மயான கொள்ளை நாயகி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தல வரலாறு...

பில்லி, சூனியம், நோய்களை தீர்க்கும் பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இறைவனை காக்க இறைவி அவதாரம் எடுத்த இடம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்.
melmalayanur angalamman temple
melmalayanur angalamman temple
Published on
Deepam strip
Deepam strip

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இங்கு அம்மன் சுயம்பு புற்று தேவியாக அருள்பாலித்து வருகிறார்.

மிகவும் சக்தி வாய்ந்த ஸ்தலமாக கருதப்படுகிறது. இந்த இடம் சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய ஸ்தலமாகும். பில்லி, சூனியம், நோய்களை தீர்க்கும் பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.

இங்கு மாசி மாதம் நடைபெறும் மயான கொள்ளை மற்றும் அமாவாசை வழிபாடுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். மூலவர் புற்று வடிவில் உள்ள அங்காள பரமேஸ்வரி. அமாவாசை அன்று இங்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். மாசி மாதம் நடைபெறும் மயான கொள்ளை மற்றும் ஊஞ்சல் உற்சவம் மிகவும் பிரபலம்.

27 வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். திருமண தடைகள் நீங்கும்.

சிவபெருமானின் கோபத்தால் பிரம்மதேவனின் ஒரு தலையை கொய்த காரணத்தால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக இந்த இடத்தில் சிவன் வந்து தங்கியதாகவும், அங்கு தேவி புற்று வடிவில் இந்த தோஷத்தை நீக்குவதாகவும் வரலாறு கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
சிவனையே சிறை வைத்து பின் காவல் தெய்வமாக மாறியவர் பற்றி தெரியுமா?
melmalayanur angalamman temple

இங்கு தேவி மயான கொள்ளை மூலம் சிவனின் தோஷத்தை நிவர்த்தி செய்ததாக புராண கதைகள் கூறுகின்றன. சிவன் பிரம்மனின் தலையை கொய்ததால் சரஸ்வதி தேவி, பார்வதிக்கும், சிவபெருமானுக்கும் சாபமிட்டதால் அந்த சாபத்தை போக்க இங்குள்ள நதிக்கரையில் ஐந்து தலை நாகமாக புற்றில் பார்வதி தேவி அவதரித்தார். நீண்ட காலமாக அந்த இடத்தில் தங்கி புற்றாகவே தேவி அவதரித்து வந்தார். சிவபெருமான் இங்கு வந்து தனது சாபம் நீங்கி தேவியை மணந்ததாக வரலாறு.

சிவபெருமான் வருகைக்காக புற்றில் பல ஆண்டுகளாக காத்து இருந்த இடம்தான் இந்த மேல்மலையனூர் பகுதி ஆகும். இங்குள்ள மக்கள் கருவறையில் உள்ள புற்றையே தேவியாக கருதி வழிபடுகிறார்கள். புற்றில் உள்ள மண்ணை எடுத்து பூசி கொள்கிறார்கள். வருடாந்திர உற்சவத்தின் போது அம்மனை தேரில் வைத்து ஊர்வலம் நடத்துகின்றனர்.

பௌர்ணமி, அமாவாசை நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவில் 24 மணி நேரமும் திறந்து இருக்கும். அன்றைய தினம் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

மயான கொள்ளை வெகு சிறப்பாக நடைபெறும். அந்த சமயத்தில் பக்தர்கள் கொண்டு வந்த தானியத்தை சமையல் செய்து அம்மனுக்கு படைத்து வழிபடுகின்றனர்.

அம்மனுக்கு பல ஆலயங்கள் இருந்தாலும் இந்த மேல்மலையனூர் முதலிடம் பெறுகிறது. தல விருட்சம் வில்வமரம் மற்றும் மயில் கொன்றை மரம். தீர்த்தம் அக்னி தீர்த்தம்.

இறைவனைக் காக்க இறைவி அவதாரம் எடுத்த ஸ்தலம் என்பதால் இங்கு அங்காள பரமேஸ்வரி என பெயர் வந்தது. அங்கம் ஆளும் ஈஸ்வரி என்பதால் அங்காள பரமேஸ்வரி என ஆனது. இந்தப் பகுதி முற்காலத்தில் தண்டக்காரன்யம் என அழைக்கப்பட்டது.

இங்குள்ள அம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறாள். இங்குள்ள அம்மனை புற்று தேவி அம்மன் என அழைக்கிறார்கள். இந்த சுயம்பு புற்றுவானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இங்கு வரும் ஆண் பக்தர்கள் கபால வேடமிட்டு வருகிறார்கள். பெண்கள் வேப்பிலை ஆடை அணிந்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் அதிக அளவில் நேர்த்தி கடன் நடைபெற்று வருகிறது.

அமாவாசை நாளில் இரவு 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். மகா சிவராத்திரியை ஒட்டி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

ஏழாம் நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். தேரோட்டம் முடிந்ததும் தேரை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து விடுவார்கள். மீண்டும் அடுத்த தேரோட்டத்திற்கு புதிய தேர் செய்யப்படும். இதுதான் நடைமுறை.

அம்மன் சிவனின் சாபத்தை தீர்த்தாலும் அவளது கோபம் அடங்கவில்லை. அம்மனின் கோபத்தை தணிக்க தேவர்களும், முனிவர்களும் தேர் திருவிழா நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் தேர்சக்கரங்கள், அச்சாணிகள் மற்றும் தேர் சட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு தேரோட்டத்தில் தேவியை வைத்து ஊர்வலம் நடத்தினார்கள். தேர் ஊர்வலம் முடிந்த பிறகு தேவர்கள், முனிவர்களும் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றனர். தேவியும் சமாதானம் ஆனார். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் தேர் புதிதாக செய்யப்படுகிறது.

சிவன் பிரம்மன் தலையை கொய்த போது அவரது தலை சிவன் கையில் கபாலமாக மாறி ஒட்டிக் கொண்டது. எவ்வளவோ முயன்றும் கபாலத்தை பிரிக்க முடியவில்லை. சரஸ்வதி தேவியின் விருப்பப்படி சிவன் இங்கு வந்து தேவியின் கையால் படைத்த சாதத்தை கபாலத்திற்கு படைப்பதற்காக உணவை கீழே சிதறினாள். அப்போது கபாலம் கீழே இறங்கி வந்து அந்த சாதத்தை உண்டது. இதன் மூலம் சிவனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாக வரலாறு.

இதையும் படியுங்கள்:
திருவண்ணாமலை அருகே இப்படி ஒரு அதிசயக் கோயிலா? வியக்க வைக்கும் ரகசியங்கள்!
melmalayanur angalamman temple

செஞ்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் மேல்மலையனூர் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com