பண வரவுக்கு சில யோசனைகள்!

பண வரவுக்கு சில யோசனைகள்!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

*பூஜை அறையில் ஏற்றும் காமாட்சி விளக்கோடு இரண்டு நெய் தீபம் ஏற்ற, லக்ஷ்மி கடாட்சம் ஏற்படும்.

*வீட்டில் வெள்ளை புறாக்கள் வளர்க்க பணத் தட்டுப்பாடு நீங்கும்.

*சமையல் அறையில் பலவித ஊறுகாய் வைத்திருக்கவும். ஏனெனில், குபேரன் ஊறுகாய் பிரியர் என்பதால் பலவித ஊறுகாய் வைத்திருக்க, குபேர சம்பத்து ஏற்படும்.

*வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்தத் தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜன்ம ஜன்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

*அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. அன்றைய பூஜையை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. முதலில் பித்ருக்களை வழிபட்ட பிறகே எந்த பூஜையும் செய்ய வேண்டும்.

*வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவை வீட்டை விட்டு வெளியேறக் கூடாது. இதனால் லக்ஷ்மி கடாட்சம் வெளியேறி விடும்.

*பொதுவாக, இறை பக்தியில் இருப்பவர்களிடம், அதாவது மஹான்களின் ஆசி பெறுவது புண்ய பலம் சேர்க்கும். இதனால் பண வரவு அதிகரிக்கும்.

*வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை சுண்டலை மகாலக்ஷ்மிக்கு நைவேத்யம் செய்து, நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். இதைத் தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.

*அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவர்கள் கையால் பணம் பெற, லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.

*யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு மூன்றில் சுக்ரன் உச்சம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற, அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.

*பசுவின் கோமியத்தில் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும். வீட்டிலும் தெளிக்கவும். இதை 45 நாட்கள் விடாமல் செய்திட, தரித்திரம் விலகி, பணம் வரவு உண்டாகும்.

*முழு பாசிப்பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊற வைத்து பின் அதனை (மறுநாள்) பறவை, பசுவுக்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர, பண வரவு பெருகும்.

logo
Kalki Online
kalkionline.com