பில்லி, சூனியம், கண் திருஷ்டி... எல்லாவற்றையும் அழிக்கும் பிரத்தியங்கிரா தேவி வழிபாடு

Prathiyangara devi
Prathiyangara devi
Published on

பில்லி, சூனியம், கண் திருஷ்டி... எல்லாவற்றையும் அழிக்கும் பிரத்தியங்கிரா தேவி வழிபாட்டிற்கு சிறந்த நேரங்கள் இதுவே....

இந்த இயற்கை, இந்த உலகம் என அனைத்தும் அம்பிகையின் ஒரே சக்தியால் நடத்தப்படுகின்றன. பல கோலங்களில், பல அம்சங்களில், அவள் உலகத்தை பாதுகாக்கத் தோன்றுகிறாள். ஒருபுறம், கருணையும் பரிவும் பொங்கும் பராசக்தி; மறுபுறம், எதிரிகளை அழிக்க உக்கிரமூர்த்தியாக விளங்கும் காளி, துர்கை, சண்டிகை... அத்தகைய பராசக்தியின் உன்னதமான உக்கிர ரூபம்தான் ஶ்ரீ பிரத்தியங்கிரா தேவி. அவள் தோற்றம் தெய்வீக வரலாற்றிலேயே மிக முக்கியமானது.

அம்பிகையின் பல்வேறு கோலங்களில், மிகவும் சக்திவாய்ந்தவையாக கருதப்படுவது பிரத்தியங்கிரா தேவியின் வழிபாடாகும். இவ்வழிபாட்டின் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும்? எப்போது மற்றும் எதற்கு வழிபட வேண்டும் என்பதைக் இங்கே தெரிந்து கொள்வோம்.

பிரத்தியங்கிரா தேவி யார்?

பிரகலாதனின் வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. அவருக்கு அத்தனை துன்பங்களை ஏற்படுத்திய அசுரன் ஹிரண்யகசிபுவை வதம் செய்ய, மகாவிஷ்ணு உக்கிரமான நரசிம்ம அவதாரத்தை எடுத்தார். அந்த நரசிம்ம பெருமான், மனிதனும் அல்லாதவாறு, மிருகமுமல்லாதவாறு, பகலும் இல்லாத, இரவும் இல்லாத, உள்ளும் அல்லாத, வெளியும் அல்லாத வடிவில் தோன்றி ஹிரண்யகசிபுவை வதம் செய்தார். ஆனால், அப்போதும் அந்த உக்கிரம் குறையவே இல்லை.

இதனால், தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வேண்டினர். சிவபெருமான், நரசிம்மரின் கோபத்தை அடக்க, சரபேஸ்வரர் என்ற அதீத சக்தி வடிவில் தோன்றினார். அப்படி, சரபேஸ்வரரின் நெற்றியில் இருந்து அம்பிகை, உக்கிரமான பராசக்தி வடிவில் தோன்றினாள். இவருடன் சூலினி தேவியும் தோன்றினார். இவ்வாறு, ஶ்ரீ பிரத்தியங்கிரா தேவி பராசக்தியின் அதி உக்கிர ரூபமாக விளங்குகிறாள்.

இதையும் படியுங்கள்:
அர்ஜூணனின் தேர் கொடியில் அனுமன் அமர்ந்தது எப்படி?
Prathiyangara devi

பிரத்தியங்கிரா தேவியின் சிறப்புகள்:

பிரத்தியங்கிரா தேவி நான்கு கரங்களுடன், சிவசக்தியின் ஒரு அம்சமாக விளங்குகிறாள். பகைகளை ஒழிக்கவும், நாம் முயற்சிக்கும் காரியங்களில் வெற்றி பெறவும் உதவுகிறாள்.

பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி போன்ற தீய சக்திகளை நீக்கி, வாழ்க்கையை அமைதியுடன் நடத்துவதற்கும் இந்த வழிபாடு சிறந்தது.

நீண்ட நாட்களாக நிலவி வரும் வழக்குகள், தீராத நோய்கள், கடன் தொல்லைகள் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடவும் பிரத்தியங்கிரா தேவி வழிபாடு உதவுகிறது.

எப்போது வழிபடுவது சிறந்தது?

* தேய்பிறை அஷ்டமி

* அமாவாசை

* பௌர்ணமி

* வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்

* ராகு காலம்

* நள்ளிரவு நேரம் – மிகவும் சிறந்த நேரம்

வழிபாட்டு முறை:

பிரத்தியங்கிரா தேவிக்கு நெய்வேத்தியமாக அதிக காரம் உள்ள புளிசாதம் வைக்கலாம். மிளகாய் ஹோமம் போன்ற சிறப்பு ஹோமங்கள் மூலம், துன்பங்களை தீ வடிவத்தில் தேவி சுமந்து, நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறாள் என்று நம்பப்படுகிறது.

அதன்படி, ஶ்ரீ பிரத்தியங்கிரா தேவி, ஒரு உக்கிர சக்தியாக இருந்தாலும், பக்தர்களுக்கு இரக்கம் செய்யும் பராசக்தியாகவும் விளங்குகிறாள். வாழ்க்கையில் எதிர்ப்பு சக்திகள், தீயவிளைவுகள், நீடித்த பிரச்னைகள் போன்றவைகளிலிருந்து விடுபட, உண்மையான நம்பிக்கையோடு வழிபட்டால், அம்பிகையின் அருளால் வெற்றி கிடைக்கும். குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நேரங்களில், உடல் மற்றும் உள்ள தூய்மையோடு வழிபட்டால், பக்தியின் பலன் பலமடங்கு பெருகும்.

இதையும் படியுங்கள்:
கிருஷ்ணருக்கு புல்லாங்குழலை கொடுத்தது யார்? அது கிருஷ்ணரின் கைவிட்டுப் போனதற்கு காரணம் யார்?
Prathiyangara devi

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com