‘ரமலான் பெருநாள்’ மட்டும் உலகப் பயன்பாட்டிலிருக்கும் குறிப்பிட்ட மாதங்களில் வருவதில்லையே ஏன்?

‘ரமலான் பெருநாள்’ மட்டும் உலகப் பயன்பாட்டிலிருக்கும் குறிப்பிட்ட மாதங்களில் ஏன் வருவதில்லையே என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
Eid al-Fitr of Ramadan
Eid al-Fitr of Ramadan img credit - nationalgeographic.com
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

உலகில் இசுலாமிய சமயத்தினர் பயன்படுத்தி வரும் இசுலாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டியில் பிற நாட்காட்டிகளைப் போல் 12 மாதங்கள் இருப்பினும், ஆண்டுக்கான நாட்களின் எண்ணிக்கை 354 அல்லது 355 நாட்களாகவே இருக்கிறது. இந்நாட்காட்டியை ஹிஜ்ரி நாட்காட்டி (Hijri Calendar) என்று அழைக்கின்றனர். இசுலாமிய நாட்காட்டியில் கிரிகோரியன் நாட்காட்டியை விட பத்து அல்லது பதினொன்று நாட்கள் குறைவாக இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டேச் செல்வதால் கிரிகோரியன் நாட்காட்டியுடன் இந்நாளை ஒப்பிட்டுச் சொல்ல இயலாது.

ஹிஜ்ரி வருடப் பிறப்பு

இந்நாட்காட்டியின் முதல் மாதமான மொகரம் மாதத்தின் முதல் நாளை இசுலாம் சமயத்தினர் ஹிஜ்ரி வருடப் பிறப்பு நாளாகக் (Hijiri New Year) கொண்டாடி வருகின்றனர்.

மொகரம் நாள்

இசுலாமியர்கள் இசுலாமிய நாட்காட்டியின் முதல் மாதமான மொகரம் மாதத்தில் வரும் பத்தாம் நாளை மொகரம் நாளாகக் (Muharram Day) கொண்டாடி வருகின்றனர்.

மீலாது நபி நாள்

இசுலாமியர்கள் இசுலாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி அல்-அவ்வல் (Rabi al-awwal) மாதத்தில் வருகின்ற பன்னிரண்டாம் நாளை முகமது நபி அவர்களின் பிறந்த நாளாகக் கொண்டு மீலாது நபி நாளாகக் (Mawlid Day) கொண்டாடி வருகின்றனர்.

ஈகைத் திருநாள்

இசுலாமியர்கள் இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து ஈகைத் திருநாளாகக் (Eid al-Fitr) கொண்டாடுகின்றனர். இத்திருநாளை நோன்புப் பெருநாள், ரமலான் நாள் என்றும் அழைப்பதுண்டு.

அரபா நாள்

இசுலாமியர்கள் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல்கச்சு மாதத்தில் வருகின்ற ஒன்பதாம் நாளை அரபா நாளாகக் கொண்டாடுகின்றனர். அரபா என்பது மக்காவிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு பொது இடம். மெக்கா புனிதப் பயணம் செல்லும் இசுலாமியர்கள் துல்கச்சு 9-ம் நாள் காலையிலிருந்து மாலை வரை அங்கு தங்கிருப்பது கட்டாய கடமையாக இருக்கிறது.

தியாகத் திருநாள்

இசுலாமியர்கள் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல்கச்சு மாதத்தில் வருகின்ற பத்தாம் நாளை இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாகத் தியாகத் திருநாளாகக் (Eid al-adha) கொண்டாடி வருகின்றனர். இந்நாளைப் பக்ரீத் நாள் என்றும் அழைப்பதுண்டு.

கிரிகோரியன் நாட்காட்டியிலிருந்து இசுலாமியர்கள் பயன்படுத்தும் நாட்காட்டியானது, பத்து அல்லது பதினொன்று நாட்கள் குறைவாக இருப்பதால், ஒவ்வொரு இசுலாமியப் பண்டிகையும் கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஒவ்வொரு ஆண்டிலும், முந்தைய ஆண்டிலிருந்து பத்து அல்லது பதினொன்று நாட்களுக்கு முன்பே வந்துவிடுகிறது.

இதையும் படியுங்கள்:
ரமலான் - சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதம்!
Eid al-Fitr of Ramadan
logo
Kalki Online
kalkionline.com