‘பொன்னியின் செல்வன்’ அமர்க்களத்துக்கு நடுவில் ‘பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5G சேவையைத் தொடங்கிவைத்தார்’ என்ற செய்தி ஓரத்தில் ஒளிந்துகொண்டு இருந்தது. தீபாவளி முதல் பல நகரங்களில் ‘5ஜி’ வரப் போகிறது. இந்த வாரம் கடைசிப் பக்கத்தில் அதைப் பற்றிய கேள்வி-பதில்... 5ஜி என்றால் என்ன ஜி ? 5ஜி என்பது ஐந்தாவது தலைமுறை நெட்வெர்க். இது இப்போது நீங்கள் உபயோகிக்கும் 4ஜியை விட 100 மடங்கு வேகமாகவும், தாமதம் இல்லாமல், பாதுகாப்பான தொழில்நுட்பத்துடன் எதிர்காலத்துக்கு ஏற்றதாக இருக்கும் என்கிறார்கள். இப்போது உள்ள 4ஜிக்கு என்ன கேடு ? எல்லாம் சரியாகத்தானே போய்க்கிட்டிருக்கு ? ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ போன்ற வேகமான ரயிலில் ஆன்லைனில் படம் பார்க்கும் போது படம் விட்டு விட்டு வரும் அல்லது கதாநாயகி குளிக்கும் போது நின்றுவிடும். ஒரு டவரிலிருந்து இன்னொரு டவர் மாறும்போது இந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. 5ஜில் இந்த பிரச்னைகள் இல்லாமல் நிம்மதியாக குளிக்கலாம். குளிக்கும் காட்சி நிற்பது பிரச்னையா ? இதற்காகவா 5ஜி ? அப்படி இல்லை. இனி வரும் வருடங்கள் பலரும், பலதும் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளப் போகிறது. இவை எல்லாவற்றிற்கும் அடிப்படைத் தேவை வேகமான ‘இணைப்பு’ . 5ஜி அதைக் கொடுக்கப் போகிறது. பலரும் சரி, அது என்ன ’பலதும்’ ? இனி வீட்டில் இருக்கும் எல்லாம் டிஜிட்டலாகிவிடும். விளக்கு, மின்விசிறி, ஏசி, மிக்ஸி, டிவி, வாஷிங் மிஷின் என்று சகலத்தையும் இணைத்துவிடப் போகிறார்கள். இந்த உபகரணங்களில் செயற்கை அறிவுடன் கூடிய சென்சார்கள் இருக்கப் போகிறது. இவற்றிற்கும் எல்லாம் வேகமான இணைப்பு என்பது அடிப்படைத் தேவை. சும்மா கப்சா அடிக்காதீர்கள். இவற்றை எல்லாம் ஏன் 5ஜியில் இணைக்க வேண்டும் ? உதாரணத்துடன் விளக்க முடியுமா என்று பார்க்கிறேன். சென்னையில் அன்று வெயில் மிக அதிகம். நீங்கள் விமான நிலையத்திலிருந்து தி.நகரில் உங்கள் இல்லத்துக்கு காரில் வந்துகொண்டிருக்கிறீர்கள். சைதாப்பேட்டை வரும்போது உங்கள் வாகனத்தில் இருக்கும் ஜி.பி.எஸ்., “வீட்டுக்கு இன்னும் 15 நிமிடத்தில் சென்றுவிடுவீர்கள்” என்று அறிந்துகொண்டு, 5ஜி மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் ஏசிக்கு ‘சார் ரொம்ப டையர்டாக வருகிறார், ஏசியை 18 டிகிரியில் வை’ என்று தகவல் அனுப்பி உங்கள் ஏசியை ஆன் செய்துவிடும்! நீங்கள் வீட்டில் நுழைந்தவுடன் ஹாயாக ரெஸ்ட் எடுக்கலாம்!.