உலகில் மிகப்பெரிய தலைப்பாகையை அணிபவர் யார்?

Major Singh Largest Turban
Major Singh Largest Turban
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

நிஹாங் என்பது சீக்கிய வீரர்களின் வரிசையாகும். இவர்கள் அணியும் வட்டமான தலைப்பாகையினை தூமாலா என்று சொல்கின்றனர். பெரும்பான்மையான நிஹாங் சீக்கியர்கள் சிறிய அளவிலான தலைப்பாகையையே அணிவார்கள். யார் பெரிய தலைப்பாகை அணிவது என்பதற்காக, இவர்களிடையேப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்பெறும் நீல நிற ஆடைகள், வாள்கள் மற்றும் ஈட்டிகள் போன்ற பழங்கால ஆயுதங்கள் மற்றும் எஃகு துணிகளால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகள் போன்றவைகளின் மூலம் அவர்களின் வீரம் போற்றப்படுவதுடன், அவர்களது தலைப்பாகையின் அளவும் அதிகரிக்கிறது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசைச் சேர்ந்த நிஹாங் சீக்கியரான மேஜர் சிங் (Major Singh) என்பவர், கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் உலகின் மிகப்பெரிய தலைப்பாகை (Largest Turban) அணிந்தவராக 2010 ஆம் ஆண்டிலிருந்து இடம் பெற்றிருக்கிறார். இவர் தலையில் அணிந்திருக்கும் தலைப்பாகை 400 மீட்டர் (1312 அடி) நீளம் கொண்ட துணியால் ஆனது. இந்தத் தலைப்பாகையை அவர் 100-க்கும் அதிகமான ஹேர்பின்கள் மற்றும் 51 மதக்குறியீட்டுச் சின்னங்களையும் பயன்படுத்திக் கோபுர வடிவில் அணிந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
மாணவர்களே! மேற்படிப்பைத் தொடங்கும் முன் இதையும் கொஞ்சம் பாருங்க!
Major Singh Largest Turban

இவர் அணிந்திருக்கும் தலைப்பாகையின் எடை சுமார் 35 கிலோ அல்லது தோராயமாக 77 பவுண்டுகள். அவரது எடை வகுப்பில் வேறு யாரும் போட்டிக்கு இல்லை என்பதால், 2010 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தொடர்ந்து உலகக் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இருந்து வருகிறார்.

இவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் பெரிய தலைப்பாகைகள் அனைத்தும் 10 கிலோ சிறியவைகளாகவே இருக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com