
திருமகளான சீதா தேவியின் பெருமையைச் சொல்லும் காவியமே ‘ஸ்ரீமத் ராமாயணம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடுவர். திருமகளின் திருவருளுக்குப் பாத்திரமான பலரையும் நம்மால் ஸ்ரீமத் ராமாயணத்தில் பார்க்க முடியும். ‘கைங்கர்ய ஸ்ரீ’ என்று போற்றப்படக்கூடிய கைங்கர்ய செல்வம் லக்ஷ்மணருக்குக் கிடைத்தது திருமகளான சீதையின்
கடாக்ஷத்தால்தான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக தம் திருவருளை அள்ளித் தந்த அழகிய திருமகள், அனுமனுக்கு விசேஷ திருவருளை செய்திருக்கிறாள்.