

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய கிராமமான கோடாங்கிபட்டியில் பசுமையான வயல்களும், மாலை நேரத்தில் பள்ளி மணி சத்தமும், அன்பான மக்களும் அந்தக் கிராமத்தின் பெருமை.
அந்தக் கிராமத்தில் விவசாயி முருகனுக்கும், வைதேகிக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தான் ஜீவா. அவன் நல்ல குணமுள்ள மாணவன். தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல், விளையாட்டு என அனைத்திலும் ஓரளவு தேறினவனாய் இருந்தான். ஆனால் கணக்கு பாடத்தை வெறுத்தவன், கணக்கு டீச்சரை மட்டும் ரொம்ப ரொம்ப நேசித்தான்.
கணக்கு பீரியட் வந்தாலே அவனுக்கு வயிற்று வலி வந்து விடும். ஆசிரியர் கேள்வி கேட்டால் பதில் சொன்னதே இல்லை. ஒருநாள் கணித ஆசிரியை புஷ்பா கேட்டார்.
“ஜீவா, 8 × 7 எவ்வளவு?”
தயக்கத்துடன், “மேம்… 54...”
வகுப்பு முழுவதும் ஒரே சிரிப்பு சத்தம்.
“தவறான பதில் சொல்வது குற்றமல்ல. முயற்சி செய்யாமல் இருப்பதுதான் குற்றம்,” என்றார்.
கணித வகுப்பு முடிந்தவுடன், மாதத் தேர்வு ரேங்க் கார்டை வகுப்பு ஆசிரியர் தருண் வழங்கினார்.