புதிய இடம் - தனிப் பயணம் - பயம் உங்களை பிடித்துவிட்டதா? எப்படி மீளலாம்?

Fear during the travel
Travel
Published on

நீங்கள் புதிதாக ஒரு இடத்துக்குப் பயணம் செய்கீர்களா? அந்த இடத்தை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பினும், பயம் உங்களை பிடித்துவிட்டதா? அதிலிருந்து எப்படி மீளலாம் என்பதைக் பார்ப்போம்.

1. மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்:

நீங்கள் சென்ற புதிய இடத்தில் உள்ளவர்களிடம் குறிப்பாக கடைகள், ஹோட்டல்கள் அல்லது சுற்றுலா தகவல் மையங்களின் ஊழியர்கள் போன்றவர்களிடம் தொடர்பு கொள்ள முயலுங்கள். இது இடத்திற்கான பயத்தை குறைக்கும்.

2. பயண நோக்கத்தை நினைவில் கொள்ளுங்கள்:

நீங்கள் ஏன் பயணம் செய்தீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். அது ஓய்வுக்காகவா, படிப்பதற்காகவா அல்லது வேலைக்காகவா என்பதை நினைவில் வையுங்கள். அது உங்களுக்கு மன உறுதியைத் தரும். அதன் மூலம் பயம் குறையும்.

3 .திட்டமிட்டு செயல்படுங்கள்:

நீங்கள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருப்பீர்கள் என்பதை ஒரு அட்டவணை (schedule) மூலம் திட்டமிடுங்கள். இது உங்கள் மன அழுத்தத்தை, பதற்ற நிலையைக் குறைக்கும்.

4. நம்பிக்கையுள்ளவர்களை அணுகுங்கள்:

பயம் அதிகமாக இருந்தால், உங்கள் குடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பர்களை தொடர்பு கொள்வது உதவியாக இருக்கும். உரையாடல் மூலம் பதற்றமான மன நிலையை மாற்றலாம்.

5. பாடல் அல்லது விருப்ப செயல்கள்:

உங்கள் விருப்பமான பாடல்களை கேட்பது அல்லது புத்தகங்களை வாசிப்பது போன்ற செயல்கள் மனதை அமைதிப்படுத்த உதவும்.

6. புதிய செயல்களை துணிந்து செய்க:

பயப்படாமல், சில புதிய விஷயங்களை (உதாரணமாக உள்ளூர் உணவுகளைச் சுவைத்தல், புதிய இடங்களை பார்வையிடல்) முயற்சிக்கவும். முடிவை வெறும் அனுபவமாகப் பாருங்கள்.

7. மூச்சை சீராக்குங்கள்:

ஆழ்ந்த மூச்சு பயிற்சி நடைமுறைகள் (deep breathing techniques) பயத்தை குறைக்க மிகுந்த உதவியாக இருக்கும்.

8. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்:

'என்னால் இதை முடிக்க முடியும்' என்ற எண்ணத்தை மனதிற்குள் கூறிக் கொள்வது, உங்களை உற்சாகப்படுத்தி, முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் மகிழ்ச்சியான 7 நகரங்களைத் தெரியுமா?
Fear during the travel

9. திட்டமாற்றங்களை ஏற்க தயாராக இருங்கள்:

உங்கள் திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொண்டு புதிய திட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட நிலைமைகளுக்கு முன்பே தயார் ஆகும் போது, நீங்கள் பயப்பட தேவையில்லை.

10. தகவல் பெற தயங்க வேண்டாம்:

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உள்ளூர் மக்கள், சுற்றுலா வழிகாட்டிகள் அல்லது அதிகாரிகள் மூலமாக தகவல் பெறலாம். மற்றவர்களிடம் கேட்க தயக்கமாக இருந்த அந்த இடத்துக்கான அப்ளிக்கேஷன்களை (app) பயன்படுத்தலாம்.

11. மனிதர்களுடன் இனிமையாக நடந்து கொள்ளுங்கள்:

அதே நேரத்தில், தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதைத் தவிருங்கள். பாதுகாப்பான தொடர்புகளை மட்டுமே வைத்திருங்கள். தனிப்பட்ட தகவல்களை பகிர்வது உங்களுக்கு பயத்தை உண்டாக்கும்.

12. பயணத்தில் மனதை முழுமையாக செலுத்துங்கள்:

பயண அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க, மனதை ஒருமுகப்படுத்துங்கள். வேலை அல்லது மற்ற மன அழுத்தங்களை தவிர்த்து விடுங்கள். அதன் மூலம், ஒரு முழுமையான பயம் இல்லாத பயணத்தை நீங்கள் அனுபவிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
நண்பர்களுடன் சுற்றுலா - Gen Z இளைஞர்களுக்கான ஸ்மார்ட் ட்ராவெல் டிப்ஸ்...!
Fear during the travel

13. வலைதளங்களின் அப்டேட்:

நீங்கள் புதிதாகச் செல்லும் இடத்தில் எடுத்த புகைப்படங்களை உடனடியாக சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதை தவிருங்கள். இது உங்கள் பயணத்தைப் பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கவும், அதனால் உங்கள் பாதுகாப்பை பாதிக்கவும் கூடும் .

இந்த விஷயங்களை நம்புங்கள். நாம் நிச்சயமாக தனியாக ஒரு ட்ரிப்புக்கு சென்று தைரியத்தோடு இருக்கலாம். சரி, நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஒரு ட்ரிப் போங்கள், உங்கள் மனதை ஓய்வெடுக்க விடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com