

முன்னாள் இந்திய கேப்டனும் மூத்த மட்டையாளருமான அஜிங்க்யா ரஹானே, "கேப்டன் 278 விடைபெறுகிறேன்" என்ற தலைப்பிலான காணொளிச் செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, 2026 ஜூலை 30 அன்று சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்க்யா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஹானே instagramல் ஒரு பதிவின் மூலம் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டார். அதில் "கேப்டன் 278 விடைபெறுகிறேன்" என்ற தலைப்புடன் ஒரு காணொளிச் செய்தியையும் பதிவேற்றி இருந்தார். "இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. என்றென்றும் என் கடமை உண்டு" என ரஹானே தனது பதிவில் எழுதி இருந்தார்.
தொழில் புள்ளி விவரங்கள்:
36 வயதான அஜிங்க்யா ரஹானே, இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ளார். 2011 முதல் 2023 வரையிலான தனது 12 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 8,414 ரன்களைக் குவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகள்: 85 போட்டிகளில் விளையாடி 12 சதங்கள், 26 அரைசதங்கள் உட்பட 38.46 சராசரியுடன் 5,077 ரன்கள் எடுத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகள் (ODI): 90 போட்டிகளில் பங்கேற்று 3 சதங்கள், 24 அரைசதங்கள் உட்பட 35.26 சராசரியுடன் 2,962 ரன்கள் சேர்த்து விளாசியுள்ளார்.
டி20 போட்டிகள்: 20 போட்டிகளில் விளையாடி 113.29 ஸ்டிரைக் ரேட்டுடன் 375 ரன்கள் எடுத்துள்ளார்.
மொத்தம்:
2011 முதல் 2023 வரையிலான 12 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் 8,414 சர்வதேச ரன்கள் எடுத்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க கேப்டன்ஷிப்:
அடிலெய்டில் அணி பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, விராட் கோலி இல்லாத நிலையில் கேப்டனாகப் பொறுப்பேற்று 2020-21 பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் போது ஆஸ்திரேலியாவில் இந்தியாவை 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வெல்ல வழி நடத்தினார். இது அவரது வாழ்வின் மிகப்பெரிய தருணமாக அமைந்தது.
வெளிநாட்டு நிபுணர்:
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில், கடினமான வெளிநாட்டுச் சூழல்களிலும் தனது அமைதியான குணம் மற்றும் அபாரமான நுட்பத்திற்காக அறியப்பட்ட இவர், முக்கியமான சதங்களை அடித்துள்ளார்.
நெகிழ்ச்சியான ஓய்வு முடிவு குறித்து ரஹானே கூறும்போது:
வாழ்க்கையின் எதார்த்தம் என்னவென்றால், எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கமும் ஒரு முடிவும் உண்டு. அதற்கான நேரம் வரும்போது, நீங்கள் அதை மதித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். நான் எனது பேட்டிங்கில் எப்போதும் டைமிங் நம்பியிருக்கிறேன், அதன் முக்கியத்துவதையும் எப்போதும் உணர்ந்திருக்கிறேன் என்று ரஹானே கூறினார்.
சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வடிவங்களில் இருந்தும் எனது ஓய்வை அறிவித்து, அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு இதுவே சரியான தருணம் என இன்று நான் உணர்கிறேன். அந்த ஆரம்ப நாட்களில், சிறுவனாக பயிற்சி செய்வதற்காகவே பயணம் செய்ததிலிருந்து, இந்த விளையாட்டுக்கு என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தேன். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இன்னிங்ஸிலும், பேட் செய்யக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் இந்திய தொப்பியை அணிவதே என் கனவாக இருந்தது" என்று அவர் மேலும் கூறினார்.
"நான் ஒரு எளிய விதியைப் பின்பற்றி வாழ்ந்தேன். எப்போதும் என்னை விட என் நாட்டிற்கும் என் அணிக்கும் முன்னுரிமை கொடுப்பேன். நான் இந்த விளையாட்டை முழு நேர்மையுடன் விளையாடினேன். உங்கள் நோக்கம் சரியாக இருந்தால், ஆட்டம் எப்போதும் உங்களை கவனித்துக் கொள்ளும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்" என உருக்கமாக பேசியுள்ளார்.
"நான் ஒரு முதல் தர கிரிக்கெட் வீரராக அறிமுகமான காலத்தில் இருந்து, இந்திய கிரிக்கெட் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அதன் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக எனது அத்தியாயம் முடிவுக்கு வந்தாலும், இந்த விளையாட்டுடனான எனது பயணம் முடிவதில்லை. அடுத்த தலைமுறைக்கு உதவவும், இந்த விளையாட்டு எனக்குக் கற்று கொடுத்த விழுமியங்களை பகிர்ந்து கொள்ளவும், எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த இந்த விளையாட்டுக்கு திருப்பிக் கொடுக்கவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அவர் கூறினார். தனது விளையாட்டு வாழ்க்கை முழுவதும் ஆதரவளித்ததற்காக பிசிசிஐ, மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ), தனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், ஐபிஎல் உரிமையாளர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரஹானே நன்றி தெரிவித்தார்.
மேலும், "என் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திலும் எனக்கு ஆதரவளித்த அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ‘அஜிங்க்யா’ என்றால் 'வெல்ல முடியாதவர்' என்று பொருள், ஆனால் கிரிக்கெட் எனக்குப் பல தோல்விகளைக் கற்றுக்கொடுத்துள்ளது. நான் பல தவறுகளைச் செய்திருக்கலாம், ஆனால் உங்களின் அன்பான இதயங்களில் நான் ஒருபோதும் தோற்றதில்லை.உங்கள் அன்புக்கும், உங்கள் நம்பிக்கைக்கும், உங்கள் ஆதரவிற்கும் நன்றி. எனது 278 வது போட்டியுடன் விடைபெறுகிறேன்" என்று ரஹானே கூறி முடித்தார்.