

இஸ்ரேல் - லெபனான் இடையே ஆன போர், அடுத்த 10 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தப் போர் நிறுத்தத்தை ஐநா வரவேற்றுள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா - ஈரான் போரில் முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தற்போது இஸ்ரேல் லெபனான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதால், ஈரான் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் செல்ல இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இதன்மூலம் தான் இதுவரை 10 போரை நிறுத்தியுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டப் பேச்சுவார்த்தையின் போது லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், ஹார்மூஸ் நீரினையை மீண்டும் மூடியது ஈரான். இந்நிலையில் தற்போது இஸ்ரேல் லெபனான் போர் நிறுத்தப்பட்டு இருப்பதால், விரைவில் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ள நிலையில், ஒருவேளை ஈரான் இதனை மறுத்தால் பலமடங்கு தாக்குதல் நடக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் மின் நிலையங்கள் மீது குண்டு மழை பொழியும். மீண்டும் போரை தொடங்க அமெரிக்காவிற்கு ஒரே ஒரு நொடி போதும் என ஈரானுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.