
நம்மூரில் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு பகுதிகளிலும் அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப கொண்டாடப்பட்டு வருகின்றது.அந்த வகையில் விஜயதசமி அல்லது தசரா என்று அழைக்கப்படும் பண்டிகையானது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. தசரா என்றால் பத்தாவது நாள் வெற்றி என்று கூறப்படுகின்றது. அதாவது துர்க்கை அம்மன் மகிசாசூரனை அழிப்பதற்காக 9 நாள் விரதம் இருந்து 10வது நாள் காளியாக அவதரித்து மகிசாசூரனை வென்ற நாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதனால் தான் தசரா என்று பலராலும் அழைக்கப்படுகின்றது.
குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்று விளங்குகிறது.குலசேகரப்பட்டினத்தில் 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழா தமிழ்நாட்டின் முக்கிய விழாவாக உள்ளது. இதுபோல் மைசூருவில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
தசரா பண்டிகையொட்டி பயணிகள் நெரிசலை குறைக்க தென் மேற்கு ரெயில்வே பல்வேறு இடங்களுக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்களை ஒருமுறை பயணத்திற்காக இயக்க உள்ளது.
ரயில் எண் 06249/06250
06249 யேஷ்வந்த்பூர்–மதகாவ் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு யேஷ்வந்த்பூரிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 5.30 மணிக்கு மதகாவை அடையும்.
மறுபயணமாக,
06250 மதகாவ்–யேஷ்வந்த்பூர் சிறப்பு ரயில் அக்டோபர் 1 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மதகாவிலிருந்து புறப்பட்டு அதே நாள் இரவு 11.40 மணிக்கு யேஷ்வந்த்பூரை அடையும்.
இது சிக்கபணவர, குனிகல், சன்னாராயப்பட்டண, ஹசன், சக்லேஷ்பூர், சுப்ரமண்யா ரோடு, பண்ட்வால், மூல்கி, உதுப்பி, குந்தாபுர், பைண்டூர், பாட்ட்கல், முருதேச்வர, ஹொன்னாவர், கும்டா, கோகர்ணா ரோடு, அங்கோலா, கர்வார் உள்ளிட்ட இடங்களில் நிற்கும். எஸ்.எம்.வி.டி பெங்களூரு – பீதர் – எஸ்.எம்.வி.டி பெங்களூரு சிறப்பு எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 06291/06292
06291 எஸ்.எம்.வி.டி பெங்களூரு–பீதர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு பீதரை அடையும்.
மறுபயணமாக,
06292 பீதர்–எஸ்.எம்.வி.டி பெங்களூரு சிறப்பு ரயில் அக்டோபர் 1 ஆம் தேதி மதியம் 1.00 மணிக்கு பீதரிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 4.00 மணிக்கு பெங்களூரை அடையும். இது யலஹங்கா, இந்துபூர், தர்மவரம், ஆனந்தபூர், குந்தக்கல், ஆதோனி, மந்திராலயம் ரோடு, ராய்சூர், கிஷ்னா, யாதகிரி, வாடி, சஹாபாத், களபுர்கி, ஹூமானாபாத் உள்ளிட்ட இடங்களில் நிற்கும்.
பயணிகள் வசதிக்காக ஹூப்ளி–பெங்களூரு இடையே இயங்கும் சிறப்பு ரயில் சாமராஜநகரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
07339 ஹூப்ளி–பெங்களூரு சிறப்பு ரயில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை (மொத்தம் 7 பயணங்கள்) சாமராஜநகரம் வரை நீட்டிக்கப்படும்.
மறுபயணமாக,
07340 பெங்களூரு–ஹூப்ளி சிறப்பு ரயில் அக்டோபர் 5 ஆம் தேதி வரை (மொத்தம் 7 பயணங்கள்) சாமராஜநகரத்திலிருந்து புறப்படும்.
07339 ரயில் காலை 7.00 மணிக்கு பெங்களூரிலிருந்து புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு சாமராஜநகரத்தை அடையும்.
07340 ரயில் மாலை 6.45 மணிக்கு சாமராஜநகரிலிருந்து புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு பெங்களூரை அடையும்.
இந்த ரயில்கள் கெங்கேரி, ராமநகரம், சன்னப்பட்டண, மத்தூர், மண்டியா, பாண்டவபுரம், மைசூர், சாமராஜபுரம், அசோகபுரம், கடகோலா, தாண்டவபுரம், சுஜாதாபுரம், நஞ்சனகுட் டவுன் உள்ளிட்ட இடங்களில் நிற்கும்.