

நாரதர் முகம் வாடியிருந்ததை இந்திரன் கவனித்து விட்டான்.
“என்ன நாரதரே ஏதோ கவலை தங்கள் நெஞ்சத்தை அரிக்கறது போலிருக்கே?” பரிவுடன் கேட்டான் இந்திரன்.
“இல்லையே...”அசட்டு சிரிப்புடன் சமாளித்தார் நாரதர்.
“சும்மா சுனாமி வேகத்தில் சுற்றும் உம் கண்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது கலங்கியதை கவனித்தேன். அதே மூடில் தான் இருக்கிறீரா?”
“ஆமாம்.”
“என்ன கவலை உங்களுக்கு?" சித்ரகுப்தனும் அக்கறையாய் கேட்க,
“சொன்னால் தீர்த்து வைப்பீரா? இந்திரா உ்ன் தவறான செயல்களால் கிடைத்த சாபங்களிலிருந்து மீளவே வழி தெரியாது தவிக்கிறீர். நீர் எமக்கு உதவப் போறீரா?” கிண்டலாய் கேட்டார் நாரதர்.
“இந்த வாய் தான் உம்மை ஒவ்வொரு முறையும் பல சிக்கலில் மாட்டி விடுகிறது. முதலில் உம் கவலையை சொல்லும். என்னால் தீர்க்க முடியுமானு பா்ர்க்கிறேன்.”
“சரி. இது செல் போன் நம்பர் 5ஜீ பற்றிய கவலை.”
“அப்படின்னா? அட்சர சுத்தமாய் பரியலை...”
“இதுக்குத்தான சொன்னேன். உமக்கு தெரியாதுன்னு.”
“டெலிபோனில் பேசவே ஆட்டங்காட்டுவே நீ. என் கவலையை பற்றி நான் பாத்துக்கறேன். எனக்கு உன்னாலே ஒரு உதவி ஆகணும்”
“என்ன?”