தூக்கத்தில் சாம்பியன் பட்டம் வென்ற பெண்ணுக்கு 9 லட்சம் பரிசுத்தொகை!

Indian sleeping champion - pooja
Indian sleeping champion
Published on

இந்தியாவில் தூக்க சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு, அதில் புனேவைச் சேர்ந்த பூஜா மாதவ் (22) என்ற பெண், 9 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த வினோதமான போட்டி, ஆரோக்கியமான தூக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் ‘வேக்ஃபிட்’ (Wakefit) என்ற மெத்தை நிறுவனத்தால் நடத்தப்பட்டது.

இந்தப் போட்டியில், பூஜா மாதவ் 60 நாட்களுக்குத் தினமும் 9 மணி நேரம் தொடர்ந்து தூங்கி, தனது தூக்கத்தின் தரம் மற்றும் ஒழுங்கமைப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். நாடு முழுவதிலுமிருந்து சுமார் ஒரு லட்சம் பேர் இந்தப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த நிலையில், இறுதியாக 15 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இந்தத் தீவிரப் போட்டியில் பூஜா, மற்ற போட்டியாளர்களை விஞ்சி, சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

பூஜா மாதவ் ஒரு யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் அவர் தனது தேர்வுகளுக்குத் தயாராகி வரும் வேளையில், இந்தப் பரிசுத் தொகை அவருக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது வெற்றி குறித்துப் பேசிய பூஜா, "இந்த வெற்றி எனக்கு ஆச்சரியமாக உள்ளது. தூங்குவதற்கும் ஒரு போட்டி இருக்கும், அதிலும் நான் வெற்றி பெறுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்தப் பரிசுத் தொகை எனது யுபிஎஸ்சி தேர்வுக்கு உதவும். ஆரோக்கியமான தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: குல்மோகர்கள் பூக்கும் நேரத்தில்...
Indian sleeping champion - pooja

இந்தச் செய்தி, சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் பூஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், இதுபோன்ற ஒரு போட்டி இந்தியாவில் நடத்தப்படுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தூக்கத்தின் அறிவியல் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தச் சாம்பியன்ஷிப் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com