என்கிட்ட மோதாதே!திருப்பூர் கூட்டத்தில் பாட்டுப்பாடி வாக்கு சேகரித்த ஸ்டாலின்!

Stalin Tiruppur speech
Stalin sung songTwitter
Updated on

திருப்பூரில் தற்போது இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். தனது பேச்சை தொடங்கிய ஸ்டாலின் " எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா " என்று பாடத் தொடங்கினார். நான் தற்போது பாட்டை மாற்றிப் பாடுகிறேன் என்று கூறி " எங்கிட்ட மோதாதே இது பெரியாரின் தமிழ்நாடடா , வம்புக்கு இழுக்காதே இது அண்ணாவின் கோட்டையடா ! இனி தப்பாட்டம் என்னிடம் ஆடாதே, அப்புறமா குட்டுப்பட்டு ஓடாதே! இதைத்தான் தற்போது தமிழகம் பாடிக் கொண்டிருக்கிறது என்றார்.

நாம் பறக்க விட்ட கருப்பு கொடி, பாஜக பறக்க விட நினைத்த காவி கொடியை வீழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் பற்றவைக்கப்பட்ட தீ நாடு முழுக்க பரவியது. அந்த வெப்பம் பாராளுமன்றத்தில் அவர்கள் தீட்டிய சதித்திட்டத்தை எரித்து சாம்பலாக்கியது. தமிழ்நாட்டின் முக்கிய காலத்தில் அதிமுகவினர் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு சிறப்பாக செய்யும். அமித் ஷாவே கூறிவிட்டார் என்று கூறினார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக போன்ற நாணயமற்ற ஒரு கட்சியை உலகில் பார்க்க முடியாது என்றும் ஸ்டாலின் பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com