சில வருடங்களில் ’டாய் ஸ்டோரி’ படத்தில் வருவது மாதிரி உங்கள் வீட்டு வசந்த & கோ உபகரணங்கள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளப்போகிறது. . இன்ட்ரஸ்டிங்... வேறு ஏதாவது உபயோகம் ? இருக்கிறது. சில வருடங்களில் ஓட்டுனர் இல்லாத வாகனங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளப் போகிறது. ஒரு கார் வேகமாக போய்க்கொண்டு இருக்க, ஒரு பள்ளத்தில் ஏறி இறங்குகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்... உடனே அதன் வேகத்தைக் குறைத்துக்கொள்ளும். உடனே அதன் சக்கரத்தில் உள்ள உணர்கருவிகள்(sensor) இந்த தகவலை 5ஜி மூலம் பின்னால் வரும் வாகனங்களுக்கு ’எவனோ பாடாவதி குழியை நோண்டிப் போட்டிருக்கிறான் பார்த்து வாங்க’ என்று எச்சரிக்கை அனுப்ப, வரிசையாக வரும் வாகனங்கள் தங்கள் வேகத்தைக் குறைத்துக்கொள்ளும். இவை எல்லாம் நீங்கள் காரில் 5ஜியில் நெட்ப்பிளிக்ஸ் பார்த்துக்கொண்டு இருக்கும் போது 0.1 வினாடிகளில் நிகழ்ந்துவிடும்! இதுபோல அதிவேகத் தகவல் போய்ச் சேர 5ஜி போன்ற தொழில்நுட்பம் அவசியம். காரிலிருந்து மருத்துவர் மருத்துவமனையில் இருக்கும் ரோபோ மூலம் அறுவைச் சிகிச்சை என்று பல பயன்பாடுகள் இருக்கிறது. என் வீட்டில் இருக்கும் ஃபைபர் இணைப்பு என்ன ஆகும் ? 5ஜி வந்தால் ஃபைர் இணைப்புக்குத் தேவை இருக்காது. டிஷ் ஆண்டனா போல ஒன்றை வைத்துவிட்டால் உங்கள் இல்லத்துக்கு 5ஜி கிடைத்துவிடும். வீணாக ஃபைர் போடுகிறேன் என்று சாலைகளை நோண்ட மாட்டார்கள். நோண்டுவதற்கு வேறு காரணங்கள் கிடைக்கும் கவலைப் படாதீர்கள்! இது எல்லாம் சரி ஜி, 5ஜி, 4ஜி, 2ஜி புரியும்படி விளக்க முடியுமா ? மொபைல் நெட்வொர்க்குகள் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துகின்றனஇந்த ரேடியோ அலைகள் வேறுபட்ட அதிர்வெண்களை(frequency) கொண்டது. குறைந்த, மீடியம், உயர் என்று இதை மூன்றாக பிரிக்கலாம். 5ஜி இந்த மூன்றையும் புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறது. உயர் ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்தி வண்டிகளில் உள்ள உணர்கருவிகள் செயற்கைக்கோள்களிடம் தொடர்புக் கொள்ளப் போகிறது. மீடியம் அதிர்வெண்களைக் (4ஜி மற்றும் Wi-Fi) கொண்டு தங்கள் திறனை மேலும் மேன்படுத்திக்கொண்டு, குறைந்த ரேடியோ அதிர்வெண்கள் (1ஜி, 2ஜி, 3ஜி) போன்றவற்றைக் கொண்டு பல பகுதிகளுக்கு விரிவுபடுத்த 5ஜிகாரர்கள் திட்டமிட்டுள்ளார்கள். 3 ரோசஸ் டீ போன்று வேகம், நம்பகத்தன்மை, பாதுகாப்பு எல்லாம் நிறைந்ததாக இருக்கும் இந்த 5ஜி. வேறு ஏதாவது ? நிறைய இருக்கிறது. தொழிற்சாலைகள் தங்களிடம் இருக்கும் உபகரணங்களை உணர்கருவிகள் மூலம் தேவையான போது இயக்க முடியும். இதனால் தங்கள் கருவிகளில் டி-கார்பனைசேஷனை புதுமைப்படுத்தி இயக்கி ஓசோனில் ஓட்டை விழாமல் பாதுகாக்க முடியும். ’5ஜி’யால் வணிகங்களுக்கு இதுவரை பார்த்திராத வாய்ப்புகளை உருவாக்கப் போகிறது. இ-ஹெல்த், வாகனப் போக்குவரத்து, மொபைல் கிளவுட் கேமிங்… என்று பல விஷயங்களால் உலகமே மாறப்போகிறது. கடைசியாக ? கடைசியாக கடைசிப் பக்கத்தில் இதற்கு மேல் இடம் இல்லை.இனி ’யூடியுபர்ஸ்’ ’லைக் பண்ணுங்க, சேர் செய்யுங்க’ என்பதை 5ஜி உதவியுடன் 4Kல் கூவப் போகிறார்கள். எச்சரிக்கை!
