கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது தெரியுமா?

கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்பதற்கான காரணங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
beach
beach
Published on

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து தன்னுள் நீரை அடக்கி வைத்திருக்கும் கடல் பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் கடல் நீரை சிறிது கூடக் குடிக்க முடியாது. உப்புக் கரிக்கும். கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்பதற்கான காரணங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஆறுகள்:

வானிலிருந்து பொழியும் மழை நீர் அமிலத்தன்மையுடன் இருக்கும். இது நிலத்தில் உள்ள பாறைகளில் இருந்து உப்புகள் மற்றும் கனிமங்களை கரைத்து தன்னுடன் எடுத்துச் செல்கிறது. கரைந்து பொருள்கள் ஆறுகளாக ஓடி அவை கடலில் சென்று கலக்கின்றன. அதனால் கடல் நீர் உப்பாக இருக்கிறது.

வெப்ப நிலைக் கிணறுகள்:

கடல் தளத்தில் உள்ள வெப்பநிலைக் கிணறுகள் உப்புகள் மற்றும் கனிமங்களை கடலில் வெளியேற்றுகின்றன. அதனால் நீர் இன்னும் அதிகமாக உப்புத் தன்மை பெறுகிறது.

ஆவியாதல்:

கடலின் மேற்பரப்பில் இருந்து நீர் ஆவியாகும் போது உப்பு அதில் படிந்து விடுகிறது.

இயற்கை வேதியல் மாற்றங்கள்:

கடல் நீரில் உள்ள வேதியல் மாற்றங்கள் புதிய உப்பு சேர்க்கைகளை கடல்நீரில் உருவாக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
கடல் வாழ் உயிரினங்கள் இல்லையென்றால்... எல்லாமே போச்சே!
beach

சேகரிப்பு:

பல மில்லியன் ஆண்டுகளாக, கடல் உப்புகளை சேகரித்து வருகிறது. இதனால் உப்பின் அளவு அதிகரித்து கடல் நீர் உப்புக் கரிக்கிறது.

கடல் வாழ் உயிரினங்கள்:

சில கடல் வாழ் உயிரினங்கள் இறந்த பின்பு அவற்றின் உடலில் சேமிக்கப்பட்டிருந்த உப்புகள் நீரில் கரைந்து விடுகின்றன.

கடல் நீரின் பருமன்:

கடல் நீர் மிகப்பெரிய அளவில் இருப்பதால் அதில் சேரும் உப்புகள் தண்ணீரால் தணிக்கப்படுவதில்லை.

எரிமலை செயல்பாடுகள்:

கடலுக்குள் உள்ள எரிமலை செயல்பாடுகள் பல்வேறு கனிமங்களை வெளியேற்றுகின்றன. அவை கடலுக்குள் பல்வேறு வேதியியல் பொருட்களை வெளியேற்றுகின்றன.

இதையும் படியுங்கள்:
அசுத்தமான நீரில் போலியோ வைரஸ் – ஆய்வில் அதிர்ச்சி!
beach

எரிமலை வெடிப்புகளின் போது கடல் நீரில் வேதியல் மற்றும் தாவர தொடர்பான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

கடல் நீரின் முக்கிய உப்புகள்:

சோடியம் குளோரைடு, மக்னீசியம் சல்பேட், பொட்டாசியம் நைட்ரேட், மற்றும் சோடியம் பைக்கார்பனேட். இவை சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், குளோரைடு, சல்பேட், நைட்ரேட், மற்றும் கார்பனேட் போன்ற அயன்களாக கரைகின்றன.

அனைத்து கடலின் உப்புகளை நிலத்தில் பரப்பினால், அது 500 அடி (166 மீட்டர்) அளவில், ஆழமான ஒரு அடுக்கு உருவாக்கும்.

ஏரி நீர் ஏன் உப்பாக இல்லை?

ஏரிகள் குறைந்த அளவிலான சோடியம் மற்றும் குளோரைடு கொண்ட கனிமங்களை உள்ளடக்கியதால் குறைந்த உப்புத்தன்மையுடன் இருக்கும். இந்த ஏரிகளில் இருந்து தண்ணீர் கடலுக்கு செல்கிறது, இதனால் அவற்றின் உப்புத்தன்மை குறைகிறது. ஒரு தண்ணீர் சொட்டு ஏரியில் சுமார் 200 ஆண்டுகள் தங்குகிறது. இதற்கு மாறாக, கடலில் தண்ணீர் 100–200 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்க முடியும். இதனால் தான் ஏரி நீர் உப்புக் கரிப்பதில்லை; அதே சமயம் கடல் நீர் உப்புக் கரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
கேரளாவுக்கு ட்ரிப் போறீங்களா? அப்போ இந்த முக்கியமான பீச் ஸ்பாட்களை மிஸ் பண்ணிடாதீங்க!
beach

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com