வாழைமர வழிபாடு!

Shri Ram Vivah Utsav
Shri Ram Vivah Utsav
Published on

இந்திய பாரம்பரியத்தில் ஶ்ரீ ராமர் மற்றும் சீதையின் திருமணம் நடந்த  நாள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. சூரியகுல நாயகன் ஸ்ரீ ராமருக்கும் மற்றும் மிதிலை நாட்டு இளவரசி  சீதைக்கும் பஞ்சமி நாளில் திருமணம் நடந்ததால், இது விவாஹ பஞ்சமி அல்லது கல்யாண பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விவாஹ பஞ்சமி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவின் சில பகுதிகளில் உள்ள ராமர் கோவில்களிலும் மிதிலாஞ்சல் பகுதிகளிலும் விவாஹ பஞ்சமி கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் உள்ள ஜனக்பூரில் இராமருக்கும் சீதைக்கும் திருமணம் நடந்த இடம் என்பதால் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இது ஸ்ரீ ராம் விவாஹ் உத்சவ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருமணமான ஐந்தாம் நாளில் வாழை மரத்தை வழிபடுகின்றனர். வாழை மரத்தை விவாஹ பஞ்சமி அன்று வழிபடுவது சிறப்பு மிகுந்தது. 

வாழை மரம் எப்போதும் முடிவில்லாமல் தன் வேர்களில் புதிய வாழைக் கன்றுகளை பரப்புகிறது. இது எப்போதும் வாழையடி வாழையாக ஒரு குடும்பம் தழைப்பதற்கு உதாரணமாக உள்ளது. இதனால் வீட்டில் வாழை மரம் நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வாழை மரம் மங்களத்தின் சின்னமாக உள்ளதால் சுப காரியங்களின் போது அது வாசலில், பந்தலில் கட்டப்படுகிறது. உள்ளே வருபவர்கள் முதலில் வாழை மரத்தை பார்த்து விட்டு வர வேண்டும் என்பதை காட்டுகிறது. காலையில் வாழை மரத்தில் முன் கண் விழித்தலும் நல்ல சகுனமாக பார்க்கப் படுகிறது.

வாழை மரத்தில் மஹா லட்சுமியும், மஹா விஷ்ணுவும் வாசம் செய்கின்றனர். உங்கள் வீட்டு முற்றத்திலோ அல்லது தோட்டத்திலோ வாழை மரத்தை நட்டால் அதற்கு நல்ல பலன் கிடைக்கும். விவாஹ பஞ்சமி அன்று வாழை மரத்தை வழிபடுவது வீட்டிற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. இது திருமண தோஷங்களை அகற்றி விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிகிறது.

விவாஹ பஞ்சமி அன்று வாழை மரத்தை வழிபடுபவர்களுக்கு அன்னை சீதா மற்றும்  ஸ்ரீ ராமரின் அனுக்கிரகம் கிடைக்கும். ராமரும் சீதையும் பட்ட துயரங்களை அவரது பக்தர்கள் அடையாமல் இருக்க இருவரும் ஆசீர்வதிப்பர். எனவே, திருமண வாழ்வில் உள்ள தடைகள் திருமண பஞ்சமியன்று சில சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நீக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
திருக்கயிலை மலையைத் தூக்கிய இராவணனால் ஏன் சிவதனுசை தூக்க முடியவில்லை?
Shri Ram Vivah Utsav

திருமணமான ஐந்தாம் நாளில் வாழை மரத்தை வழிபட்டால் வியாழன் தொடர்பான தோஷங்கள் நீங்கும். திருமண வாழ்க்கையோ அல்லது திருமண வாழ்க்கையோ தடைகளை எதிர்கொள்பவர்கள், விவாக பஞ்சமி தினத்தில் வாழை மரத்தை வழிபடுவது, வாழ்க்கைத் துணையுடனான உறவை இனிமையாக்குவதுடன், குருவின் எதிர்மறை தாக்கங்களிலிருந்தும் விடுபட வைக்கும்.

இதையும் படியுங்கள்:
திருக்கார்த்திகையின் மூன்று வகையான கார்த்திகை தீபங்களும் -தோன்றிய வரலாறும்!
Shri Ram Vivah Utsav

கல்யாண பஞ்சமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு மஞ்சள் வண்ண துணிகளை அணிந்து வாழை மரத்தினை வழிபட துவங்க வேண்டும். வாழை மரத்தை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு அதில் சிறிய மஞ்சள் அல்லது சிவப்பு வஸ்திரத்தை கட்ட வேண்டும். மரத்தில் மஞ்சள், சந்தனம் , குங்குமம் இட்டு , மஞ்சள் கயிறு கட்ட வேண்டும். சாம்பிராணி புகை காட்டி, ஊதுவத்தி, நெய் தீபம் ஆகியவற்றை ஏற்றி இல்வாழ்வு செழிக்க வேண்டி வாழை மரத்தை 21 முறை வலம் வந்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் திருமணத் தடைகள் நீங்கும். விரைவில் திருமணம் நடைபெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com