படவுங் பெண்கள் படும் பாடு! இது என்ன கொடுமை?

Padaung Tribe Women
Padaung Tribe Women
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

வடமேற்கு தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு மியான்மர் மலைப்பகுதிகளில் வசிக்கும் படவுங் (அல்லது கயான்) பழங்குடியினப் பெண்களிடம் (Padaung Tribe Women) மிக நீளமான மனிதக் கழுத்து காணப்படுகிறது. உலகச் சாதனைப் புத்தகமான கின்னஸ் புத்தகத்தில், “உலகில் நீளமான கழுத்துகளை உடைய பெண்கள் - படவுங் பெண்கள்” என்ற சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

படவுங் பெண்களின் கழுத்து மற்றும் தோள்களின் வடிவத்தை மாற்றும் வகையில் அவர்களது கழுத்தில் கனமான பித்தளை வளையங்கள் அணிவிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஓட்சுமா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த வளையங்கள் அணிந்த பெண்களின் மேல் தாடையிலிருந்து கீழ் தாடை வரையிலான நீளம் அதிகரிதக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

படவுங் பெண்களுக்கு 5 முதல் 9 வயது வரையிலான காலத்தில் முதல் பித்தளை வளையச் சுருள்கள் பொருத்தப்படுகின்றன. தோராயமாக 1.5 செமீ (0.6 அங்குலம்) விட்டம் கொண்ட பித்தளைக் கம்பியில் இருந்து இவ்வளையங்கள் செய்யப்பட்டு அணிவிக்கப்படுகின்றன. அவர்கள் வளரும் போது, மேலும் சில சுருள்கள் கூடுதலாகச் சேர்க்கப்படுகின்றன. படவுங் பெண்களுக்கு 45 வயதாகும் போது, அவர்களது கழுத்தில் சுமார் 15 கிலோ எடையுடன் கூடிய 32 பித்தளை வளையச் சுருள்கள் இடம் பெற்றிருக்கும்.

பெண்கள் அணியும் இவ்வளையங்கள் விலா எலும்பில் அழுத்துவதன் மூலம் தசைகளைச் சிதைக்கிறது, கழுத்துப்பட்டி எலும்பு மற்றும் விலா எலும்புகளை வளைத்து, கீழ் தாடையை அழுத்துகிறது. அதன் மூலம் கழுத்தின் நீளம் அதிகரிக்கிறது.

இந்த நடைமுறையால், அவர்களுக்குச் சுவாசம் மற்றும் இருதய பிரச்சனைகள் அதிக அளவில் வருகின்றன. பல் வளர்ச்சியும் சிதைகிறது. இவர்களின் ஆயுட்காலமும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து போய் விடுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இவ்வளையங்களை நீண்ட காலமாக அணிந்த பெண்கள், தற்போது வளையத்தை அகற்றி விட முடியாது. அப்படி அகற்றினால், அவர்களது தலையின் எடையைக் கூட அவர்களால் தாங்க முடியாமல் போவதுடன் கழுத்தும் சாய்ந்து போய்விடும்.

சாதாரண பெண்களை விட, இவ்வளையம் அணிந்த பெண்களின் மார்பெலும்புக்கு மேலுள்ள பள்ளம் முதல் கீழ் தாடை வரையிலான நீளம் சுமார் 8 முதல் 10 செ.மீ., வரி அதிகரிக்கிறது. கழுத்தின் நீளம் அதிகமாக இருந்தாலும், இவ்வளையம் அணிந்த பெண்களின் உயரம் சாதாரண பெண்களைப் போலவே இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பெற்ற ஆய்வில் 19.7 செ.மீ கழுத்து அளவிடப்பட்ட பெண்ணின் உயரம் 165 செ.மீ (5 அடி 4 அங்குலம்) மட்டுமே இருந்தது.

இதையும் படியுங்கள்:
இரக்கம் என்பது நீ உனக்காகச் சேர்த்துவைக்கும் சொத்து! எப்படி?
Padaung Tribe Women

இவ்வினப் பெண்களின் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் பித்தளை வளையங்களை, கழுத்தைச் சுத்தம் செய்யும் போது மட்டும் சிறிது நேரம் கழற்றி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மற்ற வேளைகளில் அவ்வளையங்களை அகற்ற அனுமதிக்கப்படுவதில்லை.

இவ்வினப் பெண்கள் கழுத்தில் வளையங்கள் அணிவதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவ்வளையங்கள் அடிமை வியாபாரிகளிடமிருந்து பெண்களைக் காப்பாற்றுவதற்காக, முதலில் அணிவிக்கப்பட்டது என்று சிலர் சொல்கின்றனர். பெண் குழந்தைகளைப் புலிகள் தாக்கும் போது, அதனிடமிருந்து பாதுகாக்க இவ்வளையங்கள் உதவுகின்றன என்று சிலர் சொல்கின்றனர். மற்ற பழங்குடியின ஆண்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே இவ்வளையங்கள் அணிவிக்கப்படுவதாகவும் சிலர் சொல்கின்றனர்.

நகரமயமாக்கல் செயல்பாடுகள் அதிகரித்து வரும் இவ்வேளையில், இவ்வினத்து இளம் பெண்கள் பலர் கழுத்தில் வளையங்கள் அணிவதை எதிர்ப்பதுடன் அணிய முடியாது என்று மறுக்கவும் தொடங்கியிருக்கின்றனர். இதனால், வருங்காலங்களில் இப்பெண்களிடம் கழுத்தில் வளையம் அணிவிக்கும் வழக்கம் நின்று போவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

logo
Kalki Online
kalkionline.com