ஆகஸ்ட் 12: உலக யானைகள் நாள் - மாநிலங்கள் கொண்டாடும் யானைகள்!

World Elephant Day
World Elephant Day
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் நாளில் உலக யானைகள் நாள் (World Elephant Day) கொண்டாடப்படுகிறது. உலகத்தில் யானைகள் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்ட 65 அமைப்புகள் மற்றும் யானைகள் இருக்கும் நாடுகளில் யானைகள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நாளில், தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாக இருக்கிறது. 

கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தின் ஆறாட்டுப்புழா எனுமிடத்திலுள்ள ஆறாட்டுபுழா கோயிலில் நடத்தப்பெறும் ஆறாட்டுப்புழா பூரம் திருவிழாவின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் மாலை ‘சாஸ்தவிந்தே மேளம்’ என்று அழைக்கப்படும் விழாவின் ஒரு பகுதியாக, தாளக் குழுக்கள் மற்றும் அலங்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கேரளாவில் பல கோயில்களில் பூரத்தின் போது யானைகள் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பிக்கப்படுகின்றன.  

கேரள மாநிலத்தில் யானைகளுக்கு தங்களால் இயன்ற பழங்கள், கரும்பு, வெல்லம் மற்றும் அரிசி போன்றவற்றை வழங்கி ஆசி பெறும் நிகழ்வினை ஆனையூட்டு என்கின்றனர். கேரளாவில் மலையாளத்தின் கற்கடக மாதப் பிறப்பின் போது திருச்சூர் நகரிலுள்ள வடக்குநாதன் கோயிலில் (சிவன் கோயிலில்) இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது. 

2002 ஆம் ஆண்டு முதல் அசாம் மாநில வனத்துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து, ஒவ்வோர் ஆண்டும் அசாம் மாநிலத்திலுள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில், காசிரங்கா யானைத் திருவிழா நடத்தப்பெறுகிறது. யானையின் தலை முதல் பாதம் வரை அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆசிய யானைகள் இவ்விழாவில் பங்கேற்கின்றன. இவ்விழாவிற்கு வரும் யானைகள் அணிவகுப்பு, ஓட்டப்பந்தயம், கால்பந்து, நடனம் என பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்கின்றன.

இதையும் படியுங்கள்:
ஆகஸ்ட் 12: உலக யானைகள் நாள் - மனிதனின் தலையீடால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் யானைகள்!
World Elephant Day

கர்நாடக மாநிலம், மைசூரு தசரா திருவிழாவில் விஜயதசமி நாளில் நடைபெறும் ஊர்வலத்தில் யானைகள் முக்கிய இடம் பிடித்துள்ளன. முன்னணி யானை சாமுண்டேசுவரி தேவியுடன் தங்க அம்பாரியைச் சுமந்து செல்கிறது. இது, 750 கிலோகிராம் எடை கொண்டது. மேலும் தங்கத்தால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள செய்ப்பூர் நகரில், மார்கழி மாதத்தில் ஹோலி பண்டிகை நாளில் நடைபெறும் திருவிழாவில் யானைத் திருவிழா நடைபெறுகிறது. இதில் யானையின் போலோ விளையாட்டும், யானை நடனமும் இடம் பெறுகின்றன. 

logo
Kalki Online
kalkionline.com