‘பொன்னியின் செல்வன்’ அமர்க்களத்துக்கு நடுவில் ‘பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5G சேவையைத் தொடங்கிவைத்தார்’ என்ற செய்தி ஓரத்தில் ஒளிந்துகொண்டு இருந்தது. தீபாவளி முதல் பல நகரங்களில் ‘5ஜி’ வரப் போகிறது. இந்த வாரம் கடைசிப் பக்கத்தில் அதைப் பற்றிய கேள்வி-பதில்... 5ஜி என்றால் என்ன ஜி ? 5ஜி என்பது ஐந்தாவது தலைமுறை நெட்வெர்க். இது இப்போது நீங்கள் உபயோகிக்கும் 4ஜியை விட 100 மடங்கு வேகமாகவும், தாமதம் இல்லாமல், பாதுகாப்பான தொழில்நுட்பத்துடன் எதிர்காலத்துக்கு ஏற்றதாக இருக்கும் என்கிறார்கள். இப்போது உள்ள 4ஜிக்கு என்ன கேடு ? எல்லாம் சரியாகத்தானே போய்க்கிட்டிருக்கு ? ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ போன்ற வேகமான ரயிலில் ஆன்லைனில் படம் பார்க்கும் போது படம் விட்டு விட்டு வரும் அல்லது கதாநாயகி குளிக்கும் போது நின்றுவிடும். ஒரு டவரிலிருந்து இன்னொரு டவர் மாறும்போது இந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. 5ஜில் இந்த பிரச்னைகள் இல்லாமல் நிம்மதியாக குளிக்கலாம். குளிக்கும் காட்சி நிற்பது பிரச்னையா ? இதற்காகவா 5ஜி ? அப்படி இல்லை. இனி வரும் வருடங்கள் பலரும், பலதும் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளப் போகிறது. இவை எல்லாவற்றிற்கும் அடிப்படைத் தேவை வேகமான ‘இணைப்பு’ . 5ஜி அதைக் கொடுக்கப் போகிறது. பலரும் சரி, அது என்ன ’பலதும்’ ? இனி வீட்டில் இருக்கும் எல்லாம் டிஜிட்டலாகிவிடும். விளக்கு, மின்விசிறி, ஏசி, மிக்ஸி, டிவி, வாஷிங் மிஷின் என்று சகலத்தையும் இணைத்துவிடப் போகிறார்கள். இந்த உபகரணங்களில் செயற்கை அறிவுடன் கூடிய சென்சார்கள் இருக்கப் போகிறது. இவற்றிற்கும் எல்லாம் வேகமான இணைப்பு என்பது அடிப்படைத் தேவை. சும்மா கப்சா அடிக்காதீர்கள். இவற்றை எல்லாம் ஏன் 5ஜியில் இணைக்க வேண்டும் ? உதாரணத்துடன் விளக்க முடியுமா என்று பார்க்கிறேன். சென்னையில் அன்று வெயில் மிக அதிகம். நீங்கள் விமான நிலையத்திலிருந்து தி.நகரில் உங்கள் இல்லத்துக்கு காரில் வந்துகொண்டிருக்கிறீர்கள். சைதாப்பேட்டை வரும்போது உங்கள் வாகனத்தில் இருக்கும் ஜி.பி.எஸ்., “வீட்டுக்கு இன்னும் 15 நிமிடத்தில் சென்றுவிடுவீர்கள்” என்று அறிந்துகொண்டு, 5ஜி மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் ஏசிக்கு ‘சார் ரொம்ப டையர்டாக வருகிறார், ஏசியை 18 டிகிரியில் வை’ என்று தகவல் அனுப்பி உங்கள் ஏசியை ஆன் செய்துவிடும்! நீங்கள் வீட்டில் நுழைந்தவுடன் ஹாயாக ரெஸ்ட் எடுக்கலாம்!.