‘நாராயணா’ என்ற திருநாமத்தின் ஆழமான மகத்துவம் தெரியுமா?

‘நாராயணா’ என்ற திருநாமத்தின் ஆழமான மகத்துவத்தை உணர்ந்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம் வாங்க...
Vishnu and Narathar
Vishnu and Narathar
Published on
deepam strip
deepam strip

"நாராயணா" என்ற திருநாமம், "நர" (ஆன்மா) மற்றும் "அயன" (இருப்பிடம்) ஆகிய சொற்களிலிருந்து உருவானது. அனைத்து உயிர்களிலும், அனைத்து இடங்களிலும் நிறைந்திருப்பவர் என்ற பொருளை இது தருகிறது. நாரத முனிவர், நாராயணரின் திருநாமத்தை ‘நாராயணா நாராயணா’ என்று நொடிக்கு ஒரு முறை உச்சரித்தபடியே இருப்பவர் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த பதிவு, நாராயணா என்ற திருநாமத்தின் ஆழமான மகத்துவத்தையும் அதன் உண்மை பொருளை உணர்ந்தவர் அடையும் பலனையும் அழகாக வெளிப்படுகிறது.

நாரத முனிவர், நாராயணா என்ற திருநாமத்தின் மகிமையை அறிய விரும்பினார். நாரதர் ‘நாராயணா’ என்றால் என்ன என்று ஒரு முனிவரிம் கேட்டார். முனிவர் சொன்னார், ரொம்ப சுலபம், நாரம் என்றால் தண்ணீர், அயனன் என்றால் சயனித்திருப்பவன் என்று பொருள். அவன் கடலிலே சயனம் கெண்டவன் அல்லவா, அதனால் நாராயணன் என்றார்.

பெருமாள் கோவில்களுக்குச் சென்றால், அங்கு துளசி தீர்த்த பிரசாதம் வெகு பிரசித்தம். தீர்த்தம் என்பது நாராயணரின் பெயரில் பாதி என்பதால் தான், பெருமாள் கோவில்களில் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மகத்துவம் வாய்ந்த பரந்தாமனின் பன்னிரு திருநாமங்கள்!
Vishnu and Narathar

நாராயணன் என்ற நாமத்தின் பொருள் என்ன என்று நாரதருக்கே சந்தேகம் ஏற்பட்டது. முனிவரின் எளிமையான விளக்கத்தில் திருப்தி அடையாத நாரதர், விளக்கம் அளிக்க வல்ல நாராயணனிடம் ஓடினார்.

நாரதர், நாரயணனிடம், "உம்மை நாராயணா என்று துதிக்கின்றேன். ஆனால் அதன் பொருள் தெரியவில்லை. விளக்கவும்," என்று கேட்டார். நாராயணனும் "அடடா எனக்கும் தெரியாதே, நர்மதை கரையில் உள்ள வண்டிடம் போய் கேள்," என்று சொன்னார். நாரதர் வண்டிடம் கேள்வியை கேட்டதும் வண்டு இறந்தது. அதிர்ச்சி அடைந்த நாரதர், "நாராயணா" என்ற அலற, நாராயணன் சிரித்துக்கொண்டே "கிளி மற்றும் கன்றுவிடம் கேள்" என்றார். நாரதரும் அப்படியே கேட்க ஒவ்வொன்றாய் இறந்து போனது. இது நாரதருக்கு பயத்தை ஏற்படுத்தியது. நாரதர் பயந்து கொண்டே, "ஐயனே, ‘நாராயணன்’ என்ற நாமத்தை கேட்பவர்கள் இறந்து விடுவார்கள். அதுதானே அர்த்தம்?" என்றார்.

"நாரதா கலங்காதே, காசியில் பிறந்துள்ள இளவரசனிடம் போய் கேள்" என்றார் நாராயணன். நாரதர் பயந்தபடியே இளவரசனிடம் கேட்டார்.

இளவரசனும், "நாரதரே, நானே வண்டாய், கிளியாய், கன்றாய் பிறந்தேன். உம் வாயால் நாராயணா என்கிற நாமத்தை கேட்டு செல்வங்களை எல்லாம் அனுபவிக்கத்தக்க இளவரசனாய் உயர்ந்த மனிதப்பிறவியை பெற்றேன்" என்றான்.

அதாவது, நாரதரின் வாயால் 'நாராயணா' என்று கேட்கும் பாக்கியத்தாலேயே முந்தைய பிறவிகளின் நிலைகளில் இருந்து படிப்படியாக உயர்ந்து இப்போது இளவரசனாக பிறந்திருப்பதாகவும், அதன் மூலமாக செல்வமும் முடிவில் பிறவி பிணியில் இருந்து விடுதலையும் கிடைக்கும் என்றும் அவன் விளக்குகிறான். கதை கடைசியில் காசி இளவரசன் வாயிலாக தெளிவாகிறது.

நாராயணன் என்றால் வாழும் போது செல்வம் அளித்து மரணத்திற்கு பின் பிறவி பிணி தீர்ப்பவர் என நாரதருக்கு புரிந்தது. ஆகையால் நாராயணன் என்ற நாமம் என்பது வெறும் பொருளை மட்டும் குறிப்பது அல்ல. அது வாழும் காலத்தில் செல்வத்தை அருள்பவன் மற்றும் வாழ்வுக்கு பின் பிறவி பிணியை தீர்த்து வைகுண்ட பேற்றை அருள்பவன் என்ற உயரிய ஆன்மிக பலனை உணர்த்தும் பேராண்மையாகும்.

இதையும் படியுங்கள்:
தொடர்ந்து எழுதுங்கள்: எழுத்துத் தடையிலிருந்து மீளும் மந்திரம்!
Vishnu and Narathar

இந்த விளக்கம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நாராயண மந்திரம் என்பது வெறும் உச்சரிப்பு மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக சக்தி. நாராயண மந்திரம் அழிவுக்கு அல்ல, ஆன்மீக வளர்ச்சிக்கும், முக்திக்கும் வழிவகுக்கும் ஒரு சக்தி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com