

“ஏண்டி வத்சலா, ஒண்ணு கேள்விப்பட்டியா?”
“என்னன்னு சொன்னாதானே தெரியும்? உங்க மனசுல இருக்கிறது எனக்கு எப்படித் தெரியும்?”
“நம்ம காம்ப்ளெக்ஸே அல்லோலப்பட்டு இருக்கு, உனக்குத் தெரியலைன்னு சொல்றியா?”
“தெரியலைங்கிறதை வேற எப்படிச் சொல்றது? வழவழன்னு இழுக்காம நேரா விஷயத்துக்கு வாங்க.”
“நம்ம காம்ப்ளெக்ஸ்ல மேல மாடியில இருந்தாங்களே, ரேகாவும் அவ புருஷன் சங்கரும்... அவங்க இப்ப ஒண்ணா இல்லையாம். அதைப்பத்தி ஏதாவது உனக்குத் தெரியுமான்னுதான் கேட்டேன்.”
“ஏன் இப்ப அதைக் கேட்டு என்ன சாதிக்கப்போறீங்க? உங்க வேலையையே உங்களால ஒழுங்கா பார்த்துக்க முடியலை. இதுல ஊர்ல இருக்கிறவங்களைப் பத்தி தெரிஞ்சு என்ன சாதிக்கப்போறீங்க?”
“அதுக்கில்ல... ஒரு காம்ப்ளெக்ஸ்ல இருந்துகிட்டு இதுகூட தெரியலைன்னா எப்படி?”
“ஏதோ சண்டைன்னு கேள்விப்பட்டேன், என்னவாம்?"
“அந்தப் பொண்ணு இருக்கா இல்ல, அவ அவனை, அதான் சங்கரை, வேண்டாம் என்கிறாளாம்!”
“ஏனாம்? என்னவாம்? ரெண்டு பேரும் நல்லாதானே குடும்பம் நடத்தினாங்க. அஞ்சு வயசுல ஒரு குழந்தை வேற. ஏன் இப்படி முடிவெடுக்கிறாங்க?”
"இல்லை, ரெண்டாவது பிளாக்ல நம்ம காய்கறிக் கடை வச்சிருக்கிறாரே கந்தசாமி, அவர் தான் நம்ம வீட்டுக்கு வர்றப்ப இதைச் சொன்னாரு..."
கந்தசாமிக்கு தனக்கும் நடந்த உரையாடலை அப்படியே விவரித்தார் கணேசன்.
***********
“ஏம்பா கணேசா, விஷயமே தெரியாதா? உங்க வீட்டு மாடியில இருக்காங்க இல்ல, ரேகா - சங்கர் தம்பதி, அவங்கவங்க வாழ்க்கையைப் பார்த்துக்கிட்டுப் போயிட்டாங்களாம்."