சில வருடங்களில் ’டாய் ஸ்டோரி’ படத்தில் வருவது மாதிரி உங்கள் வீட்டு வசந்த & கோ உபகரணங்கள் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளப்போகிறது. . இன்ட்ரஸ்டிங்... வேறு ஏதாவது உபயோகம் ? இருக்கிறது. சில வருடங்களில் ஓட்டுனர் இல்லாத வாகனங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளப் போகிறது. ஒரு கார் வேகமாக போய்க்கொண்டு இருக்க, ஒரு பள்ளத்தில் ஏறி இறங்குகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்... உடனே அதன் வேகத்தைக் குறைத்துக்கொள்ளும். உடனே அதன் சக்கரத்தில் உள்ள உணர்கருவிகள்(sensor) இந்த தகவலை 5ஜி மூலம் பின்னால் வரும் வாகனங்களுக்கு ’எவனோ பாடாவதி குழியை நோண்டிப் போட்டிருக்கிறான் பார்த்து வாங்க’ என்று எச்சரிக்கை அனுப்ப, வரிசையாக வரும் வாகனங்கள் தங்கள் வேகத்தைக் குறைத்துக்கொள்ளும். இவை எல்லாம் நீங்கள் காரில் 5ஜியில் நெட்ப்பிளிக்ஸ் பார்த்துக்கொண்டு இருக்கும் போது 0.1 வினாடிகளில் நிகழ்ந்துவிடும்! இதுபோல அதிவேகத் தகவல் போய்ச் சேர 5ஜி போன்ற தொழில்நுட்பம் அவசியம். காரிலிருந்து மருத்துவர் மருத்துவமனையில் இருக்கும் ரோபோ மூலம் அறுவைச் சிகிச்சை என்று பல பயன்பாடுகள் இருக்கிறது. என் வீட்டில் இருக்கும் ஃபைபர் இணைப்பு என்ன ஆகும் ? 5ஜி வந்தால் ஃபைர் இணைப்புக்குத் தேவை இருக்காது. டிஷ் ஆண்டனா போல ஒன்றை வைத்துவிட்டால் உங்கள் இல்லத்துக்கு 5ஜி கிடைத்துவிடும். வீணாக ஃபைர் போடுகிறேன் என்று சாலைகளை நோண்ட மாட்டார்கள். நோண்டுவதற்கு வேறு காரணங்கள் கிடைக்கும் கவலைப் படாதீர்கள்! இது எல்லாம் சரி ஜி, 5ஜி, 4ஜி, 2ஜி புரியும்படி விளக்க முடியுமா ? மொபைல் நெட்வொர்க்குகள் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துகின்றனஇந்த ரேடியோ அலைகள் வேறுபட்ட அதிர்வெண்களை(frequency) கொண்டது. குறைந்த, மீடியம், உயர் என்று இதை மூன்றாக பிரிக்கலாம். 5ஜி இந்த மூன்றையும் புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறது. உயர் ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்தி வண்டிகளில் உள்ள உணர்கருவிகள் செயற்கைக்கோள்களிடம் தொடர்புக் கொள்ளப் போகிறது. மீடியம் அதிர்வெண்களைக் (4ஜி மற்றும் Wi-Fi) கொண்டு தங்கள் திறனை மேலும் மேன்படுத்திக்கொண்டு, குறைந்த ரேடியோ அதிர்வெண்கள் (1ஜி, 2ஜி, 3ஜி) போன்றவற்றைக் கொண்டு பல பகுதிகளுக்கு விரிவுபடுத்த 5ஜிகாரர்கள் திட்டமிட்டுள்ளார்கள். 3 ரோசஸ் டீ போன்று வேகம், நம்பகத்தன்மை, பாதுகாப்பு எல்லாம் நிறைந்ததாக இருக்கும் இந்த 5ஜி. வேறு ஏதாவது ? நிறைய இருக்கிறது. தொழிற்சாலைகள் தங்களிடம் இருக்கும் உபகரணங்களை உணர்கருவிகள் மூலம் தேவையான போது இயக்க முடியும். இதனால் தங்கள் கருவிகளில் டி-கார்பனைசேஷனை புதுமைப்படுத்தி இயக்கி ஓசோனில் ஓட்டை விழாமல் பாதுகாக்க முடியும். ’5ஜி’யால் வணிகங்களுக்கு இதுவரை பார்த்திராத வாய்ப்புகளை உருவாக்கப் போகிறது. இ-ஹெல்த், வாகனப் போக்குவரத்து, மொபைல் கிளவுட் கேமிங்… என்று பல விஷயங்களால் உலகமே மாறப்போகிறது. கடைசியாக ? கடைசியாக கடைசிப் பக்கத்தில் இதற்கு மேல் இடம் இல்லை.இனி ’யூடியுபர்ஸ்’ ’லைக் பண்ணுங்க, சேர் செய்யுங்க’ என்பதை 5ஜி உதவியுடன் 4Kல் கூவப் போகிறார்கள். எச்சரிக்கை!