பயண தொடர்: ஜாலியோ ஜப்பானுங்கோ 8 - அசுச்சி-மோமோயாமா கட்டிய ஒசாகா கோட்டை; நாரா மான் பூங்கா!

Japan Travel Series
Japan Travel Series
சா.மெய்யப்பன்

என் பெயர் சாத்தப்பன் மெய்யப்பன். நான் கடந்த 30 ஆண்டுகளாக சிங்கப்பூர் கல்வியமைச்சில் தமிழ் மொழிக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது பகுதிநேரத் தமிழாசிரியராக ஓர் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிவருகிறேன். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையிலும் 18 ஆண்டுகள் பகுதிநேரத் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். `கற்பித்தல்திறன்`, `தமி்ழ்ப் புனைகதைகள் காட்டும் சமுதாயம்` என்னும் இரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளேன். உலகத்தமிழாசிரயர் மாநாடுகளிலும் தமிழ் இணைய மாநாடுகளிலும் ஆய்வுக்கட்டுரைகள் படித்துள்ளேன். அவ்வப்போது கவிதைகள். கட்டுரைகள், நாடகங்கள் எழுதுவதுண்டு. பயணம் மேற்கொள்வது எனது பொழுது போக்குகளில் ஒன்று. எனினும் எனது எழுத்துப்படைப்பு ஒன்று வெகுஜனப் பத்திரிகையான கல்கி மின்தொகுப்பில் வெளிவருவது இதுதான் முதன் முறை. எனது படைப்பை வெளியிட்டு ஊக்கமூட்டிய கல்கி குழுமத்தினருக்கும் வாசகர்களுக்கும் என்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Updated on
இதையும் படியுங்கள்:
பயண தொடர்: ஜாலியோ ஜப்பானுங்கோ 7 - ஹிரோஷிமா - மனிதகுல அழிவின் உச்சம்! 'சின்னப்பையன்' என்ற அணுகுண்டால் ஆறாத்துயரம்!
Japan Travel Series

ஆகஸ்டு ஆறாம் தேதி  காலை உணவை முடித்துகொண்டு 8.15 முதல் 9.30 வரை ஒசாகா கோட்டைக்குச் சென்றோம். ஒசாகாக கோட்டை ஜப்பானிலுள்ள ஒசாகா மாகாணத்தில் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் 'அசுச்சி-மோமோயாமா' என்ற மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. இது உலகப் புகழ்பெற்ற கோட்டைகளுள் ஒன்றாகும். இது 61,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.  ஜப்பானிய அரசால் முக்கியமான கலாசார சொத்தாகப் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இக்கோட்டை அகழிகள், கிணறுகள், தோட்டங்கள் போன்ற இயற்கைச் சூழல்களால் அமைந்துள்ளது. கிட்டதட்ட இது தமிழ்நாட்டில் உள்ள தஞ்சை பெரியகோயிலைப் போன்றதோர் அமைப்பினை உடையது. இதன் சுவர்கள் மிகப்பெரிய அகலமான கற்களால் அமைந்துள்ளமை வியக்கத்தக்கது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com