடங்களில் சாலைகளில் மேடை அமைத்து குழுவாக சரஸ்வதி பூஜை நடத்தும் பழக்கம் உருவாகியுள்ளது. இது வெறும் வழிபாட்டைத் தாண்டி, சமூக ஒற்றுமை மற்றும் கலாசார விழாவின் அடையாளமாக மாறியுள்ளது.

1. சமூக ஒற்றுமை மற்றும் நட்பு வளர்ச்சி: சாலைகளில் மேடை அமைப்பது, ஒரே பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது. இது தனிப்பட்ட குடும்ப வழிபாட்டைக் கடந்து, சமூக வழிபாடாக மாறுகிறது. பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து விழாவில் பங்கேற்பதால் உறவு மற்றும் நட்பு வலுப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நவராத்திரி பண்டிகையின் இறுதியில் ஏன் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது?
Sri Saraswathi Vazhipadu

2. அனைவரும் பங்கேற்பதற்கான வாய்ப்பு: எல்லோரும் தனித்தனியாக பெரிய பூஜை செய்ய முடியாது. பொருளாதார வசதி குறைந்தவர்களும் தெய்வத்தை வழிபடக்கூடிய சூழல் சாலைகளில் மேடை அமைக்கப்பட்டால் சாத்தியமாகிறது. அதனால் இது சமத்துவ உணர்வை ஏற்படுத்துகிறது.

3. கல்வி, கலை வளர்ச்சிக்கு ஊக்கம்: சரஸ்வதி தேவியே கல்வி, கலை, அறிவின் தெய்வம் என்பதால், இந்த நாளில் பாடல், நடனம், இசை, உரை நிகழ்ச்சிகள், கவிதைப் போட்டிகள் போன்றவை நடக்கும். சாலைகளில் மேடை அமைக்கப்படுவதன் மூலம், மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் மேடை கிடைக்கிறது.

4. பொதுவான வழிபாட்டு இடத்தின் சுலபம்: வீடு வீடாகச் சென்று வழிபட வேண்டிய அவசியமில்லை. பொதுவான இடத்தில் மேடை அமைத்தால், அனைவரும் எளிதில் வந்து வழிபட முடிகிறது. குறிப்பாக மாணவர்கள், தொழிலாளர்கள், முதியவர்கள் என அனைவருக்கும் சுலபமாக வழிபட வாய்ப்பு கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
பாசரா சரஸ்வதி கோயில்: கல்வி, கலையில் உச்சம் தொட வைக்கும் மஞ்சள் பிரசாதம்!
Sri Saraswathi Vazhipadu

5. பாரம்பரிய விழாவும் இணைப்பு: மேடை பூ, விளக்கு, கொடி, வண்ணக் காகிதங்கள், மின் விளக்குகள் கொண்டு அழகுபடுத்தப்படுகின்றன. இது பகுதியையே ஒரு விழா சூழலாக மாற்றுகிறது. அந்தந்த ஊரின் பாரம்பரியம், பக்தி, உற்சாகம் ஆகியவை வெளிப்படுகிறது.

அதனால், சரஸ்வதி பூஜை சாலைகளில் மேடை அமைத்து நடத்தப்படுவது என்பது வெறும் வழிபாட்டு நிகழ்ச்சி மட்டுமல்ல. அது சமூக ஒற்றுமையை வளர்க்கும், அனைவரையும் சமமாக இணைக்கும், கல்வி மற்றும் கலை வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும், பாரம்பரியத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தும் ஒரு கலாசார நிகழ்வாகும்.

ஆயுத பூஜை விழா ஒரு மத நிகழ்வாக மட்டுமல்லாது, உழைப்புக்கு மரியாதை செலுத்தும் நாள் எனும் சிறப்பையும் தாங்குகிறது. தொழிலாளர்களின் ஒற்றுமை, சமூக அக்கறை, குடும்ப மகிழ்ச்சி ஆகியவற்றை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் நிகழ்வாக இது அமைகிறது.

logo
Kalki Online
kalkionline.com