சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க போலீஸ்காரர்களுக்கு ஏ.சி. ஹெல்மெட்!

A.C.Helmet with Police
A.C.Helmet with Policehttps://tamil.drivespark.com
S CHANDRA MOULI

எஸ். சந்திர மௌலி (S Chandra Mouli) எஸ். சந்திர மௌலி கடந்த நாற்பதாண்டுகளாக கல்கி குழும பத்திரிகைகளில் எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர். கல்கி வெளியிட்ட பல்வேறு சிறப்பிதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள், தொழில் மலர்கள், விடுமுறை மலர்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தவர். 2008ல் கல்கி வெளியிட்ட “குஜராத் டுடே” சிறப்பிதகளுக்காக ஒரு வார காலம் குஜராத் முழுவதும் பயணித்து, குஜராத்தின் வளர்ச்சியை நேரில் கண்டு, எழுதியவர். சமூக அக்கறையோடு கல்கி மேற்கொண்ட “மாதம் ஒரு மாவட்டம்” திட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து பங்களித்தவர். வாஜ்பாய், வி.பி.சிங் தொடங்கி மன்மோகன் சிங், நரேந்திர மோடி வரை ஏழு இந்தியப் பிரதமர்களை சந்தித்து பேட்டி கண்டவர். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, என்.டி.ஆர், ஜோதி பாசு, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமலாசன், ஜெமினிகணேசன், சூர்யா, மணிரத்னம், கிரிக்கெட்டர் ஸ்ரீக்காந்த், விக்கு வினாயகராம். உமையாள்புரம் சிவராமன், வயலின் கன்யாகுமரி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் மு.மேத்தா, நா. முத்துகுமார், சோ ராமசாமி என பல்துறைப் பிரபலங்களையும் பேட்டி கண்டு எழுதியவர். இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் நாகேஷ், ஓவியர் கோபுலு, இயக்குனர் எஸ்பி. முத்துராமன், திருமதி ஒய்,ஜி.பி. ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், நடிகர் ஏ.ஆர்.எஸ். மெஜிக் நிபுணர் லால் உள்ளிட்ட பலரது வாழ்க்கை அனுபவங்களை இவர் தொடராக எழுதி, அவை பின்னர் புத்தகங்களாக வெளியாகி உள்ளன. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானபோது, இளைய தலைமுறையினருக்கு அமரர் கல்கி பன்முகச் சாதனை வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் “கல்கி-பொன்னியின் செல்வர்” என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியவர். பெண்சிசுக் கொலை தொடர்பான கட்டுரைக்கு “லாட்லி விருதும்”, ரோட்டரி சங்கத்தின் “சாதனை விருதும்” பெற்றவர். தற்போது madraspaper இணைய வார இதழில் “ஓரு குடும்பக் கதை: என்ற தலைப்பில் இந்திய அரசியலில் நேரு குடும்பத்தின் பங்களிப்பு குறித்த நெடுந்தொடர் ஒன்றை எழுதி வருகிறார். சோ குறித்த ஒரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்.

Updated on

கோடை கொளுத்திக் கொண்டிருக்கிறது! தமிழ்நாட்டில் போலீஸ்காரர்கள், குறிப்பாக போக்குவரத்து போலீசார் வெயிலில் கால் கடுக்க நின்றுகொண்டு தங்கள் கடமையை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உத்தரப்பிரதேச அரசாங்கம், லக்னௌவில் போலீஸ்காரர்களுக்கு வெயிலை சமாளிக்க ஒரு குளு குளு வழி செய்து கொடுத்திருக்கிறது. அங்கே போலீஸ்காரர்களுக்கு குளிர் சாதன வசதி கொண்ட ஹெல்மெட் வழங்கி இருக்கிறார்கள்.

லக்னௌ நகரத்தில் ஹசரத்கஞ் என்ற பகுதியில் இருக்கும் அடல் சவுக் என்ற பெயர் கொண்ட போக்குவரத்து சந்திப்பில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு உ.பி. அரசு ஏ.சி. ஹெல்மெட் வழங்கி இருக்கிறது. இந்த ஹெல்மெட்டை தலையில் அணிந்துகொண்டால், அப்போது அடிக்கும் வெயிலை விட சுமார் 10 முதல் 15 டிகிரி அளவுக்குக் குளிர்ச்சியாக இருக்குமாம்!

அது என்ன ஏ.சி. ஹெல்மெட்? அதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இதையும் படியுங்கள்:
வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?
A.C.Helmet with Police

இந்த ஹெல்மெட்டில் ஒரு பேட்டரியில் இயங்கும் இயந்திரம் உள்ளது. அதுதான் ஏ.சி. ஹெல்மெட் இயங்குவதற்கான சக்தியைக் கொடுக்கிறது. இதில் பயன்படுத்தப்படும் அதிநவீன செமிகண்டக்டர்தான் ஹெல்மெட்டில் கூலிங் எபெக்ட்டைக் கொடுக்கிறது. இந்த ஹெல்மெட்டை அணிந்துகொண்டால், கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அதற்காக ஹெல்மெட்டின் உள்ளே இருந்து நான்கு வழிகளில்  குளிர்க்காற்று வருகிறது.  இந்த ஏ.சி. ஹெல்மெட்டின் பேட்டரியை போலீஸ்காரர்கள் தங்கள் இடுப்புப் பகுதியில் பொருத்திக்கொள்ள வேண்டும். பேட்டரி தீரும் நிலை ஏற்படும்போது, எச்சரிக்கை விளக்கு எரியும்.

வெயிலில் நின்றுகொண்டு பணியாற்றுபோது அணிந்துகொள்வதற்கு வசதியாக இந்த ஹெல்மெட்கள் வழக்கமான ஹெல்மெட்களின் எடையில் பாதி அளவே இருக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாதைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்த ஏ.சி. ஹெல்மெட்களைத் தயாரித்துக் கொடுத்துள்ளது.

“சுமார் ஒரு மாத காலம் பரீட்சார்த்த ரீதியில் இந்த ஏ.சி. ஹெல்மெட்கள் பயன்படுத்தப்படும். அதன் பின் அவை எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து, சுமார் 500 ஹெல்மெட்கள் வாங்கி பயன்படுத்தப்படும். அதேசமயம், இந்த ஏ.சி. ஹெல்மெட்டைப் பயன்படுத்துவதால் ஏதாவது உடல்நலத் தீங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்பதும் ஆராய்ச்சி செய்யப்படும்” என்கிறது லக்னௌ போலீஸ் துறை.

logo
Kalki Online
kalkionline.com