

தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 11) காலை அதிரடியாக ரூ.1,920 வரை குறைந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தது. ஆனால் நேற்று மாலையே சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது.
நேற்று (செப்டம்பர் 11) ஒரே நாளில் ஏற்ற இறக்கத்தைக் கண்ட தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ரூ.800 வரை குறைந்தது. இதன்படி நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து ரூ.14,155-க்கும், ஒரு சவரன் ரூ.800 உயர்ந்து ரூ.1,13,240-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில் மாலையில் ரூ.5 உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக நேற்று மட்டும் 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.250-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 12) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து, ரூ.1,13,360-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.
இந்தியாவில் இன்றும், நாளையும் பிரிக்ஸ் நாடுகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இதன் காரணமாக நேற்று நடக்க வேண்டிய மத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தள்ளிப் போனது. இந்தக் கூட்டம் நடைபெறும் போது, தங்கத்தின் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை ரூ.10,000-க்கும் மேல் குறைய வாய்ப்புள்ளது. இன்னும் சில நாட்களில் தங்கத்தின் உண்மையான விலை நிலவரத்தை நாம் பார்ப்போம் என பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.
இதன் காரணமாக செப்டம்பர் மாத இறுதிக்குள் தங்கத்தின் விலை மிகப்பெரிய சரிவை சந்திக்க அதிக வாய்ப்புகள் உண்டு.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.