செத்துவிட்டதுபோல் நடிக்கும் ‘கோட்டி’ – அது என்ன?

Coati animal...
Coati animal...
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

* கோட்டி (Coati) என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு.

* இந்த விலங்கு பல மணி நேரங்களை இரை தேடிச் செல்வதிலேயே செலவிடும்.

* இரவில் நடமாடும் ஊனுண்ணியான (Carnivore) ரக்கூன் குடும்பத்தைச் சேர்ந்த இந்த விலங்கு, புழுக்கள், பல்லிகள், சிலந்திகள், எலிகள், பழங்கள், பறவைகளின் முட்டைகள் என்று பல வகையான உணவு வகைகளை உண்ணும்.

* இந்தக் கோட்டிகளின் உடலும் வாலும் கொஞ்சம் நீளம். இதன் மூக்கு நீளமாக இருந்தாலும், வளைந்து கொடுக்கும் தன்மையுடையது.

* இதன் உடல் சுமார் 66 சென்டிமீட்டர் நீளம் என்றால், அதன் வால் இன்னொரு 66 சென்டிமீட்டர் நீளமுடையது.

* இது ஒரு வெப்பமண்டலப் பாலூட்டி இனமாகும். பொதுவாக, தென்மேற்கு அமெரிக்காவிலிருந்து வட அர்ஜென்டினா வரையுள்ள பகுதிகளில் காணப்படுகிறது.

* பெண் கோட்டிகள் கூட்டம் கூட்டமாகச் செல்லும். ஒவ்வொரு கூட்டத்திலும் சுமார் 20 கோட்டிகள் இருக்கும்.

* ஆண் கோட்டிகளோ தனிமையாகத் திரியும். இனப்பெருக்கக் காலத்தின்போது, ஓர் ஆண் கோட்டி பெண் கூட்டத்திற்குள் புகுந்து பெண் கோட்டிகளுடன் இணையும்.

* கருவுற்றக் கோட்டிகளெல்லாம் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, மரங்களில் கூடு கட்டக் கிளம்பிவிடும். ஒவ்வொரு பெண் கோட்டிக்கும் மூன்று அல்லது நான்கு குட்டிகள் வரை பிறக்கும்.

* குட்டிகளைப் பெற்று ஆறு வாரங்களுக்குப்பிறகு, அம்மா கோட்டிகள் குட்டிகளைக் கூட்டிக்கொண்டு பழையக் கூட்டத்துடன் சேர்ந்துகொள்ளும். புசுபுசுவென்று இருக்கும் இந்தக் குட்டிக் கோட்டிகள் பார்ப்பதற்குப் பந்து உருண்டு வருவதுபோல் காட்சியளிக்கும்.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகச் சிறிய முட்டை இடும் பறவை எது தெரியுமா?
Coati animal...

* காடுகளில் உணவு தேடித் திரியும்போது இந்தக் கோட்டிகள் எப்போதும் மோப்பம் பிடித்துக்கொண்டும் மண்ணை தோண்டிக்கொண்டும் இருக்கும்.

* இதனால் விவசாயிகளுக்கு இவற்றால் மிகவும் இடையூறு நேரும். சோளக் காடுகளும் கோழிப் பண்ணைகளும் இவற்றினால் எளிதில் அழிக்கப்பட்டு விடும்.

* வேட்டைக்காரர்களையும் இவை எளிதில் ஏமாற்றிவிடும். இந்தத் தந்திரமான பிராணிகள் வேட்டைக்காரர்களைப் பார்த்தவுடன் மரப்பொந்துகளில் புகுந்துவிடும்.

* அப்படி முடியாவிட்டால் துப்பாக்கி சத்தம் அல்லது கை தட்டும் சத்தம் கேட்டவுடன் கீழே விழுந்து செத்து விட்டதுபோல் நடிக்கும். அதை எடுத்துச் செல்ல வேட்டைக்காரன் அருகில் வருவதற்குள் ஓடிவிடும்!

logo
Kalki Online
kalkionline.com