

ஒரு சமயம், ப்ரசேதஸ் என்ற மஹரிஷி நூறு கோடி ஸ்லோகங்கள் கொண்ட ஒரு நூலை இயற்றினார்.
மூன்று லோகங்க்ளும் அந்த நூலுக்காக போட்டி போட்டன. இந்த போட்டியானது மிக மோசமான நிலையை அடையவே கடவுளே மூன்று லோகங்களையும் அழைத்தார்.
ஒவ்வொரு லோகத்திற்கும் மூன்றில் ஒரு பங்கு தந்து அதை அந்தந்த லோகம் ஏற்குமாறு அவர் கூறினார்.
அதாவது ஸ்வர்க்கம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்று லோகங்களுக்கும் சமமான பங்கு அது.
முப்பத்துமூன்று கோடியே முப்பத்துமூன்று லட்சத்து முப்பத்திமூன்றாயிரத்து முன்னூற்றி முப்பத்தி மூன்று என்பது மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
ஆக இப்போது மீதி ஒரே ஒரு ஸ்லோகம் இருந்தது. அதில் 32 எழுத்துக்கள் இருந்தன. ஆகவே அதில் ஒவ்வொருவருக்கும் பத்து எழுத்துக்கள் அளிக்கப்பட்டன. மீதம் இருந்தவை இரண்டு எழுத்துக்கள்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
இரண்டு எழுத்துக்களை எப்படி மூன்று லோகத்திற்கு சரிசமமாகப் பிரிக்க முடியும்?
ஆகவே அந்த இரண்டு எழுத்துக்களை மூன்று லோகமும் சமமாக மதித்து போற்ற வேண்டும் என்று கடவுள் அறிவுறுத்தினார்.
அந்த இரண்டு எழுத்துக்களே ரா மற்றும் ம ஆகும். மதிக்கவே முடியாத எல்லையற்ற மதிப்பு கொண்ட 'ராம' நாமம் அதுவேயாகும்.
ராம என்பது தேனீ. இதய தாமரையிலிருந்து தேன் என்ற பக்தியை அது உருவாக்குகிறது. தேனீ தான் உட்கார்ந்திருக்கும் இலைகளை விட்டு எழுகிறது. ஆனால் ராம அதன் அழகைக் கூட்டி மணத்தைத் தருகிறது. ராமர் சூரியன் போல.
சூரியன் நீரை தன்னிடம் தனது கிரணங்களால் இழுத்து அதை மேகமாக மாற்றி மழையாக பூமியின் தாகத்தைத் தணிக்க அனுப்புகிறது.
ராம என்ற தெய்வீக ஆற்றலுடைய ஒலியானது நாபியில் பிறந்து நாக்கிற்கு வந்து அங்கு சந்தோஷமாக நர்த்தனமாடுகிறது.
வேதம் செய்யும் பிரகடனமான தத்வமஸி என்பது ராம என்ற எழுத்துக்களில் ஜொலிக்கிறது.
ராம என்பது மூன்று ஒலிகளை உள்ளடக்கியுள்ளது.
ர, ஆ, ம என்ற ஒலிகள் அதில் உள்ளன.
இவற்றில் ர என்பது சத்தியத்தின் சின்னம். (தத் – ப்ரஹ்மம் – கடவுள்)
ம என்பது த்வம் என்பதைக் குறிக்கும் அடையாளமாகும் (த்வம் – ஜீவி – தனிநபர்)
ஆ என்பது இரண்டையும் இணைக்கும் அடையாள சின்னமாகும்.
ராம என்ற எழுத்து எண்கணித சாஸ்திரப்படியும் பொருள் பொதிந்ததாகும்.
ர என்பதற்கு உரிய எண் 2; ஆ என்பதற்கு உரிய எண் 0; ம என்பதற்கு உரிய எண் 5. ஆகவே ராம என்பதைக் கூட்டினால் - ஐந்தும் இரண்டும் கூட்டப்பட்டால் - வருவது 7 என்ற எண்ணாகும். இது ஒரு புனிதமான எண்ணாகும்.
நாம் இசையில் ஏழு ஸ்வரங்களைக் கொண்டுள்ளோம். சொர்க்கத்தில் சப்த ரிஷிகளைக் கொண்டுள்ளோம். ராம என்பதை ஏழு நாட்கள் தொடர்ச்சியாக ஜபித்தால் மிகவும் பலன் தருவதாக ஆகிறது.
பகவான் ஶ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களின் உலக மாநாட்டை மும்பையில் பாரதீயவித்யாபவைன் வளாகத்தில் 16-03-1968 அன்று ஶ்ரீ சத்ய சாயிபாபா துவக்கி வைத்து ஆற்றிய உரை.