பூஜைக்கு எதற்கு அருகம்புல், வெற்றிலை, மாவிலை மற்றும் வாழை இலை?

Five elements in worship
Five elements in worship
Published on
Deepam strip

பூஜைக்கு எதற்கு அருகம்புல், வெற்றிலை, மாவிலை மற்றும் வாழை இலை?

அருகம்புல் சாத்தி பிள்ளையாரைக் கும்பிட்டா, அது நிலத்தை வணங்குவதாக பொருள் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ரீதியாக அருகம்புல் பின்வரும் வகைகளில் பயன்படுகிறது.

  • அருகம்புல் சாறு குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.

  • அருகம்புல் சிறுநீர் நன்கு பிரிய உதவும்.

  • அருகம்புல் ரத்தத்தை சுத்தப்படுத்தி, தோல் நோய்கள் வராமல் தடுக்கும்.

  • மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்கள் அருகம்புல் சாறு குடித்தால் கட்டுப்படும்.

  • அருகம்புல்லின் சாறு வெட்டுக் காயங்களை ஆற்றும் தன்மை கொண்டது.

  • அருகம்புல், தலைவலி, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் குணமாக்கும் என்று கூறப்படுகிறது.

வீட்டு வாசலில் மாவிலையைத் தோரணமாக கட்டி கும்பிட்டா அது நீரை வணங்குவதாக பொருள் கொள்ள வேண்டும். ...

  • மாவிலை ஆன்மிக பயன்பாட்டில் மருத்துவ ரீதியாகவும் பின்வருமாறு பயன்படுகின்றன.

  • மாவிலையில் உள்ள கூட்டுப் பொருட்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகின்றன, எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • மாவிலையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்க உதவுகிறது, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

  • மாவிலை டீ அல்லது கொதிநீரில் மாவிலைகளை சேர்த்து, சாறு வடிகட்டி அருந்தி வந்தால் இரைப்பை மற்றும் ஜீரண உறுப்புகளின் இயக்கம் சீராக இருக்கும், என்று சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

  • மாவிலைத் தோரணங்கள் வீடு மற்றும் கோவில்களில் கட்டுவதால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நடுவீட்டில், படையல் போடுவதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், அது நெருப்பை வணங்குவதாக எண்ண வேண்டும்.

  • வாழை இலையில் படையல் போட்டு விட்டால் நாம் வணங்கும் பிள்ளையாரா சாப்பிட போகிறார். நாம் தானே அதில் சாப்பிட போகிறோம் அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

  • வாழை இலையில் உணவு பரிமாற பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு இயற்கையான தட்டு போல செயல்படுகிறது. மேலும், இது உணவுடன் ஒட்டாமல் இருப்பதால், சுத்தமான மற்றும் எளிதில் அப்புறப்படுத்த கூடிய ஒரு வழியாகும்.

இதையும் படியுங்கள்:
வெற்றிலை பற்றிய சுவாரசியமான தகவல்கள்!
Five elements in worship
  • வாழை இலையில் உள்ள அலெர்ஜிக் எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், குடல் புண்கள் மற்றும் வீக்கத்தை குணப்படுத்த உதவுகிறது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

  • வாழை இலைகள் ஒரு இயற்கையான மற்றும் மக்கும் தன்மை கொண்டவை. இது பிளாஸ்டிக் மற்றும் காகித தட்டுகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது. இது சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவுகிறது.

  • வாழை இலைகள் பூஜைகள் மற்றும் சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது புனிதமானதாக கருதப்படுகிறது.

மஞ்சள் தண்ணியில வேப்பிலையை போட்டு கும்பிட்டா… அது காற்றை வணங்குவதாக பொருள் கொள்ள வேண்டும்.

வெற்றிலை தாம்பூலத்தை வைத்து கும்பிட்டால், அது ஆகாயத்தை வணங்குவதாக எண்ண வேண்டும். இதிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

  • வெற்றிலை செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

  • வெற்றிலையில் உள்ள பொருட்கள் வாயுவை வெளியேற்ற உதவுகிறது. இது வயிற்று உப்புசத்தை தடுக்கிறது.

  • வெற்றிலை நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இது நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக, படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுப்பது நல்லது என்று கூறப்படுகிறது.

  • வெற்றிலை சாற்றை காதில் ஒரு சொட்டு விட்டால், காது வலி மற்றும் சீழ் பிடித்தல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

  • வெற்றிலை ஈறுகளை பலப்படுத்தும், பல் வலியைப் போக்க உதவுகிறது.

  • வெற்றிலை உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது. மேலும், இது கல்லீரல், மண்ணீரல் மற்றும் மூளையை பலப்படுத்துகிறது.

  • வெற்றிலையை வெறுமனே மென்று சாப்பிடலாம் அல்லது அதன் சாற்றை குடிக்கலாம். மேலும், சில பகுதிகளில் வெற்றிலை, சுண்ணாம்பு மற்றும் பாக்கு சேர்த்து பான் எனப்படும் ஒரு பொருளாகவும் உட்கொள்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பூர்ணகும்பத்தில் மாவிலை வைக்கப்படுவதன் காரணம் தெரியுமா?
Five elements in worship

நம் முன்னோர்களின் ஆன்மீக வழிபாட்டில் மருத்துவ குணங்கள் அடங்கிய பொருட்களைக் கொண்டு படைத்து நம்மை சாப்பிட வைத்துள்ளார்கள் என்பது மிக சிறந்த ஒன்றுதானே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com