Shocking! 8 தவளைகளை உயிருடன் சாப்பிட்ட 82 வயது மூதாட்டி! நடந்தது என்ன?

82 year-old Chinese woman eat a frog and screams in pain
82 year old Chinese woman
Published on
Kalki Strip
Kalki Strip

வலி தாங்க முடியாமல் 82 வயது மூதாட்டி ஒருவர்... ஒன்றல்ல.. இரண்டல்ல.. 8 தவளைகளை உயிருடன் சாப்பிட்டு விட்டார். எங்க?? எப்படி???

பொதுவாகவே இந்த வலியோட கொடுமை இருக்கிறதே.. அப்பப்பா... நாம் படுகின்ற வேதனையை யார் கிட்டேயும் சொல்லவும் முடியாது. விவரிக்கவும் முடியாது. அதனால் தான் முன்னோர்கள் பல்வலியும் தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சொன்னார்கள்.

சில பேர் வலியை பொறுக்க முடியாமல் என்னன்னவோ செய்வார்கள். இன்னும் சொல்ல போனால் ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ள கூட நினைப்பார்கள்.

அந்த வகையில் சீனாவில் ஒரு மூதாட்டி என்ன‌ செய்திருக்கிறார் என்று பார்க்கலாமா...?

உயிருள்ள தவளைகளை சாப்பிடுவதன் மூலமாக வலியைக் குறைக்க 82 வயது மூதாட்டி ஒருவர் மேற்கொண்ட இந்த அசாதாரண முயற்சியானது பண்டைய வைத்தியங்கள் மற்றும் அவற்றின் நவீன பொருத்தம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

சீனாவிலுள்ள ஹாங்சோவைச் (Hangzhou, China) சேர்ந்த 82 வயது பெண்மணிக்கு வலி தாங்க முடியாத காரணத்தால், அது அவரை இத்தகைய ஒரு கடுமையான முடிவுக்கு எடுத்து சென்றது. உயிருள்ள தவளைகளை சாப்பிடுவது உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு பண்டைய கால செயலாகும்.

ஹெர்னியேட்டட் டிஸ்க்கால் (herniated disc) ஏற்பட்ட கடுமையான முதுகுவலியை போக்க பண்டைய காலத்தில் இவ்வாறு உயிருள்ள தவளையை சாப்பிட்டு வலியை போக்க முயற்சித்தார்கள்.

இதையும் படியுங்கள்:
அறிவியலால் விளக்க முடியாத உலகின் 10 மர்மப் பிரதேசங்கள்!
82 year-old Chinese woman eat a frog and screams in pain

அதை பின்பற்றி இந்த மூதாட்டியும் வலியை குறைக்க சாப்பிட்டார். இருப்பினும், அதைத் தொடர்ந்து ஒரு தீவிர மருத்துவ அவசரநிலை ஏற்பட்டது. இந்த செயலானது நவீன உலகில் பாரம்பரிய மருத்துவத்தின் சட்டபூர்வமான தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியது.

பல நூற்றாண்டுகளாகவே இந்த மிகப் பழமையான கலாச்சார நம்பிக்கைகளால் இயக்கப்படும் விலங்குகளின் உடல் பாகங்களை உட்கொள்வது பல நாட்டுப்புற வைத்தியத்தியர்களின் வைத்தியத்திலும் உள்ளடங்குகிறது.

இந்த மூதாட்டி ஏன் சாப்பிட்டார்? அதற்கு பிறகு நடந்ததென்ன??

இதையும் படியுங்கள்:
பீனிக்ஸ்: சாம்பலில் இருந்து மீண்டு எழும் பறவை! இது உண்மை தானா?
82 year-old Chinese woman eat a frog and screams in pain

நிவாரணம் கிடைக்காமல் வலியால் தவித்த இந்த 82 வயது மூதாட்டி, எட்டு உயிருள்ள தவளைகளை சாப்பிட்டார். முதல் நாளில் மூன்று மற்றும் அடுத்த நாளில் ஐந்து. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பலன் அவர் நினைத்தபடி இல்லாமல் வேறு விதமான உடல் பிரச்சனைகளும் பின் தொடர்ந்தன. அவர் உட்கொண்ட சிறிது நேரத்திலேயே, அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டி வந்தது. அவர் உட்கொண்ட பச்சைத் தவளைகளிலிருந்து அவருக்கு ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டிருப்பதை சோதனைகள் உறுதிப்படுத்தின.

இந்த சோதனை பச்சை நீர்நில வாழ்வன, குறிப்பாக உயிருள்ள தவளைகளை உட்கொள்வதால் ஏற்படும் உண்மையான ஆபத்துகளை எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு அசாதாரண நாட்டுப்புற வைத்தியமாகத் தோன்றினாலும், தவளைகள் உட்பட நீர்நில வாழ்வன மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது என்றாலும், இது போன்ற கட்டுப்பாடற்ற நுகர்வு கடுமையான உடல் நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அந்தப் பெண் சிகிச்சை பெற்று குணமடைந்தார். ஆனால் அவருடைய இந்த அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
இந்த பொருளை சாதாரணமா நினைக்காதீங்க... சவூதியில் இருந்து சீனா வரை... இதை வாங்க வரிசையில் நிக்கிறாங்க!
82 year-old Chinese woman eat a frog and screams in pain

மருத்துவ நோக்கங்களுக்காக உயிருள்ள தவளைகளை உட்கொள்வது இன்று வினோதமாகத் தோன்றினாலும், அது பாரம்பரிய சீன மருத்துவத்தின் (TCM) மரபுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. நீர்நில வாழ்வன, குறிப்பாக தவளைகள், வலி நிவாரணம், வாத நோய் மற்றும் ஆற்றலை அதிகரிப்பது போன்ற பல்வேறு நோய்களுக்கு TCM இல் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் TCM இல் அப்படியே பச்சையாக உண்ணாமல் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட முறைகளை தான் பின்பற்றி இருக்கிறார்கள்.

ஆகவே எந்த ஒரு சிகிச்சையையும் முறையோடு தெரிந்து கொண்டு சரியான முறையில் சரியான அளவோடு பின்பற்ற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com