தேனி மாவட்டப் புத்தகத் திருவிழாவிற்கு கோம்பை நாய் உருவ இலச்சினை வந்தது எப்படி?

Theni Book Fair 2024
Theni Book Fair 2024
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

தமிழக நாய் இனங்களிலேயே மிகப் பழமையான நாய் இனம் என்றால், அது கோம்பை நாய் இனம்தான் என்கின்றனர். பல நூற்றாண்டுகளாக, பழங்குடி மக்களின் வேட்டைத் துணைவனாகவும், காட்டு விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பு விலங்காகவும் வாழ்ந்து வந்த கோம்பை நாய்கள், மான், காட்டுப் பன்றிகள், மிளா போன்றவற்றை வேட்டையாடுவதற்குப் பெருமளவில் பயன்பட்டன. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள கோம்பை எனும் ஊரின் பெயரால் அழைக்கப்படும் இந்த நாய் இனம், கோம்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான தேவாரம், உத்தமபாளையம், கம்பம், போடி பகுதிகளில் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

தேனி மாவட்ட்த்தில் பேரூராட்சி நிலையில் செயல்படும் கோம்பை எனும் ஊரின் கிழக்கிலும், மேற்கிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி இருக்கின்றது. இந்த ஊருக்குள் வனவிலங்குகளின் ஊடுருவல் காரணமாகவும், தன் சூழல் காரணமாகவும், எப்போதும் விழிப்புடனும், பாதுகாப்பு உணர்வுடனும், இயங்கும்படியான தன்னுணர்வோடு இந்த நாய்கள் பரிணாம வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. தேனி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கரும்புக்கு நல்ல பெயருண்டு. அதற்கு அடுத்த நிலையில், இந்த கோம்பை நாய்கள் இருக்கின்றன.

தேனி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற முதல் புத்தகத் திருவிழாவிற்குத் தனி இலச்சினை (Logo) ஒன்றினை உருவாக்க மாவட்ட நிருவாகம் முயன்ற போது, மாவட்ட அதிகாரிகள், விலங்குகள் நல ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் தேனி மாவட்டத்திற்குப் பெருமை தரும் கோம்பை நாயை முதன்மையாகக் கொண்டு இலச்சினையை உருவாக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.

இதையும் படியுங்கள்:
'கோட்டியா' பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?
Theni Book Fair 2024

அப்போது, புதிதாகப் பதவியேற்றிருந்த தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா அவர்களும், அப்பரிந்துரையினை ஏற்றுக் கொண்டார். அதன்படி, கோம்பை நாய்க் குட்டி ஒன்று கண்ணாடி அணிந்து, புத்தகம் படிப்பது போன்ற புதிய இலச்சினை உருவாக்கப்பட்டது. இந்த இலச்சினையில் நாய்க்குட்டி உருவத்தின் கீழ், தமிழ்நாடு அரசு இலச்சினை, புத்தகத் திருவிழா - ஆண்டு, நடைபெறும் இடம், நாட்கள் போன்ற குறிப்புகளும், அதன் கீழாக “வாசிப்பை வசமாக்குவோம்” என்கிற வாசகமும் இடம் பெற்றது.

Theni Book Fair 2024
Theni Book Fair 2024

இந்த நாய்க்குட்டி இலச்சினைக்கு, தமிழ்ச் சங்கங்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு இருந்ததால், தேனி மாவட்ட இரண்டாவது புத்தகத் திருவிழா - 2024 நிகழ்விற்கும் கோம்பை நாய்க்குட்டி இலச்சினையேப் பயன்படுத்தப்பட்டது. இனி வரும் ஆண்டுகளிலும் தேனி மாவட்டப் புத்தகத்

திருவிழாக்களுக்கு இந்த இலச்சினையேத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும் என்று நம்பலாம்.

logo
Kalki Online
kalkionline.com