
"தலைவர் ஜெயில்ல இருக்கும்போதுகூட கட்சிக்காகப் பாடுபடறாரு!"
"எப்படிச் சொல்றே.?"
" ''கைதிகள் அணி'ன்னு ஒண்ணை ஆரம்பிச்சு ஜெயில்ல இருந்த கைதிகளை எல்லாம் கட்சியில சேர்த்து விட்டுட்டாரு!"
– வி. ரேவதி, தஞ்சை
"அநியாயமா இருக்குதே…
நீ என்ன சொன்னே?"
"இதயத்தில் இருக்கும் என்னவளுக்கு குளிருமேன்னு சொன்னேன்!"
– எம். அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி
"மேடைப் பேச்சுல தலைவர் இப்பல்லாம் குட்டிக் கதை சொல்றதில்லையே, ஏன்?"
"கூட்டம் கலைஞ்சிடுதாம்!"
– வி. ரேவதி, தஞ்சை
"என்னோட ராசிக்கு இன்னிக்கு வெற்றின்னு போட்டிருக்கு."
"அதையெல்லாம் நம்பி என்னோட சண்டைக்கு வராதீங்க."
– தீபிகா சாரதி, சென்னை
"நான்தான் உன்னைக் காதலிக்கிறேன்னு உங்க அப்பாகிட்ட சொல்லிட்டியா லதா?"
"இல்லையே….!?"
"பின்ன எப்படி திடீர்னு என் கையை நீட்டச் சொல்லி, 'நீ காதலிக்கிற பொண்ண கட்டிக்கிட்டா வாழ்க்கையில 'ஓகோ'ன்னு வருவே'ன்னு சொன்னாரு…?"
– வி.ரேவதி, தஞ்சை
"வாய்தானே வலிக்கும், கழுத்து எப்படி வலிக்குது?"
"என் பொண்டாட்டி பேசிக்கிட்டே இருக்கா… நான் தலைய தலைய ஆட்டிக்கிட்டே இருக்கேனே…"
– எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி