கவிதைத் துளிகள் 3 - ஒரு பெரியவரின் ஆதங்கம்..!

Tamil poetry
Tamil poetry
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

கவிதைத் துளி 1 - ஒரு பெரியவரின் ஆதங்கம்!
முதலில்…
கிணற்றைக் காணுமென்றுதான்…
காமெடி செய்தார்கள்!
அப்புறம்…
குட்டை...குளம்…
ஆறு...ஏரியென்று…
அத்தனையும் காணாதது
உண்மை என்கிறார்கள்!
போகிற போக்கைப் பார்த்தால்…
கடல்களும் கூட
காணாமல் போய்விடுமோ?!
நல்லவேளை!...
அப்போது நாமிருக்க மாட்டோம்!
நமக்குத்தான்…
- வயசாகி விட்டதே!

இதையும் படியுங்கள்:
கவிதை: பொங்கட்டும் புதுப் பொங்கல்!
Tamil poetry

கவிதைத் துளி 2 - அன்றுதான் அவன்…!
அன்றுதான் அவன்…
அந்த …
ஃபிட்னஸ் சென்டரில்…
அத்தனை
உடற்பயிற்சி எந்திரங்கள்
இருப்பதை
அறிந்து கொண்டான்!
ஏனெனில்
அன்று அவள்…
ஃபிட்னஸ் சென்டருக்கு
வரவில்லை!

இதையும் படியுங்கள்:
கவிதை: இளைஞனே! மனிதர்களைக் காப்பாற்ற வா!
Tamil poetry

கவிதைத் துளி 3 - அறியாப் பாலகன்…!
கருத்தரித்திருக்கும் அம்மா…
அவசரமாக அப்பாவோடு
ஆஸ்பத்திரி போனதும்…
தனக்கு மிகவும் பிடித்த
சிறப்பான சில பொம்மைகளை…
தூசுதட்டி சுத்தப் படுத்தினான்
அந்தப் பாலகன்...
பிறக்கப் போகும் குழந்தைக்காக!
-ஆஸ்பத்திரியிலோ…
அம்மாவுக்கு நடக்கிறது
-அபார்ஷன்!

logo
Kalki Online
kalkionline.com