சத்குருவுக்கு ஏன் அறுவை சிகிச்சை... மருத்துவர் கொடுத்த விளக்கம்!

Sadhguru
Sadhguru

சத்குருவுக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ள என்ன காரணம் என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

கோவை, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தை நடத்தி வருபவர்தான் சத்குரு. சமீபத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் கூட பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். கடந்த நான்கு வாரங்களாகவே அவருக்கு தலைவலி இருந்து வந்த நிலையில், கடந்த 17ம் தேதி தலைவலி உச்சத்தை அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உடனடியாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைப் பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து சத்குருவுக்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சத்குருவுக்கு சிகிச்சை அளித்த நரம்பியல் நிபுணர், நாங்கள் அவரிடமே கிண்டலாக ”நாங்கள் எங்களால் முடிந்த மருத்துவ உதவிகளை செய்தோம் ஆனால் நீங்களே உங்களை சரி செய்துகொள்கிறீர்கள்” என்று கூறினோம். ஏனெனில் நாங்கள் எதிர்பார்த்ததை விடவே அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இப்போது ரொம்பவே நலமாக உள்ளார். அவருடைய மூளை, உடல் மற்றும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளும் சீராக செயல்பட்டு முன்னேறி வருகிறது” என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
"கடவுளுக்கே இந்த நிலையா" சத்குரு உடல்நிலை குறித்து நடிகை கங்கனா வருத்தம்!
Sadhguru

மேலும், 17ஆம் தேதியன்று அவருக்கு நரம்பு செயல்பாடுகள் மோசமானதாக இருந்தது. அதோடு அவருடைய வலது கால் மிகவும் பலவீனமாக இருந்தது. கடுமையான தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகளையும் அவர் சந்தித்தார். பின் CT ஸ்கேன் செய்த பின் அதில் மூளை வீக்கம் அதிகமாக இருப்பது தெரிய வந்தது. அது அவருடைய உயிருக்கே ஆபத்தானதாக இருந்தது எனவும் தெரிவித்தார்.

உடனே வினித் சூரி தலைமையில் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடைய மூளையில் இருந்த இரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com