கதைப்பாடல்: பாரதி கேட்ட 'வீரப் பலகாரம்' !

Poet Bharathiyar
Poet Bharathiyar
வளர்கவி

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர: வளர்கவி கோவை கவிஞர் இதுவரை 6 நூல்கள் பதிப்பித்தவர். சிறுவர்க்கான படைப்பிலக்கியத்தில் குழந்தைகளுக்கான கதைப்பாடல்கள் எழுதிவருபவர். பட்டி மன்றப் பேச்சாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், அகில இந்தியவானொலி கோவையில் 18 ஆண்டுகள் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சமூக அறிவியல் பட்டதாரி ஆசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தினமலர் கவிதைச்சோலைப்பகுதியில் அதிக படைப்புகள் வெளியிட்டவர். சிறுவர் மணி நெய்வேலி, மாலை முரசு கோவை, பாரதி இலக்கிய அமைப்பு சென்னை, நடத்திய கவிதைப் போட்டிகளில் முதற்பரிசு வென்றவர்.

Updated on

நண்பர் ஒருவர் அழைத்ததால்

நண்பகல் உணவு உண்பதற்கு

செந்தமிழ்ப் பாரதி போனாராம்

சாப்பிட இலைமுன் அமர்ந்தாராம்.

அழைத்தவர் விருந்தில் பலவேறு

அன்ன வகைகள் வைத்தாராம்

'தின்னத் திகட்டும் பலபண்டம்

தின்ன வைத்தீர்! அகம்மகிழ்ந்தேன்!

இருந்தும் இலையில் ஒன்று இல்லை!!

எனக்கு வருத்தம்!' என்றாராம்.

விருந்துக் கழைத்தவர் வேதனையில்,

'வேந்தே! சொன்னால் ஓர் நொடிக்குள்

விருந்தில் அதனைச் சேர்த்திடுவேன்!

வேதனை தீர்ந்து அகம்மகிழ்வேன்!

சொல்ல வேண்டும்!' எனப்பணிந்து

சொன்னார் பாரதி தோழரவர்.

“வீரப்பலகாரம்!” இவ்விலையில்

வைக்க மறந்தீர்! வேதனைதான்!

விரும்பும் உணவு அதுஒன்றே

விரைந்து வைக்க ஆவனசெய்!

வைத்தால் நிறையும் மனமென்றார்!”

விருந்துக்கு அழைத்த அந்நண்பர்

அக்கம் பக்கம் அயலார்கள்

இருக்கும் மக்கள் பலரிடத்தும்

“வீரப் பலகாரம் என்றாலோ

என்ன?” என்றே கேட்டாராம்!

யார்க்கும் அங்கே தெரியவில்லை!

யாரும் அதனை உண்டதில்லை!

கேட்டுச் சொல்வீர் கவிஞரிடம்

என்றார் அழைத் தவர் மனையாள்.

பாரதி தன்னை மிகப்பணிந்து,

'நீர் கேட்ட வீரப்பலகாரம்

எதுவென விளக்கிச் சொன்னாலோ

அதனைப் படைப்பேன்' என்றாராம்!

இதையும் படியுங்கள்:
முயல் கூட்டமும் தவளைக் கூட்டமும்!
Poet Bharathiyar

'வீரப் பலகாரம் எதுவென்று

பாண்டியா! உனக்குத் தெரியாதா?!!

எதனைச் சொல்ல நாடிநரம்பு

எல்லாம் ஏறும்? முறுக்கு!

என்று முறுக்கே வீரப் பலகாரம்!

விரைந்ததைக் கொண்டா!' எனக்கேட்டு,

பாரதி முறுக்கை விருப்போடு,

பிள்ளை போல மகிழ்வோடு

மொறுக்மொறுக்கென உண்டாராம்.

இருக்கையில் வாழ்வின் முழுநேரம்

இறந்து சாய்கிற அந்நேரம்

முறுக்காய் இருந்தவர் நம்மன்பு

முண்டாசுக் கவிஞர் பாரதியாம்!

பிறக்கையில் பதினொன்று என ரெண்டு

இறக்கையில் பதினொன்று என ரெண்டு

ஒன்று இருக்கப் பிறந்தவராம் - நாம்

ஒன்றாய் இருக்கச் சொன்னவராம்!

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதைகள்: உறுதியான மனமும், உண்மையான வெற்றியும்!
Poet Bharathiyar
logo
Kalki Online
kalkionline.com