கவிதை: நாங்கள் கேட்பதெல்லாம்..!

Poor People
Poor People
Updated on

பாலும் தேனுமா

கேட்கிறோம் நாங்கள்...?!

பச்சைத் தண்ணிதானே

குடிக்கக் கேட்கிறோம்!...

பங்களாவும் காருமா

பகட்டாய்க் கேட்கிறோம்...?!

குடிசை ஒன்றைத்தானே

குடியிருக்கக் கேட்கிறோம்!...

பிஸ்தா முந்திரியென்று

பிறவற்றையுமா கேட்கிறோம் ...?!

துவரம் பருப்பைத்தானே

துவையலுக்குக் கேட்கிறோம்!...

மணிமகுடம்  மாணிக்கம்

மரகதமா கேட்கிறோம்...?!

மணலை அள்ளாமல்

இருக்கத்தானே கேட்கிறோம்!...

ஆபரணமும் ஆடையும்

அணிகலனுமா கேட்கிறோம்...?!

ஆறு வாய்க்காலில் 

நீரைத்தானே கேட்கிறோம்!...

பட்டும் பகட்டும்

பலவுமா கேட்கிறோம்...?!

படித்த படிப்புக்கு

பணியைத்தானே கேட்கிறோம்!...  

இதையும் படியுங்கள்:
கவிதை: கருவண்ண கழுத்துமுடி சிலும்ப..!
Poor People

கோடி கோடியாய் 

கொட்டவா கேட்கிறோம் ...?!

உழைத்த உழைப்புக்கு

உரிய கூலிதானே கேட்கிறோம்!.

கிடைக்குமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com