கவிதை: பொங்கட்டும் புதுப் பொங்கல்!

Pongal Festival
Pongal Festival
Published on

பொங்கலோ பொங்கலென்று

புதுப்பானையில்  புத்தரிசி

பொங்கிடும் வேளையிலே

பூக்கும் உற்சாகத்துடன்

கூக்குரல் இடும்போது 

குவலயமே மகிழ்வினிலே

லயித்து உயிர்த்திடுமே

நலமெங்கும் பரவிடுமே!


உணவால்தான் உயிர்ப்பறவை 

ஒவ்வொருநாளும் மேலெழும்பி

சிறகை விரித்துவிடும்!

சிறப்புக்கள் செய்துவரும்!

பிறவி நீண்டிடவும் 

பெரும்பயனை அடைந்திடவும்

பொங்கலே உயிர்நாடி!

பொங்கிடுவோம் நலம்நாடி!

ஊருக்காய் உழைத்துநித்தம்

ஓடாகிப்போகும் உழவன்

பெயராலே ஒருதிருநாள்!

பெருகிடும் மக்களுக்கே

உதிரத்தை வியர்வையாக்கி

உறுபசி போக்கிடவே

தன்னையே வருத்திநிற்கும் 

தகைமை சான்றவனுக்கு ஒருசல்யூட்!

இதையும் படியுங்கள்:
கவிதை; உயர்வை அடைய…!
Pongal Festival

இஞ்சியும் மஞ்சளும்

இனிதான நீள்கரும்பும் 

இத்தைத் திருநாளில்

எல்லோருக்கும் கிடைத்திடவே

உழவனின் தோளோடுதோள் நின்று

தொண்டாற்றும் மாடுகளுக்கும்

விழாவெடுத்து மகிழ்ந்திடுவோம்

விழுமிய நன்றியுடனே!

இதையும் படியுங்கள்:
கவிதை: இளைஞனே! மனிதர்களைக் காப்பாற்ற வா!
Pongal Festival

காணும்பொங்கல் அன்றைக்குக்

கண்ணியம் மிகக்கொண்டே

உற்றார் உறவினரை

ஒருபோதும் மறவாது 

அனைவரையும் சந்தித்து

மூத்தோரிடம் ஆசிபெற்று 

மூத்தவர்கள்நாம் ஆசிவழங்கி

முகிழச்செய்வோம் உறவுகளை!

இதையும் படியுங்கள்:
கதைப் பாடல்: குட்டி குட்டி சுண்டெலி!
Pongal Festival

பொங்கட்டும் மகிழ்ச்சி எங்கும்!

பொங்கட்டும் அமைதி என்றும்!

பொங்கட்டும் நல்ல வாழ்வு!

பொங்கட்டும் புதுப் பொலிவு!

பொங்கட்டும் பெரு விளைச்சல்!

பொங்கட்டும் புதிய வாழ்க்கை…ஞ

என்றைக்கும் உழைக்கும் நமது

இனிய விவசாயிகள் வாழ்வில்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com