தேவையான பொருட்கள்:
கனிந்த பலாசுளைகள் - 20
வெல்லம் -100 கிராம்
தேங்காய் - ஒரு மூடி ( தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்)
நெய் - 50 கிராம்
பச்சரிசி மாவு - ஒரு டீஸ்பூன்
முந்திரி - 10
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை: பலா சுளைகளை கொட்டை நீக்கி துண்டுகளாக்கி வேக வைத்து, நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது நீர் விட்டு சூடுபடுத்தி கரைந்தவுடன் வடிகட்டி, மசித்த பலாச்சுளையில் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது
பச்சரிசிமாவையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து கைவிடாமல் கிளறி நன்றாக சுருண்டு வரும்போது, நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து போட்டு , ஏலப் பொடியைத் தூவி இறக்கவும்.
அல்வா புட்டு!
தேவையான பொருட்கள்: இட்லி அரிசி - 1/2கப்
நெய் - 2 1/4கப்
தேங்காய்த் துண்டுகள் - 1/4கப்
தண்ணீர் - 750 மி.லி.,
வெல்லம்- 1 கப்
ஏலக்காய்த்தூள் - டீஸ்பூன்
செற்முறை: இட்லி அரிசியை நன்றாக களைந்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி தேங்காய் துண்டுகளை வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி பின் வெல்லம் சேர்த்து கரைய வைத்து, கொதித்த உடன் அரைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து மிதமான சூட்டில் வைத்து, தொடர்ந்து கைவிடாமல் 20 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு நன்றாக இறுகி, கெட்டியான பதம் வந்ததும் , அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு நெய் தடவிய தட்டில் சிறிய சிறிய உருண்டைகளாக எடுத்து வைக்கவும். அல்வா புட்டு தயார். நெய் சேர்க்காமலே தொண்டையில் வழுக்கி கொண்டு போகும்.