நீலகிரி மலைக்குள் ஒரு மர்ம தீவு... வெளிநபர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் ரகசிய கிராமம்!

thengumarahada
thengumarahada
Published on

தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருந்தாலும், அவற்றில் ஒரு சில இடங்கள் மட்டுமே தங்களின் தனித்துவமான அமைப்பால் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும். அப்படிப்பட்ட ஒரு அதிசயமான இடம்தான் தெங்குமரஹாடா (Thengumarahada) என்ற ஒரு குட்டி கிராமம். 

ஏதோ ஹாலிவுட் படங்களில் வருவது போல, அடர்ந்த மலைகளுக்கும் காடுகளுக்கும் நடுவே வெளி உலகத் தொடர்பே இல்லாமல் தனித்து விடப்பட்ட ஒரு ரகசிய தீவு போலவே இந்த ஊர் அமைந்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி தாலுகாவுக்கு உட்பட்ட இந்த கிராமத்திற்குள் அவ்வளவு சீக்கிரம் யாராலும் நுழைந்துவிட முடியாது. அப்படி இந்த ஊரில் என்ன ஸ்பெஷல், ஏன் இங்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கொடநாடு மலையில் இருந்து!

கோத்தகிரிக்குச் சுற்றுலா செல்பவர்கள் கொடநாடு வியூ பாயிண்டில் இருந்து கீழே பார்த்தால் ஒரு பிரம்மாண்டமான பள்ளத்தாக்கு தெரியும். சுமார் 1800 மீட்டர் உயரத்தில் இருந்து பார்க்கும் போது, இருண்ட காடுகளுக்கு நடுவே ஒரு சின்னஞ்சிறிய புள்ளி போலத் தெங்குமரஹாடா கிராமம் மர்மமாகக் காட்சியளிக்கும். 

பகல் நேரங்களை விட இருட்டிய பிறகு இந்த கிராமத்தின் அழகே தனிதான். தெருவிளக்குகள் எரியத் தொடங்கும் போது, அடர்ந்த காட்டுக்குள் ஏதோ மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக அமர்ந்திருப்பது போல அவ்வளவு ரம்மியமாக இந்த ஊர் காட்சியளிக்கும். தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு இது எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதே அளவுக்குக் கிட்டே செல்வது கடினமானது.

வனவிலங்குகளின் ராஜ்ஜியம்!

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஊர் இருந்தாலும், நீலகிரி மலைப்பாதைகள் வழியாகக் கீழே இறங்கி இங்கு யாரும் வர முடியாது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து கரடுமுரடான ஒரு காட்டு வழிப்பாதை மூலமாகத் தான் இந்த ஊரைச் சென்றடைய முடியும். இந்த கிராமம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு மிக மிக அருகில் இருப்பதால், இது முழுமையாகப் புலிகள் மற்றும் காட்டு யானைகளின் ராஜ்ஜியமாகவே இருக்கிறது. 

இதையும் படியுங்கள்:
இனி இங்கு நாணயங்கள் வீசி எறிய கட்டணம் செலுத்த வேண்டும்..!
thengumarahada

இங்கு எப்போது வேண்டுமானாலும் வனவிலங்குகள் சாலையைக் கடக்கும் என்பதால், வனத்துறையினர் இங்குப் பல அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஊர் மக்களைத் தவிர வெளி நபர்கள் யாரும் அந்த வழியில் பயணம் செய்யக் கூடாது. மிக முக்கியமான காரணங்களுக்காகச் செல்ல வேண்டும் என்றாலும் வனத்துறையிடம் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்குவது கட்டாயம்.

தனித்துவமான வாழ்க்கை முறை!

வெளி உலகத்துடன் எந்த ஒரு பெரிய தொடர்பும் இல்லாமல், பல ஆண்டுகளாகத் தனித்து வாழ்ந்து வரும் இந்த மக்களின் வாழ்க்கை முறை வித்தியாசமானது. நகரத்தின் எந்த ஒரு நவீன வசதிகளும், ஆடம்பரமும் இல்லாமல் இயற்கையோடு முரண்படாமல் ஒரு எளிய வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். 

நகரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நமக்கு, இந்த ஊரின் அமைதியும் தூய்மையான காற்றும் ஒரு பெரிய வரப்பிரசாதமாகவே தோன்றும். காடுகளின் அரவணைப்பில், விவசாயத்தையும் கால்நடைகளையும் மட்டுமே நம்பி வாழும் இவர்களின் ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய சாகசமாகத் தான் விடிந்து முடிகிறது.

இதையும் படியுங்கள்:
விழுப்புரத்தில் 1200 ஆண்டுகள் பழமையான சிற்பம் கண்டுபிடிப்பு!!
thengumarahada

இந்த கிராமத்தின் கட்டுப்பாடுகள் எல்லாம் வெறும் பாதுகாப்பிற்காக மட்டுமே தவிர, அதன் அழகை மறைப்பதற்காகக் கிடையாது. சுற்றுலாப் பயணிகளாக நாம் அங்குச் செல்ல முடியவில்லை என்றாலும், இதுபோன்ற இடங்கள் அப்படியே அதன் இயற்கையான அமைப்பிலேயே எந்த ஒரு மாசும் அடையாமல் இருக்க வேண்டும் என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் பெரிய ஆசையாக இருக்கிறது. 

என்றாவது ஒரு நாள் கொடநாடு மலைக்கு நீங்கள் சுற்றுலாச் சென்றால், அங்கிருந்து இந்த மர்ம கிராமத்தின் அழகைக் கண்குளிரப் பார்த்து ரசியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com