

ஹைதராபாத், செகந்திராபாத் உள்ளிட்ட தெலங்கானா முழுவதும் கொண்டாடப்படும் பாரம்பரிய ‘ஆஷாட போனாலு’ விழா, ஜூலை 16 அன்று கோல்கொண்டா கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜகதம்பா மகாகாளி கோவிலில் தொடங்கி, ஆகஸ்ட் 10 அன்று லால் தர்வாஸா சிம்மவாஹினி மகாகாளி கோவிலில் நிறைவடைகிறது. 2014 முதல் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ விழாவாக அறிவிக்கப்பட்ட இந்த திருவிழாவை அரசு மிகுந்த கோலாகலத்துடன் நடத்துகிறது.
இந்தத் திருவிழா முக்கியமாக இரட்டை நகரங்களான ஹைதராபாத், செகந்திராபாத்திலும் மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் பிற பகுதிகளிலும், இந்து தெய்வமான மகாகாளியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா 2014 ஆம் ஆண்டில் தெலுங்கானாவின் அதிகாரப்பூர்வ மாநில விழாவாக அறிவிக்கப்பட்டது
தெலங்கானாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமான இந்த விழாவை, மிகுந்த கோலாகலத்துடனும் பக்தியுடனும் நடத்துவதற்காக, மாநில அரசு அனைத்துத் துறைகளுடனும் ஒருங்கிணைந்து விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
30 முக்கிய கோயில்களில் போனாலு விழாவின்போது மாநில அரசு பாரம்பரியமாக பட்டு ஆடைகளை வழங்கும். அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்த காணிக்கை செலுத்தும் நிகழ்வுகளில் பங்கேற்பார்கள்.
குங்குமம், மஞ்சள் மற்றும் வேப்ப இலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பானையில், வெல்லம் கலந்த சமைத்த சாதத்தைக் கொண்டு, பெண்கள் 'போனம்' படைப்பார்கள். ‘போனம்’ என்பது உணவைக் குறிக்கும். பெண்கள் மிகுந்த பக்தியுடன் தெய்வீக அன்னையான அம்மனுக்கு மண் அல்லது செம்பு பாத்திரங்களில் அரிசி, பால் மற்றும் வெல்லம் அடங்கிய புனிதமான பிரசாதத்தை படைக்கின்றனர்.
மாலை நேரக் கொண்டாட்டங்களின் போது, இளைஞர்கள் மஞ்சள் மற்றும் குங்குமப் பூச்சு பூசிய போத்தராஜுக் களுடன், துடிப்பான தாளங்களுக்கு ஏற்ப முன்னால் நடனமாடியபடி, ஊர்வலமாக செல்வார்கள்.
போச்சம்மா, எல்லம்மா மற்றும் மைசம்மா போன்ற கிராம தெய்வங்களுக்கு போனம் (பாரம்பரிய உணவுப் படையல்) வழங்கும் பாரம்பரியம் தெலங்கானா முழுவதும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்பதைப் பண்டைய சிற்பங்கள், கல்வெட்டுகள் மற்றும் இலக்கியச் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
மாநில தொல்லியல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் பட்டுள்ள, கி.பி. 1516 -ஆம் ஆண்டின் விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, சமைத்த அரிசியை தேவிகளுக்குப் புனிதப் படைப்பாக வழங்கும் வழக்கத்தை போனம் எனக் குறிப்பிடுகிறது. மேலும், அந்த காலகட்டத்திற்கு முன்பே இந்த சடங்குகளும் விழாக்களும் நடைமுறையில் இருந்தன என்பதையும் அது காட்டுகிறது
இந்துக்கள் போனம் வழங்கும் பாரம்பரியம், பருவமழையின் தொடக்கத்துடன் தொடர்புடையது. மாறிவரும் வானிலை மற்றும் அசுத்தமான நீர் ஆகியவை பெரும்பாலும் நோய்களுக்கு வழிவகுக்கும் மக்கள் நோய்களிலிருந்து பாதுகாப்பு, செழிப்பான பயிர்கள் மற்றும் கால்நடைகளின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்து, கிராமத்துத் தெய்வங்களுக்கு போனம் படைக்கின்றனர். பல கிராமங்களில், நல்ல அறுவடைக்காக இவ்வாறு படைக்கப்பட்ட போனம் விவசாய நிலங்களிலும் தெளிக்கப்படுகிறது.
போனாலு பண்டிகையுடன் தொடர்புடைய மிகவும் தனித்துவமான சடங்குகளில் ஒன்றான ‘ரங்கம் சடங்கு’, கடைசி நாளன்று நிகழ்த்தப்படும். பாரம்பரியமாக முக்கிய கொண்டாட்டங்களைத் தொடர்ந்து காலையில் நடத்தப்படும் இது, பக்தர்கள் மகாகாளி தேவியிடமிருந்து தெய்வீக வழிகாட்டுதலையும் ஆசீர்வாதங்களையும் நாடும் ஒரு சடங்கு ரீதியான அருள்வாக்கு முறையாகக் கருதப்படுகிறது.
கோவிலில் ஈரமான மண் பானை ஒன்றின் மீது நின்று, மாநிலத்தின் எதிர்காலத்தைக் கணிக்கும் சடங்கை குறி சொல்லும் பெண் நிகழ்த்துவார்.
வரலாற்று ஆய்வாலர்கள் கூற்றுப்படி, தெய்வங்களுக்கு போனம் படைக்கும் வழக்கம் மிகவும் தொன்மையானது மற்றும் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது.. பல இடங்களில் காணப்படும் பாறை ஓவியங்கள், தெய்வங்களுக்கு உணவு படைக்கப் படுவதைச் சித்தரிக்கின்றன. அன்னை தெய்வத்திற்கு உணவு படைக்கும் இதுபோன்ற பாரம்பரியங்கள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன .
இந்த பிரம்மாண்டமான போனாலு திருவிழாவைக்காண பல்வேறு இடங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஹைதராபாதுக்கு வருகை தருகின்றனர்.
இந்தத் தொகுப்பின் மூலம் தெலங்கானா பண்பாட்டின் உச்சமான போனாலு திருவிழாவின் வரலாற்றுத் தொன்மையையும், அதன் பின்னால் இருக்கும் அறிவியல் மற்றும் ஆன்மீகக் காரணங்களையும் நீங்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளலாம். மாறிவரும் பருவமழைக்காலத்தில் நோய்நொடிகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கிராமத்துத் தெய்வங்களின் வழிபாட்டு முறைகளையும், அதன் சடங்குகளையும் அறிந்து உங்கள் ஆன்மீகத் தேடலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.