இப்படி கூட நடக்குமா ? மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிரை பறிக்கும் DJ இசை… ஆய்வில் தகவல்!

DJ at wedding
DJ at wedding
Published on

திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் டிஜே இசை, இப்போது தொடர் மரணங்களுக்குக் காரணமாகி வருவதாக சமீபத்திய ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் டிஜே இசைக்கு நடனமாடிய இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவங்கள் பெருகி வருகின்றன. இந்த சம்பவங்களின் பின்னணி குறித்து ஜெர்மனியில் உள்ள மெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையம் ஒரு விரிவான ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வின் திடுக்கிடும் முடிவுகள் வெளிவந்துள்ளன.

டிஜே ஒலியின் அதிர்வுகள், குறிப்பாக 100 டெசிபலுக்கு மேல் இருக்கும்போது, அது மனிதர்களின் இதயத் தாளத்தை நேரடியாகப் பாதிக்கிறது. இது இதயத்தின் சீரான துடிப்பை சீர்குலைத்து, திடீர் மாரடைப்பை தூண்டுகிறது.

ஏற்கனவே இதய நோய் அபாயம் உள்ளவர்களுக்கு இது ஒரு உடனடி ஆபத்தாக மாறுகிறது. அதிக சத்தம், உடலில் அட்ரினலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, இரத்த அழுத்தத்தை திடீரென உயர்த்துகிறது. இதன் விளைவாக, மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு, மரணங்கள் நேரிடுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

டிஜே சத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் வெறும் மரணத்தோடு நின்றுவிடுவதில்லை. இந்த ஆய்வு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை 15,000 பேரிடம் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள், காது கேளாமை, தூக்கமின்மை, மன அழுத்தம், பதற்றம், மற்றும் கவனம் சிதைவு போன்ற பல்வேறு உடல்நலக் குறைபாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றன. குறிப்பாக இளம் வயதினரிடையே, தொடர்ச்சியான இந்த அதிக டெசிபல் சத்தத்திற்கு உட்படுவது, நிரந்தர காது கேளாமைக்கு வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஆய்வு மனிதர்களை மட்டுமல்லாமல், விலங்குகள் மற்றும் சுற்றுப்புற சூழலையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. டிஜே சத்தங்களால் கால்நடைகள், நாய்கள், மற்றும் கோழிகள் கூட தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்கின்றன. உதாரணமாக, தெலுங்கானாவில் ஒரு டிஜே நிகழ்வால் 100-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், டிஜே ஒலியின் அதிர்வுகள், பலவீனமான கட்டிடங்களையும் அதிர்வுறச் செய்து, அவை இடிந்து விழும் அபாயத்தையும் ஏற்படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
கோயில் வழிபாடு: தியானம் செய்ய நேரமில்லாதவர்களுக்கு ஒரு மாற்று வழி!
DJ at wedding

இந்த தொடர் மரணங்களைத் தவிர்க்க, டிஜே சத்தத்தின் ஒலி அளவை குறைப்பது அவசியம் என சுகாதாரத் துறை வலியுறுத்துகிறது. பாதுகாப்பான காது செருகிகளை பயன்படுத்துவது, 100 டெசிபலுக்கு மேல் உள்ள சத்தத்திலிருந்து விலகி இருப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், இது ஒரு சமூக பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com