நச்சுப்பொருள் ஆய்வுகளுக்கு 'ரெடி' விருது! யார் இந்த ரெடி?

IST Redi award
IST Redi award
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

நச்சுயியலில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்த அறிவியலாளர்களுக்கு ரெடி விருது (Redi Award) எனும் பன்னாட்டு நச்சு அறிவியலுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. 1962 ஆம் ஆண்டில் நச்சுயியல் அறிவியலை மேம்படுத்த ஆர்வமுள்ள அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவர்களைக் கொண்ட குழுவால் தொடங்கப்பெற்ற பன்னாட்டு நச்சுயியல் சங்கம் (The International Society on Toxinology), நஞ்சு மற்றும் நச்சுப் பொருள் குறித்து அறிவியல் ஆய்வுகள் மேற்கொண்டவர்களில் சிறப்பு மிக்க ஒருவரைத் தேர்வு செய்து இவ்விருதினை வழங்கி வருகிறது.

நச்சுயியலின் முன்னோடிகளைச் சிறப்பிக்கும் பொருட்டு, 1967 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்கு ரெடி எனும் பெயர் வைக்கப்பட காரணமென்ன தெரியுமா?

1664 ஆம் ஆண்டில் இத்தாலியப் பல்துறையாளர் பிரான்செஸ்கோ ரெடி (Francesco Redi) என்பவர் எழுதிய விரியன் பாம்புகள் பற்றிய அவதானிப்புகள் (Osservazioni intorno alle vipere) எனும் நூல் நச்சுயியல் ஆராய்ச்சியின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. பாம்புக்கடி மற்றும் விரியன் பாம்பின் விசம் குறித்து அறிவியல் அடிப்படையில் தெளிவாய்ப் புரிந்துகொண்ட முதல் அறிவியல் அறிஞர் ரெடி ஆவார்.

இவர் விரியன் பாம்பின் விடமானது விசப்பல்லின் வழியாக வருகிறது என்றும், எல்லோரும் நம்பிக் கொண்டிருந்த பித்தப்பையிலிருந்து இல்லை என்றும் நிறுவினார். மேலும் விழுங்கும் போது, இது விஷமல்ல என்றும், இரத்த ஓட்டத்தில் நுழையும் போது மட்டுமே பாம்பின் விசம் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். காயத்திற்கு முன் இறுக்கமான தசைநார் மூலம் இரத்தத்தில் உள்ள விஷ நடவடிக்கையை மெதுவாக்கும் வாய்ப்பை இவர் நிரூபித்தார். இந்தச் செயல் நச்சுயியலின் அடித்தளமாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே, பன்னாட்டு நச்சுயியல் சங்கம் நச்சுயியலின் முன்னோடியான ரெடி அவர்களின் பெயரிலேயே விருதினை நிறுவி வழங்கி வருகிறது.

நச்சுயியல் துறையில் சிறப்பான பங்களிப்புகளைச் செய்த விஞ்ஞானிகள் அல்லது மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரெடி விருது, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இச்சங்கத்தின் பன்னாட்டு மாநாட்டில் அறிவிக்கப்படுகிறது. நச்சுயியலாளர்களுக்கு இவ்வுலகில் வழங்கப்படும் மிக உயர்ந்த, மதிப்புமிக்க விருதாக இந்த விருது இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
மதுவிலக்கால் முன்னேறிய பீஹார்; தமிழ்நாட்டின் நிலை என்னவோ?
IST Redi award

இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆய்விதழான டாக்ஸிகன் ஆய்விதழின் ஆசிரியர் தலைமையிலான ரெடி விருதுக் குழு, விருக்குரியவர்களைத் தேர்வு செய்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிருவாகக் குழு கூட்டத்தில் விருதாளர்கள் பெயர் அறிவிக்கபடுகிறது. விருது பெறுபவர், அதன் பின்னர் ”ரெடி சொற்பொழிவு” வழங்க அழைக்கப்படுகிறார். இந்த விருது பெற்றவரின் தகுதிகளை

விவரிக்கும் மேற்கோள் மற்றும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான நிதி உதவியினை இச்சங்கமே வழங்கி வருகிறது.

1967 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை 23 பேர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டில் கோஸ்டா ரிக்காவைச் சேர்ந்த புருனோ லோமண்ட் என்பவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. 2017 ஆம் ஆண்டில் மட்டும் இவ்விருது பிரான்சைச் சேர்ந்த மைக்கேல் லாஸ்டுன்கி என்பவருக்கும், ஜெர்மனியைச் சேர்ந்த டைட்ரிச் மெப்ஸ் என்பவருக்கும் என இருவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com