வாசத்தின் விலாசமாக வசிக்கும் வஞ்சுளவல்லி தாயார்!

திருமகள் திருவருள் - 11
Thirumagal Thiruvarul 11
Girl baby playing
நளினி சம்பத்குமார்

பன்முக எழுத்தாளர்: “கல்கி” குழும பத்திரிகைகளில் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக பல கட்டுரைகள். தன்னம்பிக்கை பேச்சாளர்: பல பள்ளி, கல்லூரி மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் தன்னம்பிக்கை உரைகள். ஆன்மீக எழுத்தாளர், பேச்சாளர். குரல் வல்லுனர்/வர்ணனையாளர்: ஆடியோ புத்தகங்கள்,TTD SVBC தமிழ் சேனலின் வழி திருமலை மற்றும் திருச்சானூரில் நடக்கும் வைபவங்களுக்கு நேரலை வர்ணனை .

Updated on
இதையும் படியுங்கள்:
நஞ்செண்ணம் கொண்ட மனதிலும் நல்லறிவைப் புகுத்தும் நாயகி!
Thirumagal Thiruvarul 11

திருமாலின் திருமார்பில் வசிப்பவள்தான் திருமகள். திருமாலை விட்டு ஒரு நொடி கூட பிரியாமல் அத்திருமாலின் பிரியத்திற்கு முழு பாத்திரமாக இருந்து கொண்டு நம்மை எல்லாம் தமது திருவருளால், திருமாலின் திருவருளுக்கு இலக்காகும்படி செய்பவள் மஹாலக்ஷ்மி தாயார்தான். ‘திருமாலே, எங்களைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியோ, சாமர்த்தியமோ, நல்வினைகளோ எங்களிடம் இல்லவே இல்லை. நீயே பார்த்து போனால் போகிறது என்று எங்கள் மீது கருணை கொண்டு எங்களைக் காப்பாற்றினால்தான் உண்டு’ என்று  தன்னை வந்து சரணடைந்தவர்களைக் காப்பதற்காகவே, ‘சரணாகத ரக்‌ஷணம்’ என்ற யக்ஞத்தை செய்து கொண்டிருக்கிறானாம். அப்படி அந்தத் திருமால் யக்ஞத்தை செய்யும்போது அந்த உத்தமமான தர்மத்திற்கு காவல் காப்பவளாக திருமாலின் அருகிலேயே இருந்து கொண்டு அந்த யக்ஞத்தை வெற்றிகரமாக நடத்தி வைக்கிறாள், விஜயலக்ஷ்மியாய்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com