தலைமுறை தலைமுறைக்கும் உடன் இருந்து அருள் செய்யும் திருமகள்!

திருமகள் திருவருள் - 9
Thirumagal continues to bless generations!
Thirumagal Thiruvarul
Updated on
இதையும் படியுங்கள்:
வேதவதிக்கு திருமகள் செய்த திருவருள்!
Thirumagal continues to bless generations!

ஸ்ரீமத் பகவத் கீதையில், ‘தனக்கு நான்கு விதமான பக்தர்கள் இருக்கிறார்கள்’ என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே அர்ஜுனனிடம் சொல்லி இருக்கிறார்.

‘சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந
ஆர்தோ ஜிஞ்ஞா ஸுரர்தார்தீ  ஜ்ஞாநீ ச பரதர்ஷப’

என்று பதினேழாவது அத்தியாயத்தில், “அர்ஜுனா, என்னிடம் வரக்கூடிய  நான்கு விதமான பக்தர்களில் முதல் வகையானவர்கள் ‘ஆர்த்த:’ அதாவது, ஏகப்பட்ட மனக்கஷ்டங்கள், பணக்கஷ்டம், உடல் உபாதையினால் அவதிப்பட்டுக் கொண்டு அந்தக் கஷ்டங்களை நான் தீர்ப்பேன் என்ற நம்பிக்கையோடு வருபவர்கள். இரண்டாமவர், ‘அர்தார்தீ:’ அதாவது, எங்களுக்கு இன்னும் வேண்டும் என மென்மேலும் வேண்டும் என்ற வேண்டுதலோடு வருபவர்கள். மூன்றாமவர், ‘ஜிஞ்ஞாஸு:’ தங்களுக்கு ஆத்ம ஞானம் வேண்டும் எனக் கேட்டு வருபவர்கள். நான்காமவர்கள் ’ஞானி’ எங்களுக்கு நீ மட்டுமேதான் வேண்டும் கிருஷ்ணா. வேறெதுவுமே வேண்டாம், வேறெதுவும் எங்களுக்குத் தேவையும் இல்லை. நீ எங்களோடு எப்பவும் இரு. அது எங்களுக்குப் போதும் என்றிருப்பவர்கள்” என்கிறார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com