ஆடி பெருக்கு கொண்டாடுவது எதற்கு?

River Kaveri
Worshiping Rivers
Published on
deepam strip

காக்கை அமர்ந்து

அகத்தியர் கமண்டலம் கவிழ்ந்து

குடமாய் குடகில் பிறந்து

வனம் வனமாய் வலம் வந்து

கிருஷ்ணராஜ சாகர் அணையை அடைகிறாள்

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ரங்கநாதரை ஆலிங்கனம் செய்கிறாள்

நுழைகிறாள் தமிழ்நாட்டில் புகுந்த வீட்டில் அடியெடுத்து

நீர்வீழ்ச்சிகளாலால் ஹொகனேக்கலை அலங்கரித்து

நிறுத்த பார்க்கிறார்கள் மேட்டூரில் தடுத்து

முடியவில்லை போகிறாள் பவானி நோக்கி அடுத்து

தொடர்கிறாள் பயணம் பவானியை அணைத்து

வந்ததும் ஈரோடு ஆரம்பிக்கிறது சோதனை

தாங்க வேண்டியதாகிறது சாயப்பட்டறைகள் கழிவினை

கலர் கண்ணீர் சிந்தி நுழைகிறாள் காவேரி கரூரு

ஆக்கியபின் அதை ஒரு கரும்பூரு

இதையும் படியுங்கள்:
ஆடி அமாவாசை ரகசியம்! உங்கள் முன்னோர்களின் ஆசி வேண்டுமா? எச்சரிக்கும் ஜோதிடர்கள்!
River Kaveri

பின்பு நுழைகிறாள் சோழ நாடு

வளமாக்க அதன் வயக்காடு

பிறகு கும்பகோணம் காவிரிபூம்பட்டினம்

முடியப்போகுது பொன்னியின் பயணம்

விரித்து கைகள் பால் புடல்

அணைக்கிறாள் வங்கக்கடல்

பூ தூவி வணங்கினால் வருடம் ஒரு முறை போதாது

பார்த்துக்கொள்ளவேண்டும் காவிரி காய்ந்து போகாது

உலகில் ஓடும் ஒவ்வொரு நதியும் புனிதம்

ஸ்நானம் எதில் செய்தாலும் கிடைக்கும் புண்ணியம்

ஆடி பெருக்கை கொண்டாடுவது எதற்கு

நதிகளுக்கும் ஆறுகளுக்கும் நம் நன்றியை தெரிவிப்பதற்கு!

இதையும் படியுங்கள்:
பித்ரு சாபம் போக்கும் விசுவாமித்திரர் கோவில்
River Kaveri